தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம்

சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். சொர்ண கர்ஷண பைரவரை தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலம் சனி 
ஓரையிலும் தரிசிப்பது 
நல்ல பலன் தரும். சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு வடை மாலை சாத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன்,
 இவருக்கு நைவேத்தியமாக 
தயிர்சாதம் படைத்து 
வழிபடுவதும் சிறப்பாகும். ஐந்து புதன் கிழமைகளில் உங்கள் அருகில் இருக்கும் காலபைரவர் அல்லது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர், சன்னிதானத்தில், இரண்டு நெய் தீபம் பைரவர் சந்நிதியில் ஏற்றி, குறைந்தது கால் கிலோ டைமண்ட் கல்கண்டு படைத்து பதினைந்து நிமிடமாவது உங்கள் பிரார்த்தனைகளை மனதில்
 நிறுத்தி தியானம் செய்வது பலன் தரும்
. சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்குப் போக இயலாதவர்கள் பின்வரும் மந்திரங்களை தேய்பிறை அஷ்டமியன்று
 ஒரு மணிநேரம் வரை ஜபித்துவரவும். ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி: ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி: தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபை
ரவ ப்ரசோதயாத்
! ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம்: ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராய ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய வித்வேஷனாய மஹா பைரவாய 
நமஹ,ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்!
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </


பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா. 28.02.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா.
( தர்மா ) அவர்களின் பிறந்த நாள் 28.02.2019..இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் அன்புஅம்மா ,

 மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் இவரை வாழ்த்துகின்றனர்
பிறந்த நாள் கவிதை

குறிஞ்சி பூப்பது
பனிரெண்டு வருடத்திருக்கு
ஒரு முறைதானாம் ..,
யார் சொன்னது????
வருடத்திற்கு ஒருமுறை
பூக்கிறது
உன் பிறந்த நாளாக!!!

புத்தம் புது நாள்…,
புத்தம் புது வருடம்…,
புத்தம் புது வாழ்க்கை…,
எல்லா சோகங்களும்,,
கஷ்டங்களும்..,
கரைந்துவிட …,
இனி….,
உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி மட்டுமே
பொங்குவதற்கு
இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி
உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்
நவற்கிரி அப்பா வயிரவர்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலய வருடாந்த மாசிமக மஹோற்சவ பெருவிழா

மாத்தளையில்   சிவபூமி எனப்படும் இலங்கை மத்திய மலைநாட்டின் மாத்தளை மாநகர் பண்ணாகமம் பதி புண்ணியசஷேத்திரத்தில் ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து அருள்புரியும் சர்வலோகமாதா சர்வலங்காரநாயகி அகிலாண்டநாயகி ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரி பராபட்டாரிஹா
ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலய வருடாந்த மாசிமக மஹோற்ஸவப் பெருவிழாவின் இரதோற்ஸவ
 பஞ்சரதோற்ஸவப் பெருவிழா.
அம்பிகையின் பஞ்சரதபவனி 19.02.2019 செவ்வாய்க்கிழமை காலை ரதாரோகணம் (தேர்வீதியுலா) ஆரம்பமாகி நகர்வலம் இடம் பெற்று 20.02.2019 புதன்கிழமை மாலை ஆலயத்தினை வந்தடைந்தது ரதவரோகணம் இடம் பெற்று அம்பாள் பச்சை சார்த்தி திருத்தேரில் இருந்து ஆலயத்திற்கு எழுந்தருளும் திருக்காட்சி காண கண் ஆயிரம் வேண்டும்.
பேர் கொண்ட அறிஞரும் கலைஞரும் சேரும்
சீரிய பண்ணாகமம் பதியது ஓங்கும்
கார் கண்ட மயிலென மகிழ்வுடன் அடியார்
உன் பாதம் பணிந்திட ஊக்கமாய் அருள்வாய்
ஏர்முதல் தொழில்களும் எம் மண்ணில் ஓங்கிட

சூலங்கொள் கரத்துடனே கருணையருள்வாய்
தேர் கொண்ட நாயகி பாரிலே அருள
மாரியம்மா பள்ளி எழுந்தருளாயே

