நல்லூர் கந்தசாமி தேர்த்திருவிழா சிறப்புடன்நடைபெற்றது 31.08.16

வரவாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா.31.08.2016. இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. ஆலங்காரக் கந்தன் தேரில் பவனிவர இலட்சோப இலட்சம் பக்தர்கள் புடைசூழ்ந்து வடமிளுத்தனர். இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய தேர்த் திருவிழாவில் பக்தர் வெள்ளம் எழுப்பிய “அரோகார” சத்தம் 
வானைப் பிளந்தது.
இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்த பக்தர்கள் வெள்ளாமாக காட்சியளித்தனர். அத்துடன் இலங்கை விமானப் படையினர் நல்லூர் கந்தனுக்கு மலர் சொரிந்து வானை வட்டமிட்ட காட்சி மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>







நல்லூர்கந்தன் மாம்பழத் திருவிழாசிறப்பாக இடம்பெற்றது

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான மாம்பழ திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று (திங்கட்கிழமை) சிறப்பாக இடம்பெற்றதுஇன்று காலை 6.45 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, தொடர்ந்து முருகப்பெருமானும் பிள்ளையாரும் வெளி வீதி உலா வந்து மாம்பழ திருவிழா
 இடம்பெற்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி கிரகம் மற்றய கிரகங்களையும்விட பலமான சக்தி பெற்றது!

