நீங்கள் இந்த கடவுளை வழிபட்டு சென்றால் நிச்சயம் வெற்றி தான்

 உங்கள் காரியத்தடை, வீடு, சொத்து பிரச்சனை, நோய்கள் தீர என்ற பலவிதமான பிரச்சனைகளுக்கு எந்தெந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்
என்ன தான் போராடினாலும் ஒரு சிலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு எதை எடுத்தாலும் அதில் எளிதாக வெற்றி கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் கடவுளை வணங்கி விட்டு செய்வது தான் வெற்றிக்கு உந்துகோலாக இருக்கும். அப்படி நாம் செய்யும் சில விஷயங்களுக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள் யார் யார்? என்று
 தெரிந்து கொள்ளலாம்.
என்ன தான் போராடினாலும் ஒரு சிலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு எதை எடுத்தாலும் அதில் எளிதாக வெற்றி கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் கடவுளை வணங்கி விட்டு செய்வது தான் வெற்றிக்கு உந்துகோலாக இருக்கும். அப்படி நாம் செய்யும் சில விஷயங்களுக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள் யார் யார்? தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். விக்னங்கள் என்றால் வினைகள் அதாவது துன்பங்கள். துன்பங்கள் தீர்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும் என்பது சாஸ்திரம். ஆனால் விநாயகரை இடையூறுகள் நீங்கவும், காரிய தடை நீங்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும் வணங்கி விட்டு செல்ல ஜெயம் நிச்சயம்.
நோய் பிணிகள் நீங்க தன்வந்திரி பகவானை வணங்க சொல்ல கேட்டிருப்போம். தீராத நோய்களையும் தீர்த்துவிடும் புண்ணியவான் தட்சிணாமூர்த்தி. இவரை வணங்குபவர்களுக்கு எந்த நோயும் உடனே தீரும். பெரிய பெரிய ஆபரேஷன்களை எதிர் கொள்பவர்களுக்கு தட்சிணாமூர்த்தியை வணங்கி சென்றால் தைரியம் பிறக்கும். ஆயுள் முழுக்க ஆரோக்கியம் பெறுவதற்கு ருத்ர பகவானை வணங்கலாம்.
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவதற்கு முருகப்பெருமானின் சுப்பிரமணிய வடிவத்தையும், நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானையும் வணங்கி விட்டு செல்ல அதிர்ஷ்டமான யோகம் உண்டாகும். உங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பகைவர்களை துவம்சம் செய்ய திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகனை வேண்டுங்கள். சஷ்டி விரதம் இருந்தால் எதிரிகளை எதிர்த்துப் 
போராடலாம்.
நம் மேல் விழும் பொறாமை பார்வைகளை தவிடு பொடியாக்க, திருஷ்டிகள் விலக, பில்லி, சூனியம், ஏவல் போன்றவை அகல முத்துமாரி அம்மனை வணங்கலாம். சக்கரத்தாழ்வார், நரசிம்மர், வீரமாகாளி போன்றவர்களும் இவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பார். மனோதிடம் பெற ராஜராஜேஸ்வரியையும், ஆஞ்சநேயரையும் வழிபடலாம். மேலும் சனிபகவானுடைய பாதிப்புகள் குறைய ஆஞ்சநேயரையும், ஐயப்பன் சுவாமியையும் வணங்கினால் நல்ல பலன்கள் 
கிடைக்கும்.
மாங்கல்யம் நிலைக்க மங்கள கௌரியையும், புத்திர பாக்கியம் பெற சந்தானகிருஷ்ணன் மற்றும் சந்தான லட்சுமியை வழிபடலாம். செல்வம் பெருக செல்வாதிபதி குபேரனையும், மகாலட்சுமியுடன் லக்ஷ்மி நாராயணரையும் வழிபட ஐஸ்வர்யம் உண்டாகும். சுப நிகழ்வுகளுக்கு, சுபகாரியங்களுக்கு, திருமண வைபவங்களுக்கு காமாட்சி அம்மனையும், துர்க்கை அம்மனையும் வழிபட தடையின்றி வெற்றி உண்டாகும்.
வியாபாரம், தொழில், உத்தியோகம் சிறக்க திருப்பதி ஏழுமலையானை வணங்க வேண்டும். அவற்றில் சாதிக்க நினைப்பவர்கள் ஏழுமலையானை வணங்கினால் அமோக வெற்றி உண்டாகும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் கட்டாயம் கஜலக்ஷ்மி தேவியை வணங்குவது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். இவைகளையெல்லாம் நம் முன்னோர்கள் வழி வழியாகக் கடைப்பிடித்து வந்த சம்பிரதாயங்கள். 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ¨