மாசியாம் திங்கள் மகத்தினில் நீயோ
மாசில்லா இரதம் தனில் பவனியும் வருவாய்
தேசுடன் உன்முகம் அருளினை பரப்பும்
தேவியே உன்வரம் தேவையை நிறைக்க

காசியும் கங்கையும் போன்ற நதியாம்
மாவலி கங்கையோ உன்னைத் தாலாட்ட
நேசமாய் அடியார்க்கள் வாழ்வது சிறக்க

நாயகியே பள்ளி எழுந்தருளாயே.
பொன்னிலங்கு ஈழமதன் மத்திய மலைநாட்டில்
தொன்று தொட்டுப் புகழ்படைத்த மாத்தளையின் பண்ணாகமம்
என்றுரைக்கும் ஊரினிலே எழுந்தருளி வந்த அம்பாள்
என்றும் எமக்கருள் புரிவாள் ஏற்றிடுவோம் 
அவள் தாளை^
அஞ்சலென அபயகரம் காட்டி நிற்கும் அம்மையவள்
பஞ்சரதப் பவனியிலே முதன் முதலில் வந்தவளாம்
செஞ்சொற் கவிஞர்களால் பாடல் பெற்ற தலமதுவாம்
கெஞ்சி நிற்கும் அடியவரின் பஞ்சமதைப் போக்கிடுவாள்
மாத்தளையின் பண்ணாகமம் என்னும் ஒரு பதியினலே

பூத்தமுகம் புன்னகை செய் ஆத்தாளாம் அன்னையவள்
பார்த்தவர்கள் வணங்கி நிற்கும் பசிய வில்வ மரத்தடியில்
தீர்த்து நிற்கும் வினையகல அன்னையவள் 
தோன்றினலே
திரைகள்சேர் கடலால் சூழ்ந்த தீவதாம் இலங்கை தன்னில்
வரைகளும் ஓங்கி நிற்கும் மாத்தளை மண்ணில் இன்று
உரைகளால் புகழை சொல்ல முடியாத வகையில்
இசைகளும் இல்லாப் புகழ்சேர்
மாத்தளை தாயே போற்றி

சுகத்துடன் எம்மை ஜெகத்தினில் வாழ
நல் வழி காட்டிடவே
மகத்துவ மாசிமகத்தினில் ரதத்தில்
ஏறி உலா வரும் அன்னை
புகழுடன் வாழ எமக்கருள் செய்து
அவனியிலே துயரங்கள் நீங்க

ஜெகம் தனில் பவனி வருகின்ற அம்மைக்கு
பல்லாண்டு கூறுதுமே
நீரால் வளஞ் பெறும் மண்ணாம்
மாத்தளை என்னும் ஒரு பதியில்
பரோர் போற்றும் பழம் பெருங் கோயில்

முத்துமாரி தலத்தில்
தேரோ ஐந்தும் பவனி இன்று
வருவதை நாம் வாழ்த்தி
ஊரார் இணைந்து மாத்தளையில்
பல்லாண்டு கூறுதுமே
”தாயேயாகி வளர்தாய் போற்றி போற்றி எமைக்காக்கும் ஸ்ரீமுத்துமாரியம்மையே 
போற்றி போற்றி”
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து. திரு,செல்வரத்தினம், பகீதரன்,23,02,19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்   சுவிஸ்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு :செல்வரத்தினம்,பகீதரன்  அவர்களின்  பிறந்த நாள்   23,02,2019.இன்று
 .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு மக்கள்   சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெருமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை  ஆசியுடன்  எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி 
நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி தர்மதேவன்.22.02.19

 கனடா மொன்றியலில் வசிக்கும் திரு .திருமதி  தர்மதேவன் தர்சி       
  தனது பிறந்தநாளை22.,02,2019,இன்று, அவரது    இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  கொண்டாடுகிறார்.இவரை அன்புக்கணவர்  அன்புப் பிள்ளைகள்  அன்பு அப்பா அம்மா மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் பேத்தி
 பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் ஆசியுடன்  என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து.திரு.இராசெந்திரம் கிருசாந்தன் .22.02.19