மற்ற கிரகங்களையும்விட சனி கிரகம் பலமான- சக்தி பெற்ற கிரகம் மட்டுமல்ல; ஒரு ராசியில் அதிக காலம்- இரண்டரை வருடம் தங்கிப் பலன் செய்யும் கிரகமுமாகும். அதனால் அவருக்கு மந்தன் என்றும் முடவன் என்றும் பல பெயர்கள் உண்டு.
ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிளையும் (ராசி மண்டலத்தை) ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும். அந்த முப்பது ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும், நாட்டிலும், தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு
 மாற்றம் ஏற்படுவது
 இயல்பு. அதனால்தான் முப்பது வருடத்துக்குமேல் சேர்ந்தாற்போல் யோகத்திலே திளைத்தவர்களும் இல்லை; கஷ்டத்திலேயே இளைத்தவர்களும் இல்லை என்பார்கள். சனீஸ்வரனைப்போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பதும் சோதிடப் பழமொழி.
ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டகச்சனி என்பன சனீஸ்வரனின் சஞ்சாரத்தினால் (கோசரநிலை) ஏற்படுவனவாகும். சனி மகா தெசை பிறப்பில் இருந்து கணிக்கப்பெறுவதாகும்.
அவரவர் ராசிசக்கரத்தில் (சந்திரன் நிற்கும் இடம் ”ராசி” எனப்படும். அதற்கு) 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனியின் முதல் கட்டம் ஆரம்பமாகின்றது. அங்கு இரண்டரை வருடம் சஞ்சரிக்கும் சனியை ”விரயச் சனி” எனவும். அடுத்து ஜென்ம ராசியில்
 இரண்டரை வருடம் 2-ஆம் கட்டமாக சஞ்சரிக்கும் சனியை ”ஜென்மச் சனி” என அழைப்பர். அதன் பின் ஜென்ம ராசிக்கு 2-ஆமிடத்தில் சனி சஞ்சரிக்கும் இரண்டரை வருட மூன்றாம் கட்டச் சனியை ”பாதச் சனி” என்றும் குடும்பச் சனி, வாக்குச் சனி எனவும் அழைப்பர். இப்படி மூன்று கட்டமாக வரும் சனியின் மொத்த காலம்தான் ஏழரைச் சனியின் 
காலம் எனப்படும்.
ஒருவருடை வாழ்நாளில் சிறு வயதில் வரும் முதல் சுற்றை (7.5 ஆண்டு) ”மங்கு சனி” என்றும், வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை (7.5 ஆண்டு) ”பொங்கு சனி” என்றும், கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை (7.5 ஆண்டு) ”மாரகச் சனி” அல்லது ”மரணச் சனி” என்றும் அழைப்பர்.
இவற்றை விட அவரவர் ராசியில் இருந்து எட்டாவது இராசயில் சனீஸ்வரன் கோசரமாக சஞ்சரிக்கும் இரண்டரை வருட காலம் ”அட்டமத்து சனி” என்றும்; ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கும் இரண்டரை வருட காலத்தை ”கண்டச்சனி” என்றும்; நாலாம் ராசியில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் இரண்டரை வருட காலம் அர்த்தாஷ்டகச்சனி (அரை அட்டமச் சனி) என்றும் அழைக்கப்பெறும். இக் காலங்களும் சோதனை, வேதனை மிக்கதாகவே 
அமையும்
பிறந்ததிலிருந்து முப்பது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் தெரியும். முதல் சுற்று முடக்கி முயற்சியை தூண்டும். ‘படிப்பில் கவனம் செலுத்தவில்லை, காதல், கவன சிதறல், உறவினர்கள் மரணம், வேலையில்லா திண்டாட்டம்’ என்பதுபோல பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள்
 வந்து நீங்கும்.
பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும். சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. Drop out from School கேசாகிவிடும். பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.. சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம். 
அவை விதிவிலக்கு.
கணவன் – மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். குடும்பத்திற்கு வழக்கமில்லாத உணவு வகைகளை குழந்தைகள் எடுத்துக் கொள்வார்கள். மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள். ஏழரை சனியில் பெறும் அனுபவங்களும், அவமானங்களும், காயங்களும், வடுக்களும் வாழ்க்கை முழுதும் மறக்காதபடி இருக்கும். ‘‘இரண்டு மார்க் அதிகமாக எடுத்திருந்தால் தலையெழுத்தே மாறியிருக்கும்.
இன்னும் கொஞ்சம் பொறுப்பா படிச்சுருக்கலாமே’’ என்று ரிசல்ட் வந்தபிறகு புலம்ப வைப்பார். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்.
2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வாங்கலாம்.
முப்பது வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர்.
பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல். இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவானம் போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால், கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு.
இந்த இரண்டாவது சுற்றின்போது சிலர், மிதமிஞ்சிய செல்வ வளத்தால் பிரச்னைகளை உருவாக்குவார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று செல்வாக்கை நிரூபிக்கத் துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று தன்னடக்கமற்ற மனோநிலையில்
 திரிவார்கள்.
அப்படி மாறிய அடுத்த நிமிடமே, ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார் சனி. பழைய நிலைக்கே கொண்டு செல்லத் திட்டமிடுவார். ஆகவே, கவனமாக இருங்கள். பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைத்தால் கொடுத்ததைப் பிடுங்க தயங்க மாட்டார். சனி பகவான் வந்தால்தான் நம் அறிவுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்வோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட், கேஸ் என்று போகக்
 கூடாது.
பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும், கறுப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். வசதி வரும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் 
தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டிப்பு வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால் பாதை மாறினால், அதலபாதாளம்தான். இன்னொரு விஷயம்… நம்பிக்கை துரோகம் செய்தவர்களை 
பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்கியம் பாதிக்கும். ஏழரை சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும், அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வஜென்மத் தொடர்பு என்பதாகவே எடுத்துக் 
கொள்ளுங்கள்.
சனி பகவானுக்கு சூரிய சந்திரர்கள் என்றாலே ஆகாது. ஏழரைச் சனி நடப்பில் இருக்கும் போது சூரிய திசையோ, சந்திர திசையோ நடக்குமானால் சனியின் கடுமை இன்னும் அதிகமாக இருக்கும். கவனமுடன்
 இருக்க வேண்டும்.