. பிறந்தநாள் வாழ்த்து திரு தங்கா இளையதம்பி 24.06.2021

யாழ் தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்   திரு தங்கா இளையதம்பி
அவர்களின் ஐம்பதாவது  பிறந்த நாள் .24-06-2021...இன்று இவர்தனது பிறந்த நாளை உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு மனைவி அன்புப்  பிள்ளைகள் அன்புச்சகோதரர்கள் அத்தான் மருமக்கள் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
தோப்பு போதிப்பிள்ளையார் மற்றும் கனடா முருகன் சன்னதி முருகன்
 நல்லூர் கந்தன் 
இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  
வாழ்த்துகின்றன.

  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து:திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி (செல்வரானி ) 20-06-21

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் தோப்பு அச்சுவேலியை   
 வதிவிடமாகக் கொண்ட  
திருமதி தர்மலிங்கம்  சரஸ்வதி (செல்வரானி ) அவர்களின் அறுபத்திஐந்தாவது பிறந்தநாள்.20-06-2021..இன்று இவரை அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் பேரப்பிள்ளைகள்  நண்பர்கள் நண்பிகள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர் 
  இவர்களுடன் இணைந்து இவ் உறவை 
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் தோப்பு போதிப் பிள்ளையார்  நவற்கிரி  அப்பா வயிரவர்சன்னதி முருகன்  இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும்  பல்லாண்டு பல்லாண்டு
 காலம் வாழ நாமும் .நவற்கிரி இணையங்கள் . நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி .கொம் நிலாவரை.கொம்  இணையங்களும் .வாழ்த்துகின்றன 
 வாழ்கவளமுடன்
நிலாவரை.கொம் செய்திகள் >>>






பிறந்த நாள் வாழ்த்து திருமதி லோவிதன் 18,06,2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை வசிப்பிடமாகக்கொண்ட திருமதி லோவிதன் ரஜீபா அவரின் பிறந்த நாள் 18,06,2021 இன்று இவரை  அன்புக்கணவர் 
 அன்புப் பிள்ளைகள்,அப்பா அம்மா சகோதரர்கள்  மாமா மாமி மார் 
   மச்சான்  மச்சாள்  மருமகள் பெறாமக்கள்  பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  குடும்ப  ம உறவுகள்  உற்றார்  உறவினர்கள் அனைவரும்   வாழ்த்துகின்றனர்  இவர் களுடன் 
   இணைந்து   நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நவற்கிரி ,கொம்  நிலாவரை.கொம் 
    நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை ஆசியடன்
 ஈடில்லா இந்நாளில் அன்பு நிலைப்பெற அன்பிலும் அறத்திலும் நிறைந்து   சகல வளம் பெற்று 
சீரும் சிறப்புடன் நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென 
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


உங்கள் உடலை இயக்கும் 7 ஆற்றல் சக்கரங்கள் பற்றி சித்தர்கள் சொன்ன ரகசியம்.

