உண்மையில் ஆன்மிகம் என்பது நம்மைப் பற்றிய விஷயம் நம் உள்ளே இருக்கும்

ஆன்மீகம் என்றாலே பலருக்கு ஒருவித ஒவ்வாமை உணர்வு ஏற்பட்டு விடுகிறது. வேறு பலருக்கோ ஆன்மீகம் என்றால் கோவில், பூஜை, வழிபாடு என்ற அளவோடு நின்றுவிடத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ஆன்மிகம் என்பது நம்மைப் பற்றிய விஷயம். நம் உள்ளே இருக்கும் ஆன்மாவைப் பற்றிய அறிவு. ஆம்! நம்மை பற்றிய உண்மைகளை நாம்
 சரியாகவும், தெளிவாகவும் தெரிந்துகொள்ள உதவுவதுதான் ஆன்மீகம். இல்லையே! அதுபோல் நமது மன நிறைவும், 
மகிழ்ச்சியும் வெளியில் இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவை உண்மையில் நமக்குள் தான் உள்ளன.
நம்மைப் பற்றிய உண்மைகளை நாம் ஒரு குருவின் மூலமாகத் தான் மிகச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும். இதற்குக் குருவை நாம் அணுகவேண்டும். குருவை நெருங்கியிருந்து, அவர் உபதேசிப்பவற்றை
 உற்றுக் கவனித்து, உள்வாங்கி அவற்றை இடைவிடாமல்
 சிந்தித்துப் பார்த்தால் உட்பொருள் விளங்கும்.
 அப்பொழுது நாம் கொண்டிருக்கின்ற பொய்யான போலித்தனங்களெல்லாம் ஒவ்வொன்றாகத் தானாகவே நம்மை விட்டு விலகி இல்லாமற் போகும். இதற்கு நாம் அந்த உபதேசத்தை வெறும் அறிவாக 
மட்டும் பெறாமல் 
உள்ளுணர்வால் அனுபவிக்கின்ற தன்மை வேண்டும். 
அந்த உபதேசத்தால் நமக்கு அகமாற்றம் ஏற்பட வேண்டும். உலகியல் வாழ்க்கை முறையில் பார்வை மாற்றம் ஏற்பட வேண்டும். 
அந்த வகையில் ஒரு குருவின் வாயிலாக அடியேன் பெற்ற
 உபதேசங்களைச் சிந்தித்து அவற்றின் உயர்வுத்தன்மையை உணர்ந்ததினால், யான் பெற்ற இன்பத்தைப் பெறுக 
இவ்வையகம்!
நமது முந்தைய வாழ்க்கை முறையில், ஒரு செயலைச் செய்து முடித்த பிறகுதான் அது முட்டாள்தனமானது, அதைச் செய்திருக்கக்கூடாது போன்ற எண்ணங்கள் ஏற்பட்டன. ஆனால் ஞானத்தினால் அகமாற்றம் ஏற்பட்ட பிறகு ஒரு செயலைச் செய்யும் முன்னரே உள்ளுணர்வு நம்மை 
எச்சரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அறிவற்ற செயலின் விளைவு உடனே எனக்குள் சுட்டிக் காட்டப்படுகின்றது. சிந்திக்காமல் ஒன்றைச் செய்ய முற்பட்டாலும் கூட உள்ளுணர்வு அதைச் செய்ய 
விடாமல் தடுக்கிறது.
ஆன்மீக சாதகரில் ஒரு பெண்மணி, தனது சகோதரி தன் தாயைப் பற்றிய மனக்குறை அனைத்தையும் வசை மொழிகளால் தன்னிடம் கொட்டித் தீர்த்தபோது, பழைய மன நிலையில் தான் இருந்திருந்தால் அவளைத் திருப்பி நன்றாகத் திட்டியிருப்பேன் என்றும், இன்றைய ஆன்மிக
 மனநிலையில் அவள் கூறியவற்றை அமைதியாகக் கேட்கவும், 
சமாதானமும், அறிவுரையும் கூறக்கூடிய பக்குவம் தனக்கு 
ஏற்பட்டிருந்ததைத் தான் உணர்ந்ததாகவும் கூறினர். 
மேலும் அவர் தன் சகோதரி, உனக்கு இவற்றைக் கேட்டுக் கோபமே வரவில்லையா? உன் உணர்ச்சி நரம்புகள் செத்து விட்டனவா? என்று கேட்டதாகவும் கூறினார்.
இந்த நிலைதான் ஆன்மீக சாதகர்களுக்கு ஏற்பட வேண்டிய அகமாற்றத்தின் உயர் நிலை. இந்த மாற்றம் பிறருக்குத் தெரிய வேண்டும். நமது செயல்கள் நமது அமைதி நிலையைப் பிறருக்கு உணர்த்த வேண்டும். 
எனக்குள்ளே இருக்கின்ற எல்லாமே, எண்ண வடிவில்தான் இருக்கின்றன. வீடு, சொத்து, உறவுகள் எல்லாமே எண்ணம் தான். இவை பற்றிய எல்லா எண்ணங்களையும் என்னிலிருந்து நான் நீக்கி விட்டால்
