உங்கள் மாங்கல்ய பாக்கியம் பெற இந்த விரதங்களை கடைப்பிடியுங்கள்

உங்கள் திருமண வயது பூர்த்தியடைந்தும் ஏதோ ஓர் காரணத்திற்காக திருமணம் தள்ளிபோகலாம். அல்லது உரிய வரன் கிடைக்காமல் 
போகலாம். இவை என்ன செய்தாலும் மனதிற்குள் ஏதோ ஓர் குறை இருந்துகொண்டே இருக்கும். 
இவ்வாறான சங்கடங்கள் தீர்க்க ஆன்மீகத்தில் சில விரத வழிப்பாட்டு முறைகள் இருக்கின்றன. அவற்றை மானசீகமாக மேற்கொள்ளும் போது அதற்குறிய பலன்களை நாம் பெறலாம். அவ்வாறான இரு விரத முறைகளை சுருக்கமாக தருகிறோம்.
சுக்ர வார விரதம்: 
நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும் .
தெய்வம் : பார்வதி தேவி 
விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்
 பலன் : மாங்கல்ய பாக்கியம்
 நவராத்திரி விரதம் 
நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை 
தெய்வம் : பார்வதிதேவி 
விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம்.
 பலன் : அனைத்து விதமான சுகங்களும் கிடைக்கும்




பிறந்த நாள் வாழ்த்து திருமதி லோவிதன் ரசிபா18,06,2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை வசிப்பிடமாகக்கொண்ட 
திருமதி லோவிதன் ரசிபா
    அவரின் பிறந்த நாள் 18,06,2024 இன்று தனது   குடும்ப உறவுகளுடன் 
  கொண்டாடாடுகின்றார் இவரை  அன்புக் கணவன் 
 அன்புப் பிள்ளைகள்,அப்பா அம்மா சகோதரர்கள்  மாமா மாமி மார் 
   மச்சான்  மச்சாள்   மருமகள் பெறாமக்கள்  
பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  குடும்பம்  உறவுகள்  உற்றார்  உறவினர்கள் அனைவரும்  இவரை நவற்கிரி பிள்ளையார் மற்றும்சன்னதி  முருகன் .நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர் 
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன


 

உங்கள் குடும்ப பிரச்சினை தீர, பணவரவு கிடைக்க இந்த ஒரு பரிகாரம் போதும்

நம்முடைய வீட்டில் கண் திருஷ்டியின் பாதிப்பு இருந்தால் சண்டை சச்சரவுகள் வரும், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். கண் திருஷ்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்க கிராமங்களில் கற்றாழை செடியை வீட்டின் முன்பாக கட்டி வைப்பார்கள். 
சிலரோ தொட்டிகளில் வளர்ப்பார்கள். கற்றாழை செடியானது உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி பணப்பிரச்சினை, குடும்ப சண்டையை போக்கும் செடியாகவும் உள்ளது. 
கற்றாழை செடியின் அருமை தெரிந்துதான் இன்றைக்கு 
பலரும் அதனை வீடுகளில் வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
 துளசி செடி போல கற்றாழை செடியையும் பலரும் தொட்டிகளில் வளர்க்கின்றனர்.
 வாஸ்துபடி சரியான திசையில் கற்றாழை செடியை 
வளர்த்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். 
கற்றாழை மிகவும் ஆரோக்கியமானது என
 நம் அனைவருக்கும் தெரியும். அது அதிஷ்டத்தையும் தரக்கூடிய செடி. ஆலோவேரா என்று அழைக்கப்படும் இந்த கற்றாழை செடியை நாம் வீட்டில் நிலை வாசலுக்கு 
முன்பாக கட்டி வைப்பதன் மூலம் கண் திருஷ்டி ஏற்படாது. எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையாது. 
குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்டு வரும் சண்டை சச்சரவுகள் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். கிராமங்களில் வீட்டு வேலிகளை சுற்றி கற்றாழை செடியை நட்டு வளர்ப்பார்கள். பாம்பு போன்ற 
விஷ ஜந்துகள் வீட்டிற்கு நுழையாமல் தடுக்கவே 
கற்றாழை வளர்த்தனர். 
வீடு தினம் தினம் சண்டை சச்சரவுடன் போர்க்களமாக இருக்கிறதா? கட்டாயம் கற்றாழை செடியை வளர்க்க வேண்டும். இதன் மூலம் சண்டை நீங்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். 
பண வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கற்றாழை செடியை வளர்க்க வேண்டும். வீட்டு வாசல், பால்கனி எங்கு 
வேண்டுமானாலும் கற்றாழை செடியை தொட்டியில் வைத்து வளர்க்கலாம். பரிகாரத்திற்காக வளர்க்கும் கற்றாழை செடியை எந்த காரணத்திற்காகவும் வெட்டக்கூடாது. 
நீங்கள் வளர்க்கும் கற்றாழை செடிக்கு தினசரி தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்படி தண்ணீர் ஊற்றும் போது குல தெய்வத்தை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். பணப்பிரச்சினை தீர வேண்டும் என்று 
வேண்டுங்கள்.
தாமிர பாத்திரம், பித்தளை டம்ளர் உங்கள் வீட்டில் இருந்தால் அதில் சுத்தமான தண்ணீர் எடுத்து சிறிதளவு சோம்பு, 1 ஏலக்காய், ஒரு சிட்டிகை சர்க்கரையை அதில் போட்டு வைக்கவும் இரவு
 உறங்கும் முன்பாக
 அதை ரெடி செய்து பூஜை அறையில் வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்து குளித்து விட்டு பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு அந்த தண்ணீரை கொண்டு போய் கற்றாழை செடிக்கு ஊற்ற வேண்டும். 
இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் பண வருமானம் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் வீடு வந்து சேரும். நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்லதே நடக்கும்என்பதாகும்