 மனிதர்கள் இயங்குவதற்கு ஆதாரமாக 7 ஆற்றல் சக்கரங்கள் உள்ளன. சூரிய ஒளியோடு தொடர்புடைய இந்த 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கண்டறிந்துள்ளனர். அவை
1. மூலாதாரம்
முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது.உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது.
உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
2. சுவாதிஷ்டானம்
இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது.
பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவுக்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது.
மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது.பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
3. மணிபூரகம்
நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது.உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது.கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது.
அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன.கணையம் என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை ,கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.
4. அனாகதம்
இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் இருக்கிறது.
அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும். தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதயம், நுரையீரல், ரத்த ஓட்டம் ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.
5. விசுத்தி
இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது.தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டவை.
நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம்.தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.
6. ஆக்கினை
இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது.தொலை உணர்தல் ( டெலிபதி) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. உள்ளன. சூரிய ஒளியோடு தொடர்புடைய இந்த 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கண்டறிந்துள்ளனர். அவை:
1. மூலாதாரம்
முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது.உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது.
உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
2. சுவாதிஷ்டானம்
இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில் 
அமைந்துள்ளது.
பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவுக்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது.
மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது.பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
3. மணிபூரகம்
நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது.உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது.கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது.
அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன.கணையம் என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை ,கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.
4. அனாகதம்
இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் இருக்கிறது.
அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும். தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதயம், நுரையீரல், ரத்த ஓட்டம் ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.
5. விசுத்தி
இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது.தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டவை.
நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம்.தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.
6. ஆக்கினை
இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது.தொலை உணர்தல் ( டெலிபதி) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் 
கிடைக்கின்றன.
அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது.இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மிகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.
7. தூரியம்
இதற்கு சகஸ்ரஹாரம், தாமரைச் சக்கரம் என்ற பெயர்கள் உண்டு.இது உச்சந்தலை பகுதியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது.இந்தச் சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற 
சக்கரம் இது.
என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் 
ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 




  

1பிரபல பாடகி செல்வி தேவதி தேவராசா பிறந்தநாள் வாழ்த்து: 15.06.21

யேர்மன்  டோ ட்முண்ட்னில்   பிறப்பிக்கமாகக்கொண்டபிரபல பாடகி செல்வி தேவராசா  தேவதி. அவர்களின் (16வது)  பிறந்தநாள்  15.06.2021.-இன்று  தனது  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்  
 இவரை அன்பு அப்பா அம்மா  சகோதரிகள்  மச்சான்    மச்சாள்மார்  . சகோதரர்கள் அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ் 
 உறவுகள் அனைவரும் வாழ்த்தி நிற்கின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
  நிலாவரை.கொம் 
 நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்
  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இவர் தலை சிறந்த பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவராசா தேவதி மேடைநிகழ்வுகளிலும்,பல இசைப்பேழைகளில் பாடியுள்ள,பாடிகொண்டிருக்கின்ற 
கலைஞர் 
பாடகியாக, ஒளிப்படப்பிடிப்பாளியாக, நிழல் படப்பிடிப்பாளர் ளியாக,படத்தொகுப்பாளியாக திகழ்ந்து வரும் தேவதி.தேவராசா மேடைநிகழ்வுகளிலும்,பல இசைப்பேழைகளில் பாடியுள்ள,பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.ம செய்திகள் >>> 



பிறந்தநாள் வாழ்த்து:திரு.திருமதி .கனகசபாபதி சரஸ்வதி 13-06-21

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் கனடா ரொறன்றோவை  
 வதிவிடமாகக் கொண்ட  
திருமதி கனகசபாபதி சரஸ்வதி (சரஸ்) அவர்களின் பிறந்தநாள்.13-06-2021..இன்று இவரை அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் பேரப்பிள்ளைகள்  நண்பர்கள் நண்பிகள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர் 
  இவர்களுடன் இணைந்து இவ் உறவை 
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி  அப்பா வயிரவர்கனடா முருகன்  இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும்  பல்லாண்டு பல்லாண்டு
 காலம் வாழ நாமும் .நவற்கிரி இணையங்கள் . நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி .கொம் நிலாவரை.கொம்  இணையங்களும் .வாழ்த்துகின்றன 
 வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து:திருமதி .பாலையா .12-06-21

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு திருமதி பாலையா
இந்திராணி  அவர்களின் அறுபத்தி ஐந்தாவது  பிறந்தநாள் இன்று 12..06.2020.இன்று இவர் தனது பிறந்தநாளை 12.06-2021.சனிக்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடடுகின்றார்  இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள்,பெரியப்பா பெரியம்மா 
சித்தப்பா சித்தி மார் 
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  அப்பா வயிரவர் ,
இறைஅருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து .இவரை  நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
.வாழ்க  வளமுடன்

