யாழ். நல்லூர் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ளது பக்தர்களுக்கு அறிவித்தல்

சுகாதார விதிகள், அறிவுறுத்தல்கள்,வழிகாட்டல்களை முழுமையாகவும், இறுக்கமாகவும் பின்பற்றி பக்தி பூர்வமாக நல்லூர் கந்தன் பெருந்திருவிழா நடைபெற பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கோரிக்கை
 விடுத்துள்ளார்.
நல்லூர் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில்,04-08-2012...இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் முழு வடிவம் வருமாறு,
நல்லைக் கந்தப் பெருமானின் வருடாந்தப் பெருந்திருவிழாவானது இம்மாதம் 13-08-2021.ஆம் திகதி கொடியேற்றத்துடன்
 ஆரம்பமாகவுள்ளது.
இவ்வேளையில் நாடெங்கும் ஏற்பட்டுள்ள கொடிய கொரோனா தொற்றின் தீவிர பரவல் நிலையைக் கருத்தில் கொண்டு தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார சட்ட நடைமுறைகள், விதிகள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்களை முழுமையாகவும், இறுக்கமாகவும் பின்பற்றி அமைதியாக ஆடம்பரமின்றி பக்தி பூர்வமாக இப்பெருந்திருவிழா நடைபெற பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க 
வேண்டும் என்றும்,
இக்காலச் சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது விடுக்கப்படும் சுகாதார அறிவுறுத்தல்களை சிரமங்கள் பாராது, பொறுப்புணர்வுடன் கடைப்பிடித்து வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்க்க பெருமனத்துடன் உதவ வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.