ராகு தசை நடக்கும் போதும் ஏழரைச் சனி நடைபெற்றால் சற்று மோசமான பலன்களே நடைபெறுகின்றன. துலாம் சனிக்கு உச்ச ராசியாகும். அதனால் பாதிப்பு அதிகம் தரமாட்டார் என்றாலும் ஜென்மத்தில் பகை வீட்டிலோ… கோளாறான இடத்திலோ இருந்தால் தன்னை மறந்து ஒரு பிடிபிடித்து விடுவார். ஒருவருடைய ஜாதகத்தில் சனி உச்சம் பெற்றுறிருந்தால் 71/2 சனி பாதிப்பு குறையும்.
ஒருவரது ஜாதகத்தில் சனி மகரம் அல்லது கும்பத்தில் ஆட்சி பெற்றாலும், 71/2 சனி கெடுதல் செய்யாது. ஜனன காலத்தில் ஜன்ம லக்னத்திற்கு 3, 6, 10, 11-ல் சனி அமர்ந்தாலும் 71/2 சனி கெடுதல் குறையும். மகரம் அல்லது கும்ப லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு சனியும் லக்னத்தில் இருந்தால் 71/2 சனியும் கெடுதல் குறையும், தவிர அவருக்கு சுகமான வாழ்வு கிட்டும். சனி உச்சம் பெற்று துலா ராசியில் இருந்தால் அது கேந்திரம் அல்லது
திரிகோணம் என்று இருந்தால் அவருக்கு 
கெடுதல் குறையும்
அவருடைய தொல்லைகளில் இருந்து தப்பிக்க
அந்த மூன்று ராசிகளிலும் அஷ்டவர்க்கப் பரல்கள் 30ற்குமேல் இருந்தால்,
அவருடைய தொல்லைகள் தடுக்கப்பெற்றுவிடும். அந்த மூன்று ராசிகள் என்றில்லை. அவற்றில் ஒன்றில் 30 பரல்கள் இருந்தால் கூட அந்தப் பகுதிக்கு உரிய இரண்டரை வருடங்கள் ஜாதகன் நிம்மதியாக
 இருக்கலாம்.
திருநள்ளாறு தலத்திலும், திருவாரூர் – திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு தலத்திலும் பேரருள் புரிகிறார். இந்த தலங்களுக்கு சென்று வாருங்கள். பிரச்னைகளெல்லாம் எப்படித் தீர்கிறது 
என்று பாருங்கள்.
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி மனமுருக வேண்டி
 வழிபடலாம்.
சனி பகவானை திருப்தி படுத்த மாற்றுத் திறனாளிகள், (குறிப்பாக பார்வை இழந்தவர்கள், நடக்க இயலாதவர்கள்) வயதானவர், ஆதரவற்றவர்களுக்கு உதவலாம்.
சனீஸ்வரனின் தாக்கத்தில் இருந்து தப்புவதற்கு ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.
பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப்
 போய்விடும்.
வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.
அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போட
வேண்டும்.
ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி – சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய 
வரப்ரசாதம் ஆகும்.
உடல், ஊனமுற்றவர்களுக்கு – காலணிகள், அன்ன தானம் – அளிப்பது , மிக நல்லது.
சனி வரலாறு
நவகிரகங்களில் முதன்மையான ஆதிகிரகம் சூரியன். துவஷ்டாவின் மகள் சஞ்ஞிகை என்பவள் (உஷா என்றும் ஒரு பெயர்) சூரியனை விரும்பித் திருமணம் செய்துகொண்டாள். வைவஸ்வதமநு, யமன் (மகன்கள்); யமுனை (மகள்) என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். இருந்தும் சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாமல் 
தவித்தாள்.
அதனால் சூரியனுக்குத் தெரியாமல் தன்னுடைய நிழலையே தன் மாதிரி பெண்ணாக்கி சூரியனுடன் குடும்பம் நடத்தும்படி கூறி விட்டுத் தன் தகப்பனார் வீட்டுக்குப் போய்விட்டாள். அப்படி உருவாக்கப்பட்டவளே சாயாதேவி. பிரத்யுஷா என்றும் இன்னொரு பெயர். சஞ்ஞிகையின் வேண்டுகோளின்படிதான் வேறு ஒருத்தி என்ற ரகசியத்தை வெளியிடாமல் சூரியனுடன் அவன் முதல் மனைவி போலவே வாழ்ந்தாள் சாயாதேவி அவளும் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். சாவர்ணீமனு என்ற ஆண் மகனும், அடுத்து சனி பகவானும் பிறகு பத்திரை என்ற பெண் மகளும் பிறந்தனர்.
சாயாதேவிக்கு குழந்தைகள் பிறந்ததும் சஞ்ஞிகையின் குழந்தைகளை சக்களத்திப் பிள்ளைகளாகக் கருதி கொடுமைப்படுத்த ஆரம்பித்தாள். இதை அறிந்த சூரியனின் மூத்த தாரத்து இளைய குமாரன் யமன் (தர்ம ராஜன்) சாயாதேவியை மிரட்டி அடிக்கப் போனான். சனி தன் தாய்க்குப் பரிந்து கொண்டு சஞ்ஞிகையை „ஓடிப்போனவள்‘ என்று உதாசீனமாகப் பேசவே, யமன் கோபங்கொண்டு தன்னுடைய தண்டத்தால் சனியின் முழங்காலில் அடித்தான். அதனால் சனி பகவானின் வலதுகால்
 ஊனமானது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