நிலாவரை.கொம் செய்திகள் >>>


இதே சூரியனார்கோவில்களும் மற்றும் சூரியன் பூஜித்த தலங்கள்

சிலப்பதிகாரத்தில் பூம்புகாரில் உச்சிக்கிழான் கோட்டம் எனும் பெயரில் சூரியனுக்கு கோயில் இருந்தது. காவிரிப் பூம்பட்டிணம் என்கிற அந்த நகரம் மாபெரும் கடல் கோளுக்குப் பிறகு கோயிலும் அழிந்து விட்டது. கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வீரசோழபுரத்தில் சூரியநாராயண மூர்த்தி. தஞ்சாவூர், ஒரத்தநாடுக்கு அருகே பரிதியப்பர் கோயில் என்றே சூரியனின் பெயரோடேயே தலமும் அமைந்துள்ளது. இத்தல ஈசனுக்கு பாஸ்கரேஸ்வரர் 
என்று பெயர்.
சென்னையிலிருந்து விழுப்புரம் செல்லும் பாதையில் விக்கிரவாண்டிக்கு அருகே பனையபுரம் எனும் தலம் உள்ளது. இங்கு நேத்ரோத்தாரகேஸ்வரர் என்கிற திருப்பெயரில் ஈசன் அருள்கிறார். மயிலாடுதுறை, திருவாடுதுறைக்கு அருகேயுள்ள பேராவூர் தலத்தில் ஆதித்தேஸ்வரர் என்று காட்சி தருகிறார். ஆடுதுறைக்கு அருகேயுள்ள திருமங்கலக்குடியில் நவகிரகங்களுக்குமே சக்தியைக் கொடுத்தவராக பிராணநாதேஸ்வரரை த
ரிசிக்கலாம்.
இதே சூரியனார்கோவிலை அடுத்துள்ள திருக்கோடிக்காவல் ஊருக்கு அருகேயுள்ள பாஸ்கரராயபுரத்தில் பாஸ்கரேஸ்வரரும், அருகேயே கீழசூரியமூலை எனும் தலத்தில் சூரிய கோடீஸ்வரராகவும் கருணையோடு அருட்பாலிக்கிறார். சென்னை, பொன்னேரிக்கு அருகேயுள்ள
 ஞாயிறு என்றே ஒரு தலம் உள்ளது. இங்கு புஷ்பரதேஸ்வரர் எனும் திருப்பெயரில் அருளை அள்ளித் தருகிறார். சென்னை - வியாசர்பாடியில் ரவீஸ்வரராக
 கம்பீரமாக வீற்றிருக்கிறார். கும்பகோணம், அரித்துவாரமங்கலத்திற்கு அருகே பயரி தலத்தில் கோடி சூரியப் பிரகாசராகத் திருநாமம் பூண்டு அருட்பாலிக்கிறார். திருச்சி, முசிறிக்கு அருகேயுள்ள ஆமூர் தலத்தில் ரவி ஈஸ்வரராக ஈடிணையற்று விளங்குகிறார்.  
இன்றும் பல்வேறு சிவாலயங்களில் சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் சூரியன் தமது கிரணங்களால் ஈசனை வழிபடுகிறார். சரியாக அந்த நேரங்களில் சூரியக் கிரணங்கள் லிங்க மூர்த்தியின்மீது படருவதை
 பல தலங்களில் தரிசிக்கலாம். இவை தவிரவும் சூரியனுடைய திருப்பெயரில் தீர்த்தங்களும் அமைந்துள்ளன. இந்த தீர்த்தத்தில் நீராடி ஈசனை 
தரிசிக்க தீராத நோயெல்லாம் தீருகிறது.
 மயிலாடுதுறைக்கு 
அருகேயுள்ள திருமீயச்சூர். மேல்மருத்துவத்தூருக்கு அருகேயுள்ள அச்சிறுப்பாக்கம், திருவெண்காடு புதன் ஸ்தலம், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், சங்கரன்கோயில், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, திருவாடானை என்று பல தலங்களில் சூரிய தீர்த்தம் அமைந்துள்ளது.
சூரியன் வழிபட்டுப் பேறு பெற்ற ஏழு திருமுறைத் தலங்களை திருவேதிக்குடி தலபுராணப் பாடலொன்று  சுட்டிக் காண்பிக்கிறது.
கண்டியூர் வேதிகுடி நற்குடந்தைக்
கீழ்க்கோட்டம் பண்பரிதி நன்றியமம்
பாங்கார் தெளிச்சேரி பொற்புற வார்பனங்
காட்டூர் நெல்லிக் காவேழும்  பொற்பரிதி
பூசனை செய்யூர்
திருவையாறைச் சுற்றியுள்ள திருக்கண்டியூர், திருவேதிக்குடி, கும்பகோணம் கீழ்க்கோட்டம் என்கிற நாகேஸ்வரர் கோயில், ஒரத்த நாட்டிற்கு அருகேயுள்ள பரிதியப்பர் கோயில், காரைக்கால் அருகேயுள்ள தெளிச்சேரி என்கிற கோயில்பத்து, விக்கிரவாண்டிக்கு அருகேயுள்ள பனங்காட்டூர், திருவாரூருக்கு அருகேயுள்ள திருநெல்லிக்கா போன்ற தலங்கள் சூரியன் ஈசனை பூஜித்த முக்கியத் தலங்களாகும

