சித்தி விநாயகர் ஆலய பூங்காவனத் திருவிழா 30..08.15

ஈழமணி திருநாட்டிலே வடபால் அமைந்திருக்கும் யாழ் குடா நாட்டிலே அமைந்திருக்கும் சுதுமலை பதியினிலே
 எழுந்தருளி அருள் பலித்து கொண்டிருக்கும் 
 எம்பெருமான்  சித்தி விநாயகர் ஆலய பூங்காவனம் 30.08.2015. இனிதே நிறை வடைந்தது அதன்போது பதிவு செய்யப்பட்ட  
நிழல் படங்கள் இணைப்பு ...













சித்தி விநாயகர் ஆலய தீர்த்ததிருவிழா 29.08.15

சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த உற்சபம் (29.08.2015 )
யாழ் சுதுமலை சித்தி விநாயகர் ஆலய தீர்த்ததிருவிழா  மிக சிறப்பாக ..இன்றைய தினம் விநாயகப்பெருமானின் தீர்த்ததிருவிழா இடம் பெற்று உள்ளது.  .(29.08.2015)
நிழல்படங்கள் இணைப்பு..  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>















பொன்னாலை நாதனின் தி ருத்தேர் புனரமைக்கப்பட்டு தேர் வெள்ளோட்டம்

காணும் காட்சி.
சிந்தையை சீராக்கும் எம் சீராளன்
ஸ்ரீஸ்ரீனிவாசன் சிங்காரபவனி வர
சித்திரத் தேர் செய்தோம்
அன்பர் எல்லாம் சூழந்து வர
அடியவர்கள் பாடிவர
காவடிகள் ஆடிவர 
கருடனும் தன் நிழல் தந்து பறந்துவர
பொன்பதியின் கூர்ம நாதன்
ஸ்ரீஸ்ரீனிவாசன் கலியுகவரதன்
எம் சங்கடம் நீக்க சித்திரமாய்
பவனிவர இருக்கும் காட்சி காகாண
விரைந்து வாரீர்..
வைகுந்தம் நாம் அறியோம்
ஸ்வர்க்கமும் நாமறியோம்
மறுவுலகில் தானே இவை கிட்டும்.?
ஸ்வர்ணபுரி வந்திட்டால்..
இம்மையிலும் வைகுந்தம் ஸ்வர்க்கம்
நீவிர் காண்பீர்!!!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>










 

செல்வச் சந்நிதி முருகனின் தேர்த்திருவிழா 28.08.15


 யாழ் செல்வச் சந்நிதி முருகனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று 28.08.2015வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகின்றது. நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
அடியவர்களால் அன்னதானக் கந்தன் என்று அழைக்கப்படும்ஆலயத்தின் திருவிழாவிற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வெள்ளம் அலைமோதும் என்பதனால் ஆலயச் சூழலில் நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, அச்சுவேலி ஆகிய பொலிஸ் 
நிலையங்களின் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சாரணர்கள் முதலுதவிப் படைப்பிரிவனர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூர இடங்களில் இருந்த வரும் அடியார்களின் நலன் கருதி ஆலயச்சூழலில் தாக சாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுப்புறத்தில் உள்ள மடங்களில் அன்னதானம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆலயத்திற்கு வரும் அடியார்களின் போக்குவரத்து வசதி கருதி பருத்தித்துறை டிப்போவினால் 30 மேற்பட்ட 
பஸ் வண்டிகள் சேவையில் 
ஈடுபடுத்டதப்படவள்ளதெனவும், சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வட்டுக் கோட்டை போன்ற பகுதிகளுக்கான பயணிகள் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்வண்டிகளும் ஆலயத்திற்குச் சென்று தமது சேவையைத் தொடரும் போக்குவரத்துச் சபையினர் 
கூறியுள்ளனர்.
நேற்று இரவு சப்பறத் திருவிழா வெகு விமரிசையாக இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான பறவைக் காவடிகளும், இழுவைக் காவடிகளும் நேற்று நள்ளிரவு வரை ஆலயத்தை நோக்கி வந்ததனைக் காணக் கூடியதாக இருந்தது

இங்குஅழுத்தவும் தெல்லிப்பழை துர்க்கையம்மன் சப்பறத் திருவிழாவின் நிழல் படங்கள் இணைப்பு >>>

இங்குஅழுத்தவும் சந்நிதி முருகன் தேர்புகை படங்கள் காணொளிகள் இணைப்பு >>>









சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா 28.08.15

யாழ் சுதுமலை சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா  மிக சிறப்பாக ..இன்றைய தினம் விநாயகப்பெருமானின் தேர்த்திருவிழா இடம் பெற உள்ளது..(28.08.2015)
காலை பூஜை காலை 6.00 மணி 
அபிசேகம்,பூஜை காலை 8.00 மணி 
வசந்தமண்டப பூஜை காலை 9.00 மணி 
தேர் பவனி பகல் 10.00 மணி
பச்சை சார்த்தல் பகல் 11.00 மணி 
பிராயசித்த அபிசேகம் மதியம் 12.00 மணி
(10 தினங்களும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது )
நிழல்  படங்கள்   இணைப்பு 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>








Powered by Blogger.