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு இராசெந்திரம் கிருசாந்தன் அவர்களின் பிறந்த நாள் .22.02.2019 .இன்று
இவரை அன்பு அப்பா அம்மா சகோதர்கள் அம்மம்மா மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி  சகலகலைகளும்பயின்று   இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
  அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன.. .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இன்பமோகன் கவிசன் 22.02.19

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் .
 ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி   இன்பமோகன் தம்பதிகளின்  செல்வப்புதல்வன்  கவிசன்  அவர்களின் 
 பிறந்தநாள்.22.02.2019  இன்று. இவரை அன்பு அப்பா  அம்மா அன்பு அக்கா  அப்பம்மா  மற்றும்  மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார்  அப்பாப்பா  அப்பம்மா   மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை மாவிட்டபுரம் கந்தசுவாமி 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
  நோய் நொடி இன்றி சகலகலைகளும்பயின்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து   பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கு மனம் இறங்கிய பைரவர்

முன்னொரு சமயம், பைரவர் விஷ்ணுபகவானை பார்க்க வைகுண்டம் சென்றார். அப்போது அங்கு காவலுக்கு நின்றிருந்த பூத தலைவரான “விஷ்வக்ஸேனர்” பைரவரை வைகுண்டத்தில் அனுமதிக்காமல் தடுத்தார். இதனால் கோபம் கொண்ட பைரவர், விஷ்வக்ஸேனரின்  கன்னத்தில் ஓங்கி அறைந்து, அவரை உயிர் இழக்கச் செய்து, வைகுண்டத்தில் கோபமாக நுழைந்தார்.
விஷ்ணுபகவான் சயனித்திருந்தாலும் பைரவர் கோபமாக வருவதை அறிந்து அவசர அவசரமாக எழுந்து வரவேற்று 
மரியாதை செய்தார்.
“நான் வந்திருப்பதை ஞானத்தால் அறிந்தும் அதை பற்றி பெரியதாக நினைக்காமல் சயனித்து கொண்டிருந்தாயா? உன் காவலன் என்னை  அலட்சியம் செய்ததை அறிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருந்த உன்னை என்ன செய்கிறேன் பார்.” என்று கூறிகொண்டே விஷ்ணுபகவானை  நெருங்கினார் பைரவர்.
“பைரவா… உனக்கு ஏன் அவ்வளவு சிரமம். நானே என் தலையை அடித்து கொள்கிறேன்“ என்று கூறி தன் தலையை பலமாக அடித்து கொண்டார் பகவான். இதனால் அவருடைய தலைஇரண்டாக பிளந்தது. ரத்தம் நிற்காமல் வெளியேறியது. அதனால் விஷ்ணுபகவானின்  உடலில் இருந்த சக்திகள் குறைந்து மயங்கி விழுந்தார்.
ஸ்ரீமந் நாராயணனின் தலையில் இருந்து வடியும் ரத்தத்தை தன் கையில் இருந்த பிரம்மனின் மண்டை ஓட்டில் பிடித்தார் பைரவர். தம் கணவரின் நிலை கண்டு கலங்கினார்கள் ஸ்ரீதேவியும் பூதேவியும். அதனால் பைரவரிடம், “தயவு செய்து அவரை காப்பாற்றி தாருங்கள்”  என்று வருத்ததுடன் கேட்டு கொண்டார்கள்.
பெண்களின் கண்ணீரை கண்ட பைரவர், மனம் இறங்கினார். விஷ்ணுபகவானை மயக்கத்தில் இருந்து விடுவித்தார். வைகுண்டத்தின் காவலரான விஷ்வக்ஸேனருக்கும் 
உயிர் தந்தார் பைரவர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </



பிறந்தநாள் வாழ்த்து செல்வி இன்பமோகன் தர்விகா -16.02.19

யாழ் மாவிட்டபுரம்  சங்கோலையை  பிறப்பிடமாகவும்
 ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி  இன்பமோகன் தம்பதிகளின்  செல்வப்புதல்வி.
;தர்விகா அவர்களின் 
 பிறந்தநாள். 16.02.2019.இன்று.  இவரை அன்பு  அப்பா அம்மா அன்புத்தம்பி   அப்பம்மா  மாமிமார்  மாமா மார் சகோதரர்கள்  மற்றும் 
  பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   
மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி ...கோப்பாய் நண்பர்களும்..இவரை   .மாவிடடபுரம் முருகன் மற்றும் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
அன்பிலும்  நோய் நொடி இன்றி  சகல கலைகளும் பயின்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து    உலகமும் உறவுகளும் போற்ற   சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>


இந்துக்களின் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் யேர்மன் வழிபாட்டு ஸ்தலங்களும்!