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

யாழ் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூஷணி ஆலய இராஜ கோபுரத்தில் இன்று நண்பகல் நாகம் ஒன்று காட்சி கொடுத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நயினாதீவு நாகபூஷணி அம்பிகையின் திருவிழா எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பக்கதர்கள் திருவிழா நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் நாகம் காட்சி கொடுத்தமையனது நயினை அம்பாள் பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது. 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




நாம் இந்த கடவுளை வழிபட்டு சென்றால் நிச்சயம் வெற்றி தான்


காரியத்தடை, வீடு, சொத்து பிரச்சனை, நோய்கள் தீர என்ற பலவிதமான பிரச்சனைகளுக்கு எந்தெந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று தெரிந்து
 கொள்ளலாம்.
என்ன தான் போராடினாலும் ஒரு சிலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு எதை எடுத்தாலும் அதில் எளிதாக வெற்றி கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் கடவுளை வணங்கி விட்டு செய்வது தான் வெற்றிக்கு உந்துகோலாக இருக்கும். அப்படி நாம் செய்யும் சில விஷயங்களுக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள் யார் யார்? என்று தெரிந்து கொள்ளலாம்.
என்ன தான் போராடினாலும் ஒரு சிலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு எதை எடுத்தாலும் அதில் எளிதாக வெற்றி கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் கடவுளை வணங்கி விட்டு செய்வது தான் வெற்றிக்கு உந்துகோலாக இருக்கும். அப்படி நாம் செய்யும் சில விஷயங்களுக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள் யார் யார்? தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். விக்னங்கள் என்றால் வினைகள் அதாவது துன்பங்கள். துன்பங்கள் தீர்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும் என்பது சாஸ்திரம். ஆனால் விநாயகரை இடையூறுகள் நீங்கவும், காரிய தடை நீங்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும் வணங்கி விட்டு செல்ல ஜெயம் நிச்சயம்.
நோய் பிணிகள் நீங்க தன்வந்திரி பகவானை வணங்க சொல்ல கேட்டிருப்போம். தீராத நோய்களையும் தீர்த்துவிடும் புண்ணியவான் தட்சிணாமூர்த்தி. இவரை வணங்குபவர்களுக்கு எந்த நோயும் உடனே தீரும். பெரிய பெரிய ஆபரேஷன்களை எதிர் கொள்பவர்களுக்கு தட்சிணாமூர்த்தியை வணங்கி சென்றால் தைரியம் பிறக்கும். ஆயுள் முழுக்க ஆரோக்கியம் பெறுவதற்கு ருத்ர பகவானை வணங்கலாம்.
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவதற்கு முருகப்பெருமானின் சுப்பிரமணிய வடிவத்தையும், நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானையும் வணங்கி விட்டு செல்ல அதிர்ஷ்டமான யோகம் உண்டாகும். உங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பகைவர்களை துவம்சம் செய்ய திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகனை வேண்டுங்கள். சஷ்டி விரதம் இருந்தால் எதிரிகளை எதிர்த்துப் 