 அது தான் விடுதலை. இதற்கு அறிவுத் தெளிவு தான் தேவை. 
இவற்றைப் பற்றி ஏற்றி வைத்துப் பார்க்காமல், வெறும் உண்மையை மட்டும் பார்க்கத் தெரிந்துகொண்டுவிட்டால், இவற்றினால் ஏற்படும்
 இன்ப துன்ப இழப்புகள் என்னைப் பாதிக்காது.
 வீடு, கார், நகைகள் என்பதெல்லாம் உண்மையில் என்ன? வெறும் கல்லும், மண்ணும், தகரமும், கரியும் தானே! இவற்றிற்கு மதிப்பு எதனால் ஏற்பட்டது? நான் ஏற்றி வைத்துப் பார்த்ததால் தானே?
இப்பொழுது பொருளாதாரச் சீர்குலைவு எல்லா நாடுகளிலும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனாவில் 
ஒரு நகரத்தில் 
வாழ்ந்த அத்தனை குடும்பங்களும் இடம் பெயர்ந்து கிராமங்களை நோக்கிச் சென்று விட்டதாகச் செய்தி. தொழிற்சாலைகள், பெரிய வேலை வாய்ப்புகள் என்று நகரங்களைத் தேடிக் கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக 
வந்தது மாறி, இப்பொழுது மீண்டும் கிராம வாழ்க்கைக்குத் திரும்புகின்ற நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பொருளாதார பாதிப்பு ஆன்மீக அகமாற்றம் ஏற்பட்டவருக்கு இருக்காது. ஏனெனில் பொருளின் உண்மை மதிப்பை அறிந்தவராக எப்பொழுதும் அவரால் செயல்பட முடியும்.
நாம் அறிந்திருக்கும் பல உண்மைகள் ஆராய்ந்து பார்த்தால் உண்மையல்ல என்பது தெரிய வரும். சூரியன் உதிப்பதாகவும், மறைவதாகவும் கூறுகின்றோம். ஆனால் சூரியன் தோன்றுவதுமில்லை; மறைவதுமில்லை
. பூமிதான் அதைச் சுற்றிச் சுழல்கிறது. அதனால் இரவு 
பகல் ஏற்படுகிறது. காலில் முள் குத்திவிட்டது என்று கூறுவது பிழை. முள்ளில் காலை வைத்துவிட்டேன் என்று சொல்வதுதான் சரி. 
அப்படிச் சொல்கிறோமா?
வாழ்க்கையில் மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வயது கூடிக்கொண்டே போகிறது. காலம் 
போகிறது என்று சொல்கிறோம். ஆனால் உண்மையில் காலம் போய்க்கொண்டிருக்கிறதா? காலம் என்பது முடிவற்ற 
ஒரு பாதை. அது எங்கும் செல்வதில்லை. அது நமக்கு முன் விரிந்திருக்கிறது.
 காலம் நகர்வதில்லை. நமது வாழ்க்கைதான் போய்க்கொண்டிருக்கிறது. காலம் ஒளியை வைத்துத் தான் கணக்கிடப்படுகிறது. நாம் ஒரு 
செகண்ட் என்று சொல்கின்ற கால அளவை அணு அளவில், நனோ செகண்டில் அளந்து பார்த்தால், ஒன்றின் கீழ் 17 கோடி பில்லியன் செகண்ட் என்று அதற்குரிய நேரமாகக் கணக்கிடப்படுகிறது. இதை நம்மால் புரிந்துகொள்ள முடியுமா?
மேலும் காலம் அல்லது நேரம் என்பது இரண்டு வகைகளாகக் குறிப்பிடப்படுகின்றது. ஒன்று காலத்தால் கணிக்கப்படுகின்ற நேரம். அடுத்தது உள்ளத்தால் கணிக்கப்படுகின்ற நேரம். எடுத்துக்காட்டாக அறுபது வயது ஆன ஒருவர் இருபத்தைந்து வயது இளைஞனாக என்னை நான் 
உணருகிறேன் என்று கூறினால், அவரது மனநிலை அவ்வளவு இளமையாக அவருக்குச் செயல்படுகிறது என்று பொருள். இவற்றில் 
காலம் எங்கே இருக்கிறது? கடந்து வந்த வாழ்க்கையா? 
மனமா? மனித அளவுகளில் காலம் வரையறைக்கு உட்பட்டது. ஆனால் காலத்திற்குள் அகப்படாதது பிரம்மம். அது எல்லைகள் அற்றது. அளவுகள் அற்றது. காலம் என்பது விரிக்கப்பட்ட பாதை. இதில் 
‘இப்பொழுது’ என்பது மட்டுமே உண்மை. இந்த இப்பொழுது என்ற கணத்தில் தான் விழிப்புணர்வு முழுமையாக இருக்கிறது என்பதாகும் 




