வெப்பத்தை தணிக்க சிறந்த வழி

 சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012,
கோடை காலங்களில் வெயிலில் தாக்கத்தை தணிக்க பொதுவாக மோர், குளிர்பானங்களை அருந்துகிறோம் தர்பூசணி, எலுமிச்சை சாறு சர்பத் ஆகியவையும் அடங்கும். இதோடு வெள்ளரிக்காய், தண்டுக்கீரை மிகவும் சிறப்பு வாய்ந்தது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
வெள்ளரிக்காய் துண்டுகளை ரொட்டியில் வைத்து சாண்டிச் போன்று சாப்பிட்டு, ஒரு கப் டீ குடித்தால் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தரும் என்பது இவர்கள் கருத்தாகும்.
தண்டுக்கீரையை சமைத்து சாப்பிடுவதும் உஷ்ணத்தை குறைக்கும். பழங்கள், காய்கறிகளில் நீர்சத்து அதிகம் இருப்பதால் இவற்றை கோடைகாலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கின்றனர்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.