இந்துக்களின் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் யேர்மன் வழிபாட்டு ஸ்தலங்களும்! 
ஸ்ரீ நாகபூசணி அம்பாள் Frankfurt am Main
Information
Phone : 0049 (0)69-97945618
Fax : 0049 (0)69-97945618
Email : info(at)srinagapoosaniampal.com
பூசை திங்,புத,வியா 19:00 ; செவ்,வெள் 19:30
Web : http://www.ammankovil.de/

Address
Adelbert Strasse.61-63
60486 Frankfurt am Main Germany
சமயம்
[தொகு]இந்து சமயம்
யேர்மன் தமிழர்களில் ஏறக்குறைய 45,000 பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களால் 1983இல் யேர்மனியில் ஒரு பலமான இந்துக்கட்டமைப்பு உருவாக்கப் பட்டது. யேர்மன் வாழ் தமிழர்கள் ஒரு இடத்தில் என்றில்லாது யேர்மனி முழுவதிலும் பரந்து வாழ்கிறார்கள். இவர்களால் இதுவரையில் 24 இந்துக்கோயில்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இவைகளில் அனேகமான கோயில்கள் கெலர் எனப்படும் நிலக்கீழ் அறைகளிலும், வீடுகளின் ஏதோ ஒரு பகுதியில், ஒரு அறையிலும் என்றே ஆரம்பிக்கப் பட்டன. இவைகளில் சில சிலகாலங்கள் செல்ல வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, பெரிதாகப் புனரமைக்கப்பெற்றும் உள்ளன. அவைகளில் ஹம் காமாட்சி அம்மன் ஆலயம் குறிப்பிடத்தக்க ஒரு பெரிய கோயிலாகும். ஹம் காமாட்சி அம்மன் ஆலயம் ஐரோப்பியாவில் உள்ள இந்துக் கோயில்களில் இரண்டாவது பெரிய கோயிலாகக் கருதப்படுகின்றது.
தமிழர்களின் இந்துக் கோயில்கள்
சீசெல்சு அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம்
பக்நாங் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம் (Sri Meenadchi Temple, Eberhard Str.8, 71522 Backnang, Germany)
மயூரபதி ஸ்ரீ முருகன் ஆலயம் (Urban Str 176, 10961 Berlin)
வள்ளி தேவா சேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிமணியர் ஆலயம் (GoldSchmidt Str 5, 45127 Essan)
ஸ்ருட்கார்ட் சித்திவிநாயகர் ஆலயம் (Stuttgrt, Germany)
ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் ( Sri Katpaga Vinayakar Temple, Intze Str-26, 60314 Frankfurt, Germany)
ஸ்ரீ கனக துர்க்கா அம்பாள் ஆலயம் (Robert koch Str 05a, 58239 Schwerte)
ஸ்ரீ சொர்ணநாகபூஷணி அம்பாள் ஆலயம் (Girmesgath 95, 47803 Krefeld)
ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயம் (Mönchengladbach)
ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் (Turnstrasse. 8a, 75173 Pforzheim)
ஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமி ஆலயம்
ஸ்ரீ முல்கைம் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆலயம்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் (Sri Muthumari Amman temple, Empelder str 96, 30455 Hannover)
ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் (Bredenscheider str 119, 45527 Hattingen)
ஹம் காமாட்சி அம்மன் கோயில் (Hindu Shankara Sri Kamadchi Ampal Temple, Siegenbeck strasse 4-5, 59071 Hamm-Uentrop, Germany)
ஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் (Ferdinand Poggel str 25, 59065 Hamm)
ஹம் திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம் (Murukan Hindu tempel, Roon Str.2a, 59065 Hamm
http://ta.wikipedia.org/wiki/யேர்மன்_தமிழர்
நவக்கிரி இணையம் >>>


