விநாயகருக்கு உகந்த வெள்ளிக்கிழமை விரதம்

வைகாசி மாதம் சுக்கில பட்சத்து முதல் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தவறாமல் விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். விரதம் அன்று பகல் முழுவதும் உணவு உண்ணாமல் இருந்து மாலையில் மறுபடி நீராடி விநாயகரை வழிபட்டு ஏதாவது பழங்களை சாப்பிடலாம்.
இவ்விரதத்தை மேற்கொள்பவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் 5 மணிக்கு முன் புனித நதியில் நீராடி, அல்லது புனித நதியின் பெயரை மனதால் நினைத்து கலச ஸ்தாபனம் செய்து, கும்பத்தில் விநாயகரைப் பூசித்து, கரும்பு, விளாம்பழம், சர்க்கரை, பலாப்பழம் ஆகியவற்றை நிவேதனம் செய்து கவசம் படிப்பதும், மகேஸ்வர பூஜை செய்து அடியார்களுடனிருந்து உண்ணுதல் வேண்டும். இதனால் நிதி வசதி பெருகும். குபேரன் வெள்ளிக்கிழமை விரதம் இருந்துதான் பதுமநிதி, சங்கநிதி என்ற உயர்வான நிதிகளைப் பெற்றார்.   

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .,

 

செல்வச்சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றம்

 வரலாற்றுச் சிறப்புமிக்க அன்னதானக் கந்தன் என அழைக்கப்படும் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த கொடியேற்ற நிகழ்வு திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் அடியவர்களின் அரோகரா கோஷத்தின் மத்தியில் இடம்பெற்றது.
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சந்நிதியானைச் தரிசிக்க திரண்டிருந்தனர். அடியார்களின் தூக்குக் காவடி மற்றும் கற்பூரச் சட்டி எடுத்தும் தமது நேர்த்திகளை நிறைவு செய்தனர்.
சுவாமி உள்வீதி வெளிவீதி உலா வரும் நிகழ்வும் இடம்பெற்றது.

 இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .

 

மனோன் மணி அம்பாள் ஆலய மஹா கும்பாவிஷேகம் 2014


சிறுப்பிட்டி ஊரின் மையப் பகுதியில் வீற்றிருந்து சகல உயிர்களும்  அருள்பாலிக்கும் கருணா கடாட்சியாம் மனோன் மணி அம்பாள் ஆலய

மஹா கும்பாவிஷேகம் 2014 கிருயைகள் 29.08.2014 வெள்ளிக்கிழமை ஆரம்பம் ஆக உள்ளது என்பதினை ஊர் வாழ் உறவுகளுக்கு அறியத்தருவதில் மிக மகிழ்ச்சி கொள்கின்றது .

தொடர்ந்து எண்ணெய்காப்பு (30.08.2014) சனிக்கழமையும் மஹா கும்பாவிஷேகம்(31.08.2014) ஞாயிற்றுக்கிழமை காலை (9)மணிக்கு ஆரம்பமாகும்.
அத்தோடு திருவிழா 04.09.2014 ஆரம்பம் ஆக உள்ளது 13.09. 2014 தேர்த்திருவிழா 14.09.2014 தீர்த்தத்திருவிழா என ஆலய த்திருவிழா சிறப்புற அடிவயர்கள் அம்மனை தர்சிக்க வரும்வண்ணம் அழைக்கிறார்கள் ஆலய நிர்வாகத்தினர் .

சிறுப்பிட்டி மண்ணை ஆட்ச்சிசெய்யும் தேவி
தீயவினை அகற்றி நிற்பவள் மனோன் மணி தேவி
காப்பாள் ஆயிரம் கண்கொண்டு
தீர்பாள் பிணிகளை காத்த நின்று

வணங்கிட அவள் பாதம்
நெருங்காது வினை ஓடும்
கருமாரி மகமாயி
இவள் காக்க நாம்வாழ்வோம்
இனிதான உறவோடு..

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .

இன்று காலை நடந்த நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்!


 அராகரா முழக்கம் வானைப் பிளக்க வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. நல்லைக் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் 25 ஆவது திருவிழாவான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது நிழல் படங்கள்.

