ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானம்

ஓம் நமோ நாரயணா...
பொன்பதி பக்த சிநேகிதர்களுக்கு அன்பு வணக்கங்கள். இனிவரும் பொழுதுகள் எம் பெருமாள் உங்களை ஏந்தும் பொழுதுகளாக உங்கள் அழைப்பினை கேட்டு ஓடி வந்து உங்கள் சுமைகளை சுமக்கும் பொழுதுகளாகட்டும். எம் பொன்னாலை வரதராஜ பெருமாள் தரிசனங்கள்,
 எழுந்தருளி கோலங்களை காணவும் பகவான் பெருமைகள் அவன் அற்புதங்களை உணரவும் வழி செய்யுங்கள் அன்பர்களே. 
பொன்னாலை நாதன் பற்றி நாங்கள் அறியாததா? இங்கே எதை அறிய என்று எண்ணம் 
வேண்டாம் அன்பர்களே. கேட்டலுக்கும் கண்ணால் 
காண்பதற்கும் மெய்யுணர்வாய் உணர்வதற்கும் எத்தனை வேறுபாடுகள் உள்ளன. எம் பொன்னாலை வரதன்! ஸ்ரீஸ்ரீனிவாசனின் திகட்டாத அன்பையும் அருளாட்சியையும் மெய்யன்போடு உணர்ந்தவரே அறிவர். உணர்கின்ற அற்புதங்களை சொல்லொணாமல் தவிப்பர். 
அன்பர்களே நானும் சிறு தாசனாய் அவனை உணர்கிறேன் இன்னும் இன்னும் உணர முற்படுகிறேன். "என்பதி அவனே என உணர்கிறேன் அவனின்றி அசைவு பெறேன். என் பதி உறை புண்ணிய
 க்ஷேத்திரம் இது... என உணர்கிறேன்" நீவிரும் உணர்வீர் உங்கள் நாதனின் அற்புத தலமிது. அவன் புகழை, நாமங்களை கேட்டாலே மரணபயம் நீங்கும் என்கின்றன 
பக்தர்களுக்கு அருள்புரிவார்  




பிறந்தநாள் வாழ்த்து திரு ஞாணலிங்கம் திலீபன் [ 27.07.15 ]

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு  ஞாணலிங்கம் திலீபன் தனது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக இன்று 27,07,2015 கொண்டாடுகிறார்.பிறந்த தினமான இன்றும்
 இவரை அன்பு மனைவி  பிள்ளைகள்  அண்ணா மார்  தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் 
மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் நண்பர்கள்   உறவினர்கள்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளை யார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றோம் ----
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிள்ளையார் புகழ் பாடும் இறுவட்டு வெளியிடப்பட்டது

நீர்வேலி வாய்க்காற்றரவைப் பிள்ளையார் புகழ் பாடும் ‘வரம்தரும் அருளோசை என்ற பக்தி இசைப் பாடல் இறுவட்டு வெளியீட்டு விழா கடந்த செவ்வாய் கிழமை இரவு இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாய்க்காற்றரவைப் பிள்ளையார் கோவில் பிரதம குரு ஆ.சந்திரசேகரக் குருக்கள் ஆசியுரையை வழங்கினார்.
சா.கோபாலசர்மா திருமுறை பாராயணத்தையும் ,மகோற்சவ குரு ஜெகந்நாதக் குருக்கள் வரவேற்புரையையும், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ 
சோமசுந்தரதேசிக ஞர்னசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளுரையையும் ,கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலஷண்முகன் வாழ்த்துரையையும் பாடலாசிரியர்  சைவப்புலவர் பொன். சுகந்தன் வெளியீட்டுரையையும் நிகழ்த்தினர்.
நீர்வேலியின் பண்பாட்டுப் பாரம்பரியம் பற்றிய நோக்காக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தின் பிரபல பாடகர்களான சீர்காழி சிவசிதம்பரம் உன்னிமேனன்
 உள்ளிட்டோரால் பாடப்பட்ட பாடல்களுக்கு தமிழக இசையமைப்பாளர் மு.பார்த்தீபன் இசையமைத்துள்ளார். இசை இறுவட்டை க.கணபதிப்பிள்ளை  வெளியிட்டு வைக்க பவானி களஞ்சிய உரிமையாளர் பொ.உதயன் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
கு.தியாகராஜக் குருக்கள் இ வண. சா.சோமதேவக் குருக்கள்  இ.சுவாமிநாதக் 
குருக்கள் ஆகியோர் கௌரவப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் க.ஆனந்தராசா,  சாரங்கா நகைமாட உரிமையாளர் ப.சிவபாஸ்கரன் , மாருதி ரேடர்ஸ் உரிமையாளர் அ.உமைநேசன்  
,உமா களஞ்சிய உரிமையாளர் எஸ். இந்திரகுமார்,  ஓய்வுநிலை கிராமிய வங்கி முகாமையாளர் க.முருகையா ,கிராம அலுவலர் சு.சண்முகவடிவேல் , சிறுப்பிட்டி நா.மயில்வாகனம் அச்செழு சி.திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் இறுவட்டின் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து திருதிருமதி பால முரளி தர்மசாந்தி [ 23.07.15 ]