 

பிறந்தநாள் வாழ்த்து திரு ,அருளானந்தம் உதயகுமார் (உதயன்) 16 -04. 2024

யாழ்  நல்லுரை பிறப்பிடமாகவும் கோப்பாயில்  வசித்து வந்தவரும் தற்போது  சுவிசை  வசிப்பிடமாகக்கொண்ட திரு :அருளானந்தம் உதயகுமார்
 (உதயன் -குமார் )அவர்களின்  பிறந்த நாள்  16,04,2024.அன்று  
 .இவரை அன்பு மனைவி அன்புப்பிளைகள்   அன்பு அப்பா  அன்புச்சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெறமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் 
 இவரை  சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் சுவிஸ் முருகன் 
சுவிஸ் அம்பாள் இறை ஆசியுடன் 
   இனிக்கும் இந்த பிறந்த நாளில் ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்  வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி 
 பிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன் 




 

உங்கள் அனை வருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

என் இனைய வாசகர்கள் முகநூல் நண்பர்கள் உற்றார் உறவினர் உலகத் தமிழர் அனைவருக்கும் இனிய சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள் சித்திரை மாதம்
பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த
 காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இது திகழ்கிறது. 
அந்த வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.
மகிழ்ச்சி நிறைந்த மங்கலகரமான  தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. சித்திரையில் தொடங்கப்படும் பணிகள் வெற்றிகரமாக அமையும் என்பதே நம்பிக்கை.  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது  இனிய  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நாட்டினதும், நமதும் நலனுக்காக வீட்டிலிருந்து 
கொண்டாடுவோம்
  எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன .
அனை வருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன்


திருமணவாழ்த்து திரு திருமதி தர்மராஜா விஜி 12.04.2024

யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவில்  வசித்து  தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  தர்மராஜா தம்பதிகளின்  
(தர்மா&விஜி) அவர்களின்  திருமண நாள் இன்று..12-.04-.2024.46வது வருட  திருமண நாள் வாழ்த்துகள்
 தம்பதியினரை
அன்புப்பிள்ளைகள், 
மருமக்கள் சகோதர்கள்,  பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள்  தம்பதியினரை சுவிஸ் முருகன் சுவிஸ் ஸ்ரீ விஸ்ணுதுர்கை அம்மன் சுவிஸ் சிவன் நல்லூர் கந்தன் நல்லுர்க்கந்தன் இறை அருள் பெற்று
 வாழ வாழ்த்துகின்றனர் .
திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>
திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!
 இனிய மணமக்களே
அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணையும்
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்.. 
 கையோடு கை சேர்த்து இணைந்தது
வாழ்க வளமுடன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
இதயங்கள் சகலசெல்வங்களும்பெற்று  அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக
தம்பதியினரின்  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன்





திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி சாந்தி 10.04.2024

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் 
வசிக்கும் திரு திருமதி பாலமுரளி தர்மசாந்தினி (முரளி, ஓட்டுமடம் &சாந்தி,நவற்கிரி ) 
தம்பதிகளின் இருபத்திஆறாவது  திருமணநாள் 10.04.2024.இன்று குடும்ப உறவுகளுடன் தமது இல்லத்தில் கொண்டாடுகின்றனர் 
தம்பதியினரை அன்பு.
அம்மாஅன்புப் பிள்ளைகள் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளைகள்  மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் இவர்களை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்ஒஸ்லோ முருகன் . மற்றும்  நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷசீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க 
வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
திருமண நாள்வாழ்த்து கவிதை.
திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிக மிக முக்கியமான நாள் ஆகும். திருமண வாழ்க்கை மட்டும் நல்லபடியாக அமைந்தால் அதைவிட பெரிதாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன இருக்கப்போகிறது. திருமண நாளின் நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். 
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
எங்கள்  உள்ளம் கனிந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.தம்பதியினர் 
வாழ்கவளமுடன்.