பிறந்த நாள் வாழ்த்து திருமதி தினேஷ் லக்சிகா(லக்சி) 10.06-2024

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ்சில் வசிக்கும் திருமதி தினேஷ் லச்சிகா   (லச்சி) அவர்களின் பிறந்தநாள் 10.06.2024.இன்று தனது   குடும்ப உறவுகளுடன் பிரான்ஸ்சில் 
மிகச்சிறப்பாக்  கொண்டாடாடுகின்றார் இவரை அன்புக்கணவர் அன்பு அப்பா அன்பு அம்மா அன்புமாமா  அன்பு மாமி அண்ணா அண்ணி 
அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .மற்றும் உற்றார், உறவினர்கள் நண்பர்கள் இவரை  கிளிநொசசி பிள்ளையார் மற்றும் முருகன் . மற்றும்  நல்லூர்க்கந்தன் இறை ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்  





 

உங்கள் வீட்டில் தீபத்தில் இருக்கும் திரி எரிந்து கருகினால் என்ன பலன்

வீட்டில் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை தீபம் ஏற்றி வழிபடுவது உண்டு. செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கட்டாயம் தீபமேற்றி வழிபடுவோம். அப்படி வழிபடும் பூஜையில் எரியும் தீபத்தின் ஜோதியில் இறைவன் இருப்பதாக ஐதீகம். தீபம் ஏற்றும் இல்லங்களில் நேர்மறை 
ஆற்றல் அதிகரிக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. தீபத்தில் நாம் ஊற்றும் எண்ணெய் மற்றும் திரி இரண்டுமே மிகவும் முக்கியமானது. அதில் திரியானது எரிந்து கருகினால் வீட்டில் என்ன நடக்கும்? என்று சாஸ்திரம் கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து
                                                     இந்த பதிவை படியுங்கள்                                  .
எரியும் தீபத்தை ஒரு பொழுதும் வாயால் ஊதி அணைக்கக் கூடாது. அப்படி வாயால் ஊதி நெருப்பை அணைத்தால் அந்த வீட்டில் தரித்திரம் குடிகொள்ளும். வாயு பகவானுடைய சாபத்திற்கு ஆளாக நேரிடும் 
என்பதால் இவ்வாறு ஊதக் கூடாது என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரியும் ஜோதி ஆனது இறைவனுக்கு சமமாக
 பார்க்கப்படுவதால் வாயை 
வைத்து ஊதி அணைக்க கூடாது. வாயிலிருந்து தெறிக்கும் எச்சில் இறைவனை அவமதிப்பதற்கு சமமாகும். இதனால் தெய்வ குற்றம் ஏற்பட்டுவிடும் என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்து 
வந்துள்ளனர்.
தீபத்தில் நாம் ஊற்றும் எண்ணெய் நல்லெண்ணெய் மற்றும் நெய்யாக இருக்க வேண்டும். தீபத்தில் ஊற்றப்படும் எண்ணெய் நிறைய 
எண்ணெய்களின் கலவையாக கட்டாயம் இருக்கக் கூடாது.
 கோவில்களில் ஏற்றப்படும் தீபத்தில் பஞ்சலோக எண்ணெய் கலந்து தீபம் ஏற்றலாம். 
ஆனால் அதை நாம் வீட்டில் செய்யக்கூடாது என்கிறது
 சாஸ்திரம். ஒரு எண்ணெயோடு இன்னொரு எண்ணெய் சேர்ந்த கலவை எண்ணெயில் தீபம் ஏற்றினால் அந்த வீட்டில் தரித்திரம் உண்டாகும். வறுமை தாண்டவமாடும். வருமான இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. 
நவீன முறை 
என்கிற பெயரில் பழங்கால நடைமுறை பழக்க வழக்கங்களை மாற்றி அமைப்பதில் கவனமுடன் இருப்பது நல்லது.
தீபத்தில் போடப்படும் திரியானது பல வகைகளில் விற்பனைக்கு உள்ளன. அவற்றில் ஒவ்வொரு திரிக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. பொதுவாக பஞ்சுத்திரி கொண்டு தீபம் ஏற்றும் பொழுது
 சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. அப்படி ஏற்றப்படும் தீபத்தின் திரி எண்ணெய் தீர்ந்ததும் எரிய ஆரம்பிக்கும். அதற்குள் தீபத்