 இணைப்பு  இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

nalk33 nalk35 nalk36 nalk37

நல்லூர் கந்தன் ஆலய இரதோற்சவப்பெருவிழா காட்சி

 சிறீலங்கா விமானப்படையினர் நல்லூர் கந்தன் ஆலய இரதோற்சவப்பெருவிழாவில் உலங்குவானூர்திகள் மூலம் கோபுர கலசத்துக்கும், இரதத்துக்கும் மலர்தூவி வந்தனர். இரதத்தில் எழுந்தருளி கந்தன் உலாவரும் காட்சியில் பக்தர்கள் இலயித்து, இறை சிந்தனையில் இரண்டறக்கலக்கும் வேளையில், பலாலி விமான படைத்தளத்திலிருந்து எழுந்து, தலைக்கு மேலே வந்து தாழப்பறந்து, வானை அதிர வைத்துப்போகும் சிறீலங்கா விமானப்படையினரின் உலங்குவானூர்திகளின் இரைச்சல் மற்றும் உருப்படியினைக்கண்டு, பக்தி போய் பக்தர்களுக்கு பயம் பற்றிக்கொள்ளும்.
   
உலங்குவானூர்திகளை கண்டதும் சிறுவர்கள் இளையோர்கள் பெரியோர்கள் வேறுபாடின்றி அனைவருக்கும் போர்க்கால நினைவுகள் நிழலாடத்தொடங்கி விடுவதும்,
பிள்ளைகள் தம் பெற்றோரிடம், "அம்மா! இது தானே எங்கட அண்ணாவை குண்டு போட்டுக்கொன்றது. அப்பா! இதுதானே எங்கட அக்காவை குண்டு வீசிக்கொன்றது." என்று கேட்டுக்கலங்குவதும்,
"சித்தி! இதின்ட குண்டு வீச்சிலத்தானே எங்கட அப்பாவும் தங்கச்சியும் வயிறு கிழிஞ்சி செத்தவையினம். மாமா! இது போட்ட குண்டுலத்தானே எங்கட அம்மாவும், தம்பியவையும், அம்மம்மாவும் கை கால் வேறவையாவும், உடம்பு வேறவையாயும் சிதறிக்கிடந்தவையினம்� என்று சொல்லி அழுது துடிப்பதுவும்,
ஜீரணிக்க முடியாத தாங்கொனா துன்பியல் நிகழ்ச்சியாகவே இருந்து வந்தது.
தேவஸ்தான சபையினரின் அதிரடி நடவடிக்கை! கந்தனுக்கும் விடுதலை� கலக்கத்துக்கும் விடுதலை...
கடந்த வருடங்களைப்போலல்லாது இம்முறை, இரதோற்சவப்பெருவிழாவில் கோபுர கலசத்துக்கும், இரதத்துக்கும் உலங்குவானூர்திகள் மூலம் மலர்தூவ, நல்லூர் கந்தன் தேவஸ்தானசபையால் விமானப்படையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தன் தேவஸ்தானசபையினரின் இந்த தடை உத்தரவு பிறப்பிப்பு, இரத்தம் தசை, பிணம் மரணம், ஓலம் என்று கடந்த கால போர்ச்சூழல் அவலக்காட்சிகள் நினைவில் வந்து, முட்டி மோதி உயிர்வலியைக்கூட்டாமல், பக்தி பரவசத்தில் மனம் ஒப்பி போவதற்கு இம்முறை பக்தர்களுக்கு பெரும் பேறளித்துள்ளதுடன், இரத்தக்கறை தோய்ந்த கைகளால் ஆலயத்தின் புனிதத்தன்மை கெட்டுப்போவதையும் தடுத்து நிறுத்தியுள்ளது.
 
 
  

நல்லைக் கந்தனின் 18ம் திருவிழாக் காட்சிகள்!

   வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் 18ஆம் திருவிழாவான நேற்றுமாலை முருகப்பெருமான் வள்ளி - தெய்வயானையுடன் வெளி வீதியுலா வந்த காட்சிகள்.

இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு

 

பிறந்தநாள் வாழ்த்து :ஜெகதாசன் செந்துஜா,18.08..14


  பிறந்தநாள்  நாள் இன்று  18.08. 2014. ஜெகதாசன் செந்துஜா பிறந்தநாள் பிறந்த நாளை மிகவும்சிறப்பாக  தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
 இவரை  அன்பு கணவர் அம்மா  மாமா குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி  குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள்  மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.இவர்களுடன் இணைந்து.  இந்தஇணையங்களும் ,இறைஅருள் பெற்று சகல செல்வங்களும்பெற்று பல்லாண்டுகாலம் நீடுழி   சீரும் சிறப்புடன்  வாழ்க வாழ்க வென  வாழ்த்துகின்றோம் ,
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

நடைபெற்ற சூரிச் முருகன் ஆலாய தீர்த்தோற்சவசம்(நிழல் படங்கள்)

மிகவும் சிறப்பாகவும் நடைபெற்ற.17.08.14. சுவிற்ஸர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் அருள் பாலித்து அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனிய சுவாமி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவச திருவிழா பெரும் பக்தர்கள் வெள்ளத்துடன் மிகவும் சிறப்பாகவும்,பக்தி மயத்துடனும் நடைபெற்றது.எம்பெருமான் எளுந்தருளி ஆலயத்தின் முன் உள்ள ஆற்றில் நீராடி அபிசேக ஆராதனைகளுடன் வீதி உலாவந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார். முருகன் அடியவர்கள் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டு எம்பெருமான் முருகன் அருளை பெற்று சிறப்பித்து கொண்டனர் .
இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு
 

சூரிச் முருகன் ஆலாய தேர்திருவிழா (நிழல் படங்கள் இணைப்பு )






இன்று .16.08.14.மிகவும்  சிறப்புடன் நடைபெற்ற சுவிற்ஸர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் அருள் பாலித்து அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனிய சுவாமி அலய வருடாந்த மகேற்சுவ தேர்திருவிழா  நடைபெற்றது.

கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரிலும் எம்பெருமான் எழுந்தருளி தேர் ஏறி பவனிவர. அடியவர்கள் புடை சூழ  தமது நேர்த்திகடன்  நேர்ந்தவர்கள் எம்பெருமான் முன்னும் பின்னும் தம் நேர்த்திக்கடன்களை  நிறைவேற்ற  காவடிகள்.  கற்ப்பூரச்சட்டிகள், எடுத்துச்  சூழவர எம்பெருமான்

எழுந்தருளி வீதி உலாவந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

இத்திருவிழாவில் பெருந்திரலான சுவிற்ஸர்லாந்தின் பல பாகங்களில்  இருந்தும் பல்லாயிரகனக்கான   முருகன் அடியவர்கள் கலந்துகொண்டு எம்பெருமான்  முருகன் அருளை பெற்று சிறப்பித்து கொண்டனர்.








இங்கு அழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு

murukan8

ஆன்மிகம் என்றால் என்ன? பகுதி 2

    ஆன்மிக தேடலில் மூழ்கி முத்தெடுக்கத் துடிக்கும் எமது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உங்கள் சக பயணியான இந்த ஆன்மிக நண்பனின் வாழ்த்துக்கள் . மிகவும் வேகமாக வளர்ந்து (!) வரும் அறிவியலின் வளர்ச்சி காரணமாக இன்று பழமைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆன்மிகம்
 
 என்பது வெறுமனே கோவில்களுக்கு அல்லது ஜீவ சமாதிகளுக்கு செல்வது , பத்து ரூபாய் செலவு செய்து பலகோடி ரூபாய்க்கு அதிபதியாக வேண்டுமென இறைவனிடம் அல்லது சித்தரிடம் (சிலையிடம் !!) கோரிக்கை வைப்பது என்று மிகவும் வெளிமுகமாக , சுற்றுலா சென்று வருவதைப் போல் தான் ஆன்மிகம் உள்ளது . இன்னும் சிலரோ தாங்கள் ஆன்மிக வாதிகள் என்று உலகுக்கு அறிவிக்கும்
 
வண்ணம் புற அடையாளங்களை செய்து புகழ் மற்றும் பணம் கிடைக்க மிக நல்ல வழியாக ஆன்மிகத்தை வளர்க்கின்றனர்(!!.) தாங்கள் கோவில் கோவிலாக செல்வதையும் , அந்த கோவிலில் எனக்கு இந்த மாதிரியான அதிர்வுகள் தோன்றின, இந்த கோவிலில் எனக்கு அந்த மாதிரியான அதிர்வுகள் தோன்றின , எனக்கு இறைவனும் இறைதன்மையும் புரிபட்டு விட்டது , என்று சிலர் கூசாமல் பிறர் தம்மை புகழ வேண்டும், மரியாதை செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர் . சரி .. உண்மையான ஆன்மிகம் என்பது என்ன ...?
 