 



 

பிறந்தநாள் வாழ்த்து திருமதி செல்வகுமாரன் வியையமாலா( மாலா )10-04,24

யாழ் பளையை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வகுமாரன் வியையமாலா  அவர்களின்  பிறந்தநாள்-10-04-2024 -இன்று .இவரை  அன்புக்கணவர் அன்புப் பிள்ளைகள் அன்பு, அப்பா அம்மா  அன்புச்  சகோதரசகோதரர்கள் பெரியோர்கள்சிறியவர்கள் மாமா  மாமி மச்சான் 
மச்சாள் மார்  ,மற்றும்
உறவினர்கள் ,நண்பர்கள் இவரை சகல வளமும் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
நோய் நொடி இன்றி இறை ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன்  





 

பிறந்தநாள் வாழ்த்து இரட்டையர்கள் அற்புதராசா இந்துசன்-இந்துசா ,09-04-24

யாழ் தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமா​வும் சுவிஸ்-மற்றும்  கனடாவை  . வதிவிடமாகவு​ம் உள்ள .திரு அற்புதராஜா வின் இரட்டையர்கள்  இந்துசன்-இந்துசா (இந்துசன்-சுவிஸ்-தங்கம், கனடா) இருவரின் பிறந்தநாள் 09-04-2024..இன்று இவர்களை  அன்பு அம்மா மனைவி கணவன் அன்புப் பிள்ளைகள் சகோதர்கள் மாமி மருமக்கள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி பேரப்பிள்ளைகள் தங்கை, மச்சான் மச்சாள்மார் ம​ற்றும்
நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.தோப்பு போதிப்பிள்ளையார். சுவிஸ்முருகன் கனடா முருகன்  இறை அருள் பெற்று​
 பல்லாண்டு. பல்லாண்டு காலம்  நீடூழி வாழ்கவாழ்க 
வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
இவர்களை அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 





 

இருபது வகையான முருகப்பெருமானுக்கான காவடிகளும் அதன் பலன்களும்

முருகப்பெருமானின் மூலம் அருள்கிடைக்க பலரும் பல வகையான காவடிகள் எடுத்து அவரவர் தேவைகளை ஈடுசெய்வர். முருகப்பொருமானுக்கு இருபது வகையான காவடிகள் உண்டு. 
நாம் இந்தக் காவடிகளின் வகையையும் அதன் பலன்களையும் இன்று பார்ப்போம்.
தங்க காவடி 
நீடித்த புகழையும், 
வெள்ளிக் காவடி
 நல்ல ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. 
பால்க் காவடி 
செல்வ செழிப்பையும், 
சந்தனக்காவடி 
வியாதிகளை நீக்கியும்,
பன்னீர்க் காவடி 
மனநல பாதிப்புகளை நீக்கியும் அருள்கிறது. 
சர்க்கரைக் காவடி 
சந்தான பாக்கியம்,
 அன்னக்காவடி 
வறுமை நீக்கும், 
இளநீர்க் காவடி
 சரும வியாதி போக்கும், 
அலங்காரக் காவடி 
திருமணத்தடை நீக்கும், 
அக்கினிக் காவடி
 பில்லி, சூனியம் செய்வினை அகற்றும்.
சர்ப்பக் காவடி 
குழந்தை வரன் அளிக்கும்.
 கற்பூரக் காவடி
 பூரண ஆரோக்கியம் அருளும்.
 தேர்க்காவடி
 உயிராபத்துகள் நீக்கும்
மச்சக் காவடி
 இறையருளுக்கு நன்றி தெரிவிக்க, 
மஞ்சள் காவடி
 நீதி, நேர்மையான தீர்ப்பு கிடைக்க, 
 சேவல் காவடி
வாழ்வில் வெற்றிகளை குவிக்க, 
 பழக்காவடி 
எதிரிகள் தொல்லை நீங்க, செய்யும் தொழிலில் வெற்றியை பெற, 
மயில் காவடி 
இல்லத்தில் இன்பம் நீடித்திருக்க, 
புஷ்ப காவடி 
எடுப்பது நினைத்ததை நடத்தி முடிக்கும்.
 வேல் காவடி 
எதிரிகளை நடுநடுங்க வைக்கும் வேலனின் பூரண அருளும், 
வீரமும் கிடைக்க செய்யும்.என்பதாகும்


பிறந்தநாள் வாழ்த்து செல்வி ஸ்ரீரன்சன் பிறைஅரசி 01.04.2024

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு திருமதி ஸ்ரீ ரன்சன் வாணி தம்பதிகளின் செல்வப்புதல்வி பிரான்ஸ் நாட்டை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட செல்வி ஸ்ரீ ரன்சன்  பிறைஅரசி அவர்களின் பதின் ஏழாவது  பிறந்தநாள்நாள் 
01-04-2024.இன்று குடும்பஉறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா 
சகோதர்கள் மற்றும் உறவினர்கள் இவரை
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நல்லூர் கந்தன் சன்னதி முருகன் பிரான்ஸ் அம்மன் பிரான்ஸ் முருகன் 
இறை ஆசியுடன் உன் பிறந்த தினமான இன்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக ன்
பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன. 


Powered by Blogger.