இன்று கிருஷ்னஜெயந்தி தினம் .25.08.16

உலகெங்கிலும் நிறைந்து விளங்குகின்றஂஎல்லாம் வல்லகாத்தல் கடவுளாகியஂஸ்ரீமகாவிஷ்னு மூர்த்தியானவர் தாமே பரப்பிரம்மம் என்றபரம்பொருளாகஂகாட்வதற்க்கு ஸ்ரீகிருஷ்னராகஂ
அவதாரம் எடுத்தநாள் இந்தநல்லநாள் இனியஂகிருஷ்னஜெயந்தி நாளே இன்றயநாளில் 
பொன்னாலை ஸ்ரீவரதராஜப் பெருமாள் தேர் உற்சம் கூடஂவெகுசிறப்பாகஂதமிழர் திருநாளாககொண்டாடப்படுகிறது 
ஹரேராமாஂஹிரிஷ்னப்பெருமானே 
சரணம் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



லிங்கத்துக்கு பூஜை செய்யும் நாகம்! இக்காட்சியை பார்த்தால் புண்ணியம் கிட்டுமாம்!..

இந்து சமயங்களில் தெய்வங்கள் செய்யும் செயல்கள் நம்மை நிச்சயம் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றது என்பதில் ஐயமே இல்லை. ஆம் அவ்வாறு நம்பமுடியாத காரியங்கள் ஏகப்பட்டது
 அரங்கேறுகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு விநாயகர் பால் குடித்தது, சமீபத்தில் அம்மன் கண் திறந்து பார்த்ததால் பரவசத்தில் மூழ்கிய மக்கள்... இவையெல்லாம் நிச்சயம் நமது நம்பிக்கைக்கு மீறியதாகும். தற்போது நீங்கள் காணும் காட்சியும் அப்படிப்பட்ட ஒன்றாயிருக்கிறது.
பாம்பு ஒன்று 17 ஆண்டுகளாக சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் காட்சி அனைவரையும் நடுநடுங்க வைக்கிறது. இதெல்லாம் உண்மையா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், இந்தக் காட்சியை அவதானித்தால் புண்ணியம் கிடைக்கும் என்றும் மக்கள் கூறி
 வருகிறார்கள்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா 21.08.16

யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா 21.08.16.அன்று நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் ஆலய தேர்த்திருவிழாவில் இணைந்து  வசந்தமண்டப பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை மேற்கொண்டனர்,
ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில்கல்யாணதிருமுருகன் உள்வீதிசுற்றி பின் வெளியில் வர பத்தர்கள் சிதறுதேங்காய் உடைக்க பால் செம்புகள், கற்பூரச்சட்டிகள் மங்கையர்கள்ஏந்திவர
 சிறுவன் காவடிதோள் ஏந்திவர 
தேருக்காண பவணி ஆரம்பமாகி பத்தர்கள் வடம்பிடித்து 12.35 அளவில் புறப்பட்ட இரதஊர்வலம்  ஐ பி சிதமிழ் 12.05 இருந்து 12.57 வரை நேரலையாக உலம்வாழ் மக்களுக்கு பத்திப்பரவசத்துடன் எடுத்துவர  மக்களவாத்தியம் யேர்மனியில் புகழ்பெற்ற கலைஞர்கள் இசைந்துவர 1. 40 அளவில் கல்யாணதிருமுருகன் இருப்பிடத்தை அடைந்தாள்,பின் 4.மணியளவில் பச்சைசாத்தி கல்யாணதிருமுருகன்இருப்பிடத்தை அடைந்து
 சிறப்பானதாகும் ,
இறையருள் வேண்டுவோம்
இதை விட வேறு ஏதுவாழ்வில் வேண்டும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