மஞ்சத்தில் உலா வந்த நல்லைக் கந்தன்!

10ம் திருவிழா காட்சிகள் 
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் 10ஆம் நாள் திருவிழாவான நேற்றுமாலை, முருகப் பெருமான், வள்ளி -தெய்வயானையுடன் மஞ்சத்தில் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 
 
                                      
 
 

யேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய தேர் 03.08.2014

யேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய தேர் 03.08.2014 சிறப்பாக நடந்தேறியது.

ஆலயத்தின் வளர்ச்சி என்பது நிர்வாகம் அத்தோடு ஆலயத்தின் குருக்களிடமேயும் தங்கி உள்ளது . அந்தச் சிறப்புக்கள் எல்லாவற்றையும் ஒன்று கூட்டி ஐெயந்தி நாதசர்மா அவர்கள் சிரித்த முகத்தார் தெய்வம் குடிகொண்ட நெஞ்சுடையார் மலர்முகத்தார் இவர்பணியால் அம்மன் மேல் கொண்டபக்தியால் ஆலயத்துக்கு வருடா வருடம் மக்கள் தொகை கூடிநிற்க அவர் பிள்ளைகள் தெய்வத்தை அலங்கரிக்க ஆதரிக்க ஆலய நிர்வாகம் இணைந்த துர்க்கை அடியார்கள் துணையால் இத்தனை சிறப்புற்ற அம்மனின் தேர் வீதி உலா கண்காட்சி சிறப்புற்றுள்ளது .

அம்மனின் தேரிலே அவள்பணிசெய்பக்தர் ஐெயந்தி நாதசர்மா அவள் அடியில் சரண் புகுந்தார் ஐெயந்தி நாதசர்மா

சிரித்து மகிழ்ந்த முகத்துடனே

அவள் சிறப்புக்காக இவர் உழைத்து

சிந்தையில் அவள் நினைவு

செல்லப்பிள்ளை இவர் அவள்

அவர் செய்யும் சேவையதனால்
அன்னை மகிழ்ந்து புன்சிரிப்பில்
 கருணையுள்ள முகத்தழகன்
 க‌டமையவள் துதி அயன்
 பெருமை அற்ற அவள் பக்தன்
 பேரின்பத் தால்பக்தன்

புலம் அமர்ந்த துர்க்கை அம்மன்
 புதுமை கொள்ளும் சுவெற்றா அம்மன்
 கருணைவேண்டி செல்லும்பக்தர்
 கனிவு கொள்ளும் ஸ்ரீ கனகதுர்க்கா
 வேண்டிட வேண்டிட வரம் அருள்வாள்
 வேதனை ‌ தீர்த்து இங்கு அவள் அருள்வாள்
 
இங்குஅழுத்தவும் தேரின் நிழல்படங்களை இங்கே இணைக்கிறோம்

ஏழாம் திருவிழா காராம்பசு வாகனத்தில் வலம் வந்த நல்லைக் கந்தன்!


nalk4
   வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில், வருடாந்த மஹோற்சவத்தின், ஏழாம் திருவிழா, இன்று இடம்பெற்றது. இன்று மாலை முருகப்பெருமான் காராம்பசு வாகனத்தில் எழுந்தருளி, வெளிவிதீயுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏழாம் திருவிழாக் காட்சிகள்.
இங்குஅழுத்தவும் புகைப்படங்கள் மற்றைய செய்திகள்

நல்லவன் எனப் பெயரெடு!


