இந்த பொருட்களை விநாயகர் சதுர்த்தி அன்று நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் நன்மையாம்

விநாயகர் வழிபாடு என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவருக்கு படைக்கப்படும் பலவிதமான உணவுகள் தான்.
உண்மையான பக்தியுடன் என்ன படைத்தாலும் விநாயகப் பெருமான் ஏற்றுக் கொள்வார் என்றாலும் அவருக்கு பிரியமான சில குறிப்பிட்ட பொருட்களை படைத்து வழிபடுவதால் விநாயகரின் அருளை முழுவதுமாக 
பெற முடியும்.
விநாயகருக்கு படைக்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை தரக்கூடியதாகும்.விநாயகர் வழிபாடு
விநாயகரை எங்கு பார்த்தாலும் ஒரு நிமிடம் நின்று தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போடுவது நல்லது.
அவருக்கு எல்லா உணவுகளும் பிடிக்கும் என்றாலும், நம்மால் முடிந்த எந்த உணவை நைவேத்தியமாக படைத்து வழிபட்டாலும் அதை மனதார ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு வேண்டிய வரங்களை தந்து அருளக் கூடியவர் விக்னங்களை அழிக்கும் விக்னேஸ்வரர்
விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்
உணவுப் பிரியரான விநாயகருக்கு அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம், வாழைப்பழம், தேன், பால் ஆகியவற்றை 
படைத்து வழிபடலாம்.
பழங்களில் குறைந்தது 5 வகைகள் பழங்கள் வைத்து விநாயகரை வழிபடலாம். அதிகமாக எத்தனை வகை பழங்கள் படைக்க முடியுமோ 
படைக்கலாம்.என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.