பிறந்தநாள் வாழ்த்து:செல்வன் தர்மசீலன் ஹிசான்(20.08.2016)

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  செல்வன் தர்மசீலன்.ஹிசான் அவர்கள் 20.08.2016 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு அம்மா  ,தம்பி . அப்பம்மா ,.
 பெரிப்பாமார்
பெரியம்மாமார்  ,மாமா மார், குமாரசாமி,,,அத்தைமார் ,சித்தப்பா 
அக்கா நித்யா, அண்ணனமார் ,,மச்சாள் மார்வாழ்த்துகின்றனர் 
, இவர்களுடன்இணைந்து   இவரை 
கல்வியில் கலையில் சிறந்துவிளங்கி வாழ்க பால்லாண்டு  ஒளிவீசி அன்பிலே நீ ஆனந்தம் கொண்டு  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன ....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சூரிச் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய சப்பறத் திருவிழா

 சுவிஸ் சூரிச் (Adliswill) நகரில் அமைந்திருந்து அருள் பாலிக்கும்  அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய வருடாந்த உற்ச்சவத்தின் சப்பறத்திருவிழா 19.08.2016.அன்று பக்தர்கள் கூட்டத்துடன்  மிக சிறப்பாக நடை பெற்றது. 
அதன் நிழற்படங்கள் இணைப்பு .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




சுவிஸ் பாசெல் இந்து ஆலயம் தேர்த்திருவிழா 14.08.16

 சுவிஸ் பாசெல் இந்து ஆலய தேர்த்த்திருவிழா 14.08.2016   பலபாகங்களிலும் இருந்துவந்து ஆலய வசந்தமண்டவப் பூஐைகளில்நிறைந்த பக்தர்கள் கலந்து சிறப்பித்து தேள் அமர்தி உள்வீதி உலாவந்து பின் தேரடி அனைத்து சம்பிருதாயங்களும் நிறைவாகி சிதறுதேங்காய் உடைத்து பக்தர்கள் வடம்பிடிக்க இரத்தில் ஊர்வலம்வந்து மாலை பச்சைசாத்தப்பட்டு பின் இருப்பிடத்தை அடைந்தகாட்சி சிறப்பானதாய் பத்தர்களை பரவசப்படுத்தி நின்றதை காணக்கூடியதாய் இருந்தது,
இறையருள் இன்றி
எது இனிநடக்கும்
தொழுதல் அழுதல் அவன் லீலை
தொழுதால் பிணிதீர்ப்பதும் அவன்வேலை
வணங்கிடுவோம்
அவன் அருள்நாடி
நலம்தருவான் நாயகன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்திருவிழா 15.08.16

இன்று 15.08.2016 லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன்ஆலய தேர்த்திருவிழா  பல பாகங்களிலும் இருந்து வந்து சுலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா வசந்தமண்டப பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை மேற்கொண்டனர்,
ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில் அம்மன் உள்வீதிசுற்றி பின் வெளியில் வர பத்தர்கள் சிதறுதேங்காய் உடைக்க 
பால் செம்புகள், 
கற்பூரச்சட்டிகள்  மங்கையர்கள்ஏந்திவர இளைஞர்கள் செடில்குற்றி காவடிகள் தோள் ஏந்திவர தேருக்காண பவணி ஆரம்பமாகி பத்தர்கள் வடம்பிடித்து புறப்பட்ட இரதஊர்வலம் மக்களவாத்தியம் முளங்க 
அம்பாள் இருப்பிடத்தை
 அடைந்தாள், பின்மாலை பச்சைசாத்திஅம்பாள் இன்றை விழாவில் மீண்டும் அம்பிகை இருப்பிடத்தை அடைந்து அமைதிகொண்டாள்
அனுதினம் பணிவேம்
திருவடி தொழுதால்
தீராத வினையும் தீரும்
அன்னையின் பாதத்தில்
பணிவதே எம்கடன் வாநீர் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