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி   பால முரளி தர்மசாந்திதனது  பிறந்த தினத்தை  வெகு விமர்சையாக இன்று 25.0372015 கொண்டாடுகிறார்.
இவரை அன்பு கணவன்  பிள்ளைகள் அம்மா அண்ணா தம்மி மார்  அக்கா தங்கை  மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து ஹர்சன் அஞ்சலி -19.07.15.

 சுவிஸ்சை வதிப்பிடமாகக்கொண்ட ,ஹர்சன் அஞ்சலி   அவர்கள்
தனது முதலாவது பிறந்தநாளை வெகுவிமார்சையாக குடும்பஉறவுகளுடன் இன்று.19.07.2015 
கொண்டாடினர்  இவரை அன்பு  அப்பா   அம்மா மாமா சித்தி  அப்பப்பா அப்பம்மா அம்மப்பா அம்மம்மா சித்தப்பா மாமி  பேரன் பேத்தி  உற்றார் உறவினர்கள்  பல்கலை களும் பெற்று இறை அசியடன் சகல வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் . 





பிறந்த நாள் வாழ்த்து வீ ரகத்தி குணரத்தினம் -19.07.15.

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ்சை வதிப்பிடமாகக்கொண்ட திரு,வீரகத்தி குணரத்தினம்  அவர்கள்
தனது பிறந்தநாளை வெகுவிமார்சையாக குடும்பத்தினர்களுடன் இன்று.19.07.2015 
கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி  அம்மா மகள்மார்  சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உற்றார் உறவினர்கள்  இறை அசியடன் சகல வளங்களும் பெற்று பல்லாண்டு  காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

தேர்த்திருவிழா ஸ்ரீ விஸ்ணு துர்க்கை அம்மன்.18.07.15

சூரிச்சில் தேர்த்திருவிழா நிகழ்வு  ஸ்ரீ விஸ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் பக்தர்கள்  படை 
சூழ மிகவும்  சிறப்பாக இன்று .18.07.2வ.15. நடைபெற்றது அதன் ஒரு சில நிழல் படங்கள் இணைப்பு 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>






பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா.பாலையா .17.07.15-

நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .பாலையா
அவர்களின் அறுபத்தி ஐந்தாவது பிறந்தநாள் இன்று 17..07.2015.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,பிறநண்பர்கள் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறைஅருள் பெற்று இன்னும் பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.chஇந்த இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றனர்.,,,,,,....
சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷ மாக இன்று போல் என்றும் வாழ்க  எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