பிறந்தநாள் வாழ்த்துதிரு திரு மதி இன்பமோகன் -09.02.19

யாழ் புனகரியை   பிறப்பிடமாகவும்
  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி  இன்பமோகன்  .அவர்களின் ;
 பிறந்தநாள். 09.02.2019.இன்று.  இவரை அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள்  மாமிமார்  மாமா மார் சகோதரர்கள்  மற்றும் 
  பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   
மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி ...கோப்பாய் நண்பர்களும்..இவரை   .மாவிடடபுரம் முருகன் மற்றும் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
அன்பிலும்  நோய் நொடி இன்றி  சகல கலைகளும் பயின்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து    உலகமும் உறவுகளும் போற்ற   சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மஞ்சளின் பெருமை முன்னோர் சொல் வேதம்

மஞ்சளின் பெருமைஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவசியமில்லை’ என்பது முன்னோர் வாக்கு. 
பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கிறது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி, பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு,
குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும் “தாலிக் கயிறில்’ பூசப்படுகிறது.
அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில், பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது.
மஞ்சளின் மருத்துவ குணம்
நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான், இந்து கலாசாரத்தில் முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு 
கொடுக்கப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரும் கண்டு கள்வதாய் இல்லை.
மஞ்சளின் முக்கியத்துவம்:
இந்து கலாசாரத்தில், சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுவது போல் மற்றவர்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சள் கலந்து தயாரிக்கும் பழக்கம் உலக நாடுகளில் காணப்படுகிறது. மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே தான், போட்டிகள், தேர்வுகள், நேரடித் தேர்வுகளைச் சந்திக்கும் நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது என்று சொல்லப்படுகிறது.
சமையலில் மஞ்சளின் பங்கு
இந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத, இந்திய சமையல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இது இயற்கையான நிறமியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது
. இந்தியாவின் தென்பகுதிகளில், சாம்பார், முட்டைகோசு கறி போன்றவற்றை, மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதேபோல், வடஇந்தியர்கள் கொழுக்கட்டையில் மஞ்சளை பயன்படுத்துகின்றனர். இது ஊறுகாயை பதப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது.
அழகு சாதனப் பொருள்

வெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை.மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர்.

இது முகத்தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்’சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது. இன்னும் சில வீடுகளில் எறும்புகள், பூச்சிகள், கரையான்கள் போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

நோய் தீர்க்கும் அருமருந்து மஞ்சள்

* வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.

* உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.

* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.

* உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.

* மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.

* மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால்,
 மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து:திரு சுப்பிரமணியம் குமாரசாமி.07.02.19

 யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபருமான திரு சுப்பிரமணியம் குமாரசாமி (சாமி).அவர்கள்..07.02.2019  இன்று  பிறந்தநாளை  பிள்ளைகள் மருமக்கள் சகோதரர்கள் மச்சான்மார் மச்சாள் மார்
 பெறமக்கள்   மக்கள் பெரியப்பா ,பெரியம்மாசின்னம்மா சித்தப்பா சித்தி மார்
மாமா மாமி மார்  உற்றார் உறவினர்
 நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர்  சிறுப்பிட்டி மணோன்மணி அம்மனைவேண்டி வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன்இணைந்து இறைஅருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  நோய் நொடி இன்றி 
 சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாஇன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்ழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 01.02.19.

யாழ். மறுவன் புலத்தை  பிறப்பிடமாகவும் தற்போது   சுவிஸ் சூரிச்சை வசிக்கும்  திரு திருமதி சுதாகரன் (ஜசோதா) அவர்களின் . 01.02.2019 இன்று   பிறந்த நாள்  இவரை  
அன்புக்கணவர்  அன்பு  மகள் மகன் சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை   மறுவன் புலத்து அம்பாள் இறைஅருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன 
   வாழ்கவளமுடன் .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



Powered by Blogger.