பிறந்தநாள் வாழ்தது செல்வன் செல்வக்காந்தராஜா லர்ஷான் -16.08.16

சுவிஸ் சூரிச்சைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு திருமதி  செல்வக்காந்தராஜா தம்பதிகளின் செலவப்புதல்வன் லர்ஷான் அவர்களின்  பிறந்தநாள் இன்று. 16.08.2016  இவரை  அன்பு அப்பா அம்மா அண்ணா 
 அம்மப்பா  அம்மம்மா    மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார்  
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  இறைஅருள் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி சகல கலைகளும் பயின்று  
நீ பல்லாண்டு பல்லாண்டு காலம்  
 நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பாலகுமார் தாரகன் (14.08.16)

சுவிசை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவுள்ள  செல்வன் பாலகுமார்  தாரகன்
 அவர்களின்  பிறந்த நாள்.14.08..2016 .இவர்தனது பிறந்தநாளை அவரது  .குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார்,இவரை அன்பு  அப்பா அம்மா  தம்பி அப்பாம்மா அப்பாப்பா  மாமா மாமி  
அக்கா அத்தான்  
மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும்   மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை 
இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகுறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!   இவர்களுடன் இணைந்து
,நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் 
வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவிதா (14.08.16)

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி தேவிதாவின் 16வது பிறந்தநாளை  14.08.2016 இன்று  கொண்டாடுகின்றார்   இவர் மின்முளவு, சுரத்தட்டு போன்றவாத்தியங்களை மீட்டக்கூடியவரும் பாடும் திறன் உள்ளவரும் பல இசைப்பேளைகளில் பாடியுள்ளவரும் ஆவார் இவர் தன் தந்தை இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களுடன் இணைந்து உதவி
 இசையமைப்பாளராக
பணியாற்றியுள்ளவரும்ஆவார் அதுமட்டுமல்ல இவர்பாடல் எழுதும் திறன்உள்ள இளம் கவிஞரும் ஆவார் இவர் சின்னஞ்சிறு வயதில் அதாவது தனது ஐந்து வயதிலேயே இசைப்பேளையில் ஓர் சிறியபாடலை
 பாடியுள்ளார்
சிறு வயதில் சிறுப்பிட்டி முத்தமாரியம்மன் இசைப்‌பேளை மட்டுவில்: ஞானவைரவர் இசைப்பேளை டென்மார்க் அபிராமி அம்மன் இசைப்பேளை டோட்மூண்ட் சிவன் இசைப்பேளை சுவெற்றா ஸ்ரீ கனகதுர்கை இசைப்பேளை ஐி ரிவியில் வெளிவந்த சித்திரை வருடத்தை வரவேற்கும்பாடல்என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்ல ரீச்சர்
என்ற குறும் படத்துக்கும் பாடல்களை தனது சகோதரிகளுடன் இணைந்து பாடியுள்ளார் அத்தோடு குளந்தைக் கவிஞர் என்.வி.சிவநேசன் அவர்கள் பாடல்களை எழுத இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல்
 சிறுப்பிட்டி
எஸ்.தேவராசா இசையமைப்பில் வெளியான புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையிலும் இவரும் இவர் சகோதரிகளுமாக பாடியுள்ளார்கள் இந்த இசைப்பேளையை வெளியிட்டு வைத்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி அவர்கள் இவர்கள் திறனைப்பாராட்டினார்
இவர் கலைத்துறையில் வலம் வந்து சிறந்து விளங்கி பலர்போற்றி இசைப்பணி தொடர வாழ்த்துவோம். கலையின் வழங்களை இனிவரும் சந்ததியின் கையில் கொடுப்போம் கலைவளரும் அவர்கள்
 நிலை மலரும்
பாரின் எம் இசை வடிவம் வளரும் இதுதான் நாம் கலைக்கு எம்மை அர்ப்பணிக்கும் பணியாகும்….பாடகி தேவராசா தேவிதாவிற்கு எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/ இணையங்களின் பாராட்டுக்கள்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப பிள்ளையார் புகழ் பாடலையும் பாடியுள்ளார் இவருக்கு
எமது வாழ்த்துக்கள்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன். தனிசன் 10.08.16