pillaiyar
மனிதன் எந்த நிலையில் எந்த இடத்தில் இருந்தாலும் இறைவனின் கல்யாண குணங்களைக் கேட்பதை, தன் வாழ் நாளின் லட்சியமாகக் கொள்ள வேண்டும். * சத்தியம் என்றால் வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் கூறுவதே சத்தியம். அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். * முதலில் வேண்டியது வெளி அடக்கம். வெளி அடக்கமே மனதில் உள்அடக்கத்தை உண்டு பண்ணும். மனம் அடங்கும் போது ஞானம் தலைகாட்டும். * எடுத்துச் சொல்வதைவிட, எடுத்துக்காட்டாக இருப்பது சிறப்பு. பார்த்த அளவிலேயே நல்ல மனிதர் என்று கூறும்படியாக நம் வாழ்க்கை நடைமுறை இருக்க வேண்டும். * கோபத்தால் நமக்கு நாமே தீங்கு செய்து கொள்கிறோம். கோபம் என்பது நல்வழியிலிருந்து திசை திருப்பி நம்மை அழிவுப்பாதைக்கு அழைத்து சென்றுவிடும். * குடும்ப கடமைகளை விட்டு வெளியே வந்து சேவை செய்ய வேண்டியதில்லை, குடும்பத்தையும் பார்த்துக் கொண்டே சமூகசேவையும் சேர்த்து செய்வதே சரியானது. -காஞ்சிப்பெரியவர்
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

நல்லைக்கந்தன் முதலாம் நாள் திருவிழா - மாலை வீதியுலா

 வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் முதலாம் திருவிழாவில் வள்ளி தெய்வயானை சமேதராக, நேற்று மாலை 6.10 மணியளவில் முருகப் பெருமான் வெளி வீதியுலா வந்தார். பெருமளவு அடியவர்கள் நேற்று மாலைத் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
   
இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு
 

நல்லைக் கந்தன் இன்று காலை கொடியேற்றம்!

 ஆரம்பமாகிறது. 25 நாள் பெருந்திருவிழா  வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா, இன்று காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மகோற்சவத்தின் பத்தாவது நாளான இம்மாதம் 10ம் திகதி மாலை மஞ்ச உற்சவம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து சிறப்பு உற்சவங்களாக 16ம் திகதி மாலை அருணகிரிநாதர் உற்சவமும், 17ம் திகதி மாலை கார்த்திகைத் திருவிழாவும்.20ம் திகதி காலை சந்தான கோபாலர் உற்சவமும், அதே தினம் மாலை கைலாச வாகன உற்சவமும், 21ம் திகதி காலை கஜவல்லி முஹாவல்லி உற்சவமும், அதேதினம் மாலை வேல் விமான உற்சவமும் நடைபெறவுள்ளன.
வரும் 22ம் திகதி காலை மாம்பழத் திருவிழா எனப்படும் தண்டாயுதபாணி உற்சவமும், அதே தினம் மாலை ஒருமுகத் திருவிழாவும், 23ம் திகதி மாலை சப்பரத் திருவிழாவும் இடம்பெறவிருக்கின்றன. இம்மாதம் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு இரதோற்சவமும், 25ம் திகதி காலை 7.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் நடைபெறவிருக்கின்றன. தொடர்ந்து மறுநாள் 26ம் திகதி மாலை நிகழும் பூங்காவனத் திருவிழாவுடன் இவ்வருட மகோற்சவம் நிறைவு பெறுகிறது. மகோற்சவ காலத்தில் தினமும் மாலை 5.00 மணிக்கு முருகப் பெருமான் வெளிவீதியுலா இடம்பெறும்.உற்சவகாலத்தில், பக்தர்களுக்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு .


ஆடிப்பூரம் ஆடி மாத வழிபாடுகள்

 1. ஆடி பூரத்தன்று அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு பூஜைகள் முடிந்த பிறகு, அந்த வளையல்களை வாங்கி அணிந்து கொண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். 2. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது. 3. ஆடி பூரம் அன்று கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 4. சென்னை புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில் பெரிய பாளையம்மன் கோவிலில் தான் ஆடி திருவிழா மிக, மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
5. ஆடி பூரத்தன்று கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது. 6. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீவனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் இந்த கோவிலில் பிரமாண்ட தீ மிதி திருவிழா நடைபெறும். சுற்று வட்டாரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 7. ஆடி பூரத்தன்று காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.
 8. ஆடி பூரத்தன்று மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும். 9. ஆடி பூரத்தன்று முத்துமாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும். 10. ஆடி மாதம் என்றாலே மல்லிகை மணமும் கூடவே வரும். அம்மன் கோவில்களில் பூக்களால் அலங்கார பூஷிணியாக அம்மன் அமர்ந்திருப்பாள். 11. ஆடி பூரத்தன்று குற்றால ஈசனை வணங்கி அருவியில் குளித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை
 .
  மற்றைய செய்திகள்
 
Powered by Blogger.