சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் திருவிழா
Tags :
ஆலய நிகழ்வுகள்
அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் திருவிழா**
Tags :
ஆலய நிகழ்வுகள்
டோட்முண்ட்ஜெர்மனி சிவன் கோவில்: தேர்த்விழா
ஞாயிற்றுக்கிழமை..21.07.2013 மானகரத் தந்தையின் ஊதவியாளரினால் கொடி அசைத்து தொடங்கிய தேர்பவனி எதிர் பாராத அளவு பத்தர் கூட்டம் நிறைந்து மிக விவிமர்சையாக பால் செம்பு கற்பூரச் சட்டி ஏந்தி காவடிகள் ஆடிவர கூடி வந்த சிவன் தேர் விழா அந்த பகுதியில் வாழும் மக்களையும் சிற்றுந்து பேரூந்தில் வந்தோர்களை நின்று பார்த்து செல்லும் அளவுக்கு அழகு பவனியாய் தேரினில் வீதி உலா வந்த சிவன் பத்தர்களுக்கு ஆனந்தத்தையும் கொடுத்துள்ளார் எனலாம்.இறைவனின் தரிசனம் மன அமைதியைத் தந்ததாய் வந்தவர்கள் கூறிச்சென்றதைக் கேட்கக் கூடியதாய் இருந்தது
{காணொளிகள்}
Tags :
ஆலய நிகழ்வுகள்
இத்திருத்தலங்களுக்கு வாருங்கள்! திருமணம் கைகூடும்!!!
சமேதரராய் ஆசி வழங்கியபின் முளைப் பாலிகை எடுத்துச் செல் வர். இக்கோலத்தை திருமழிசை ஒத்தாண் டேஸ்வரர் ஆலயம், திரு முல்லைவாயில் மாசிலா மணீஸ்வரர் ஆலயங்களில் காண லாம். இப்படிப்பட்ட சிவபார்வதி திரும ணக் கோலங்களில் ஏதே னும் ஒன் றை பங்குனி உத்திரம் தினத்தன்று தரிசித்தாலும், ஆலயங்களில் திரு மண வைபவம் நடைபெறும் போது அதில் கலந்து கொண்டாலும் மங்களகரமான மண வாழ்வு பெற்று மகிழ்வுடன் வாழ லாம். கன்னிகள் விரத மிருந்து இப்படி தரிசித்தால் விரை வில் திருமணம் கூடுவதுடன், நல்ல கணவன் கிடைத்து இனிமை யான வாழ்வும் அமையும்
Tags :
ஆன்மிகமும் ஜோதிடமும்
அம்மா அபிராமி அந்தாதி""
அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய
மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலா மயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண் கொடியே.
விளக்கம்:
அம்மா அபிராமி! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே!என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே!உயர்ந்த மலையிலே உதித்தவளே! வெண்மையான சங்கு வளையல்களை அணியும் செம்மையான கரங்களையுடையவளே! சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே! என்றும் பக்தர்களையுடையவளே! பொன் நிறமுடையவளே! கருநிறமுடைய நீலியே! சிவந்த மேனியாகவும் விளங்குகின்றவளே!
Tags :
ஆன்மிகம்
தொல்லை நீக்கியார்.. சங்கடநாஸன கணபதி.
இளஞ்சூரியனைப் போன்ற நிறத்தோடு நீல நிற ஆடையணிந்து கொண்டு செந்தாமரையில் வீற்றிருப்பார். வலது கரங்களில் அங்குசமும் வரதமும் விளங்கும். இடது மேல் கரத்தில் பாசம் இருக்கும். தொடையின் மீது தன்னுடைய சக்தியை அமர வைத்திருப்பார். செம்மை நிறமுடைய அந்த சக்தி நீல நிற உடையும் ஆபரணங்களும் அணிந்து நீல மலரை ஏந்தியிருப்பார்கள். சங்கடநாஸனார் தமது இடது கீழ்க் கரத்தால் அந்த சக்தியை அணைத்தவாறு பாயசப் பாத்திரத்தைத் தாங்கியிருப்பார்.
'சங்கடஹர கணபதி' என்றும் 'சங்கடநாஸன கணபதி' என்றும் பெயர் பெற்ற இவரைத் தமிழில் நாம் 'தொல்லை நீக்கியார்' என்று அழைக்கிறோம்.
விநாயகரின் தத்துவம் விநாயகர் அட்டகத்தின்மூலம் இங்கு விளக்கப்படுகிறது. "காரியசித்தி மாலை" என்றும் இது அழைக்கப்படுகிறது.
காரியசித்தி மாலை
8.
பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கு அரிய
பரன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும்
அவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம்
அறிவான
தேசன் எவன் அக் கணபதியத் திகழச் சரணம்
அடைகின்றோம்.
நூற்பயன்
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினம் மும்மைச்
சந்திகளில் தோத்திரம் செயினும் சகல கரும சித்தி பெறும்
சிந்தை மகிழச் சுபம் பெறும் எண் தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப் பந்தம் அகல ஓர் எண்கால் படிக்கில் அட்ட சித்தி உறும்.
திங்கள் இரண்டு தினந்தோறும் திகழ ஒருபான் முறை ஓதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத்தொரு முறைமை
பொங்கும் உழுவலால் கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக் கல்வி
துங்க வெறுக்கை முதற் பலவும் தோன்றும் எனச் செப்பினர் மறைந்தார்
Tags :
ஆன்மிகம்
தேங்காய் உடைப்பதன் தத்துவம்""
கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.
தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.
உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.
இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.
தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.
உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.
இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.
Tags :
ஆன்மிகமும் ஜோதிடமும்
அதிசனின் பிறந்தநாள் வாழ்த்து
ஜெர்மனியில் வசிக்கும்
திரு .சந்திரன் தம்பதிகளின் புதல்வன்அதிர்சனின் பதின் எட்டாவது பிறந்த நாள் இன்று..03.07.2013. இவரை அன்பு .அப்பா,அம்மா அண்ணா தம்பி ,மற்றும் சகோதர சகோதரிகள் அம்மம்மா , பெரியப்பா ,பெரியம்மா
,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் , நண்பர்கள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன் ,பல்கலைகளும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்
Tags :
வாழ்த்துக்கள்
அபிசனின் பிறந்தநாள் வாழ்த்து
கனடா ரொரண்டோ வில் வசிக்கும் அபிசனின் பிறந்த நாள் இன்று.01.07.2013 இவரை அப்பா, அம்மா ,சகோதரர்கள் ,அப்பப்பா,அப்பம்மா,அம்மப்பா மற்றும் பெரியப்பா ,பெரியம்மா ,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் , வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையமும்,பல்கலைகளும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம்வாழ்கவென வாழ்த்துகின்றோம்
Tags :
வாழ்த்துக்கள்
Powered by Blogger.