போராடலாம்.
நம் மேல் விழும் பொறாமை பார்வைகளை தவிடு பொடியாக்க, திருஷ்டிகள் விலக, பில்லி, சூனியம், ஏவல் போன்றவை அகல முத்துமாரி அம்மனை வணங்கலாம். சக்கரத்தாழ்வார், நரசிம்மர், வீரமாகாளி போன்றவர்களும் இவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பார். மனோதிடம் பெற ராஜராஜேஸ்வரியையும், ஆஞ்சநேயரையும் வழிபடலாம். மேலும் சனிபகவானுடைய பாதிப்புகள் குறைய ஆஞ்சநேயரையும், ஐயப்பன் சுவாமியையும் வணங்கினால் நல்ல பலன்கள் 
கிடைக்கும்.
மாங்கல்யம் நிலைக்க மங்கள கௌரியையும், புத்திர பாக்கியம் பெற சந்தானகிருஷ்ணன் மற்றும் சந்தான லட்சுமியை வழிபடலாம். செல்வம் பெருக செல்வாதிபதி குபேரனையும், மகாலட்சுமியுடன் லக்ஷ்மி நாராயணரையும் வழிபட ஐஸ்வர்யம் உண்டாகும். சுப நிகழ்வுகளுக்கு, சுபகாரியங்களுக்கு, திருமண வைபவங்களுக்கு காமாட்சி அம்மனையும், துர்க்கை அம்மனையும் வழிபட தடையின்றி வெற்றி உண்டாகும்.
வியாபாரம், தொழில், உத்தியோகம் சிறக்க திருப்பதி ஏழுமலையானை வணங்க வேண்டும். அவற்றில் சாதிக்க நினைப்பவர்கள் ஏழுமலையானை வணங்கினால் அமோக வெற்றி உண்டாகும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் கட்டாயம் கஜலக்ஷ்மி தேவியை வணங்குவது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். இவைகளையெல்லாம் நம் முன்னோர்கள் வழி வழியாகக் கடைப்பிடித்து வந்த சம்பிரதாயங்கள். 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

பிறந்த நாள் வாழ்த்து திரு தேவராசா சுதாகரன்(சுதா) 02.06.21

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா)  அவர்களின் ஐம்பத்திஇரண்டாவது  பிறந்த நாள் 02.06.2021.இன்று தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகளுடன் கொண்டாடுகின்றார்   .இவரை  அன்பு மனைவி 
அன்புப் பிள்ளைகள்
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை சுவிஸ் சூரிச்சிவன் 
  நல்லைக்கந்தன் இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை >>>>
உன் பிறந்த நாளுக்கு எனக்கு
வாழ்த்துக் கூற விருப்பம்
இல்லை ஏன் தெரியுமா..?
உன்னை நான் முதலில்
கண்ட அதே
இளமையுடன் தான்
இப்போதும் நீ இருக்கின்றாய்..
பின் நான் வாழ்த்துக் கூறி
உனக்கு வயது ஒன்று
கூடி விட்டதாக எண்ணி
நீ வருந்துவதில் எனக்கும்
விருப்பம் இல்லை.

புத்தம் புது நாள்..
புத்தம் புது வாழ்க்கை..
எல்லா சோகங்களும்
கஷ்டங்களும் கரைந்து
வாழ்வில் மகிழ்ச்சி மட்டும்
வருவதற்கு.. என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உன் பிறந்த நாளை பார்த்து
மற்ற நாட்கள் பொறாமை
கொள்கின்றது.. பிறந்து
இருந்தால் உன்
பிறந்த நாளாக தான்
பிறந்து இருக்க வேண்டும்
என்று.. என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நாம் பிறக்கும் போது
இந்த உலகிற்கு என்ன
கொண்டு வந்தோம்..
பிறருக்கு உதவி செய்தால்
தான் நம் வாழ்வு சிறக்கும்..
உங்கள் பிறந்த நாள் நீங்கள்
பிறந்த நாளாக மட்டும்
இல்லாமல்.. நல்ல செயல்கள்
செய்ய பிறந்த
தொடக்க நாளாக அமைய
என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பிறப்புகளில் உயர்ந்த
பிறப்பு மானிட பிறப்பு..
இந்த பிறப்பில் நீங்கள்
அனைத்தும் பெறவும்..
பெற்றவற்றை உலகிற்கு
பகிரவும்.. மகிழ்வுடன்
வாழ்த்துகின்றேன்..!
வாழ்க வளமுடன்
மிளிர்க தமிழுடன்.,
இவர்களுடன் இணைந்து 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Powered by Blogger.