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்   யேர்மனியில்வசிக்கும் செல்வன் சந்திரன். தனிசன் அவர்களின் 
 பிறந்தநாள்.10.08.2016,இன்று .இவரை அன்பு அப்பா அம்மா .அன்பு  தம்பிமார் பெரியப்பா  பெரியம்மா சித்தப்பா சித்தி  மாமா  மாமி அக்கா அத்தான் மருமக்கள்  குடும்ப பெறாமக்கள் மற்றும்  குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பர்கள்  இவரை நவற்கிரி  ஸ்ரீ  மாணிக்கப் பிள்ளையார்  இறைஅருள் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் 
வீசி நீ  !  
சகல சீரும்சிறப்பும் பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்   பல்லாண்டு  பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>











பிறந்த நாள் வாழ்த்து செல்வன் குமாரசாமி சாமி (10-08-15)

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன்  குமாரசாமி சாமி அவர்களின் பிறந்த 
(10-08-2016), இன்று இவர் தனது 18.வது பிறந்தநாளைக்கொண்டாடும் செல்வன்  குமாரசாமிசாமி. பேர்லினில் உள்ள இல்லத்தில் தனது உற்றார் உறவினருடன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவரை
 அன்பு  அப்பா . அக்காமார் .அண்ணா  .சின்னப்பம்மா அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். மச்சாள் .அனைவரும்வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் 
இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும். :பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வரதராஜப் பெருமாள் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த பெருந்திருவிழா.09.08.2016.   செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நேற்றைய கொடியேற்றத் திருவிழாவில் யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இவர்களில் பலர் அங்கப்பிரதட்சணை செய்தும் அடியழித்தும் தமது நேர்த்திகளை நிறைவேற்றினர். பக்தர்களின் வசதி கருதி ஆலயத்தில் உள்ள கண்ணன் மடாலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. தாகசாந்தி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து செல்வதற்காக யாழ்ப்பாணம் - காரைநகர் இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இ.போ.ச, தனியார் பேருந்துகள் 
ஆலயத்தினூடாக
 சேவையை மேற்கொண்டன. தொடர்ச்சியாக இந்த சேவை இடம்பெறவுள்ளது. அடுத்துவரும் 18 தினங்கள் இடம்பெறவுள்ள இந்த பெருந்திருவிழாவில் எதிர்வரும் 25 ஆம் திகதி இரதோற்சவம் இடம்பெறும் -
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளைக்காரப் பெண்கள்நல்லூர் திருவிழாவில் கலாசார உடையில்

யாழில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நேற்று முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
விநாயகப் பெருமானுக்கும், வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானுக்கும் விஷேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சுபநேரமான காலை- 10 மணியளவில் தவில், நாதஸ்வர முழக்கங்களுடன் கொடியேற்ற உற்சவம் வைபவம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகராக் கோஷம் எழுப்ப எம்பெருமான், விநாயகர், வள்ளி தெய்வயானை சமேதரராக உள்வீதி வலம் வந்து அருள்பாலித்தார்.
கொடியேற்ற உற்சவம் காண யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களிருந்தும் ஆயிரக்கணக்கான அடியவர்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் அடியவர்கள் மாத்திரமன்றி வெளிநாட்டு அடியவர்களும் கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறிப்பாக வெள்ளைக்காரப் பெண்கள் சைவத் தமிழ் மக்களின் கலாசார ஆடையான சேலை அணிந்து வந்து நல்லூர்க் கந்தனைப் பக்திபூர்வமாக வழிபட்டமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
சைவத் தமிழ்க் கலாசாரத்தில் வெளிநாட்டவர்கள் ஆர்வம் கொண்டுள்ள நிலையில் எம்மவர்கள் வெளிநாட்டு மோகத்தில் ஊறித் திளைப்பது கவலையளிப்பதாக ஆலய உற்சவத்தில் கலந்து கொண்ட மூத்த ஆன்மீகவாதியொருவர் கவலை
 வெளியிட்டார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





Powered by Blogger.