நமக்கு உபகயோமான பத்து முத்திரைகள்

“முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும் முழு உடலை கொண்டும் முத்திரை காட்டப்படும். புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய சிலைகளில் காணலாம்.
பரத நாட்டியத்தில் 200-க்கும் மேற்பட்ட முத்திரைகளும், மோகினி ஆட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முத்திரைகளும் கையாளப்படுகிறது. தாந்தீரிகத்தில் 108 முத்திரைகள் உள்ளன. அன்றாட நம் உடல் ஆரோக்கியத்திற்கு கீழ்க்கண்ட 10 முத்திரைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன..
1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.
1. அறிவு முத்திரை:
ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.
2. வாயு முத்திரை:
ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.
3. சூன்ய முத்திரை:
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும். தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.
4. பூமி முத்திரை:
மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து 
கட்டை விரலால் அழுத்தவும் – மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும். காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும். பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.
5. வாழ்வு முத்திரை:
சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.
6. ஜீரண முத்திரை:
நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.
7. இதய முத்திரை:
நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.
8. சூரிய முத்திரை:
மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.
9. நீர் முத்திரை:
சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.
10. லிங்க சக்தி முத்திரை:
இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது 
நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.
இந்த முத்திரைகளை செய்து உங்களில் மாற்றம் ஏற்படுகிறதா என்று பாருங்களேன்!
நன்றி..!
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

தலை வடக்கே வைத்துப் படுக்கக் கூடாதா?

வடக்கே தலை வைத்து உறங்கக்கூடாது, யமன் பிடித்துக்கொண்டு போய்விடுவான் என்று பல பூதாகரக் கதைகள் கேட்டிருப்பீர்கள். இது போன்று எழுதப்படாத நியதிகள் பல நம் கலாச்சாரத்தில் இன்றும் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதென்ன பகட்டா இல்லை நம்மை மிரளச் செய்யும் தந்திரமா? விளக்குகிறார் சத்குரு…
சத்குரு:
இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம்.
மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.
பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில், உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது. ஆனால் தென்துருவத்தை விட வடதுருவம் வலிமையானது. அதனால்தான் வலிமையான காந்த ஈர்ப்பின் காரணமாக முழுக் கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது.
அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 7, 8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4 அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள். வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான், பெரும்பாலான நாடுகள் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கின்றன.
ரத்தத்தின் முக்கியமான மூலப் பொருட்களில் இரும்பும் ஒன்று. ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை இருந்தால், மருத்துவர் உங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும் சாப்பிடக் கொடுப்பார். அதனால், ரத்தம் மூளையை நோக்கி இழுக்கப்படும். அது நல்லதல்ல. அது உடலில் இயல்பாக இருக்கும் ஓய்வு நிலையைக் பாதிக்கும்.
குறிப்பாக அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. அது உங்களுக்கு ஓய்வு நிலையைத் தராது. மேலும் பதட்டத்தைத்தான் கொண்டுவரும். கிழக்கே தலை வைத்துப் படுப்பதாலோ அல்லது மேற்கே தலை வைத்துப் படுப்பதாலோ எந்தப் பிரச்னையும் இல்லை.
அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள், மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள். அன்று கடல் அலைகள்கூட உயர உயர எழும்புகிறது. இயற்கையில் ஒவ்வொன்றும் 
மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.
ரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும் பாதிப்படைகிறீர்கள். வடக்கே தொடர்ந்து தலைவைத்துப் படுப்பவரை பிசாசு பிடித்துக்கொள்ளும் என கர்நாடகாவில் சொல்வதுண்டு. தொடர்ந்து நீங்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாவதால், பிசாசு போன்ற குணம் உங்களுக்கு வந்துவிடும் என்பதைத்தான் அப்படிக் குறிப்பால் சொல்கிறார்கள்!

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திருமதி . ஜீவா வசந்தா .07.07.15

வல்லுவெ ட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசில் வசிக்கும்   திருமதி . ஜீவா  வசந்தா வின் பிறந்தநாள்.07.07.2015,இன்று .இவரை அன்புக்கனவர்.அன்பு மகன்   குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பிகள்நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம்  நவக்கிரி.கொம்,  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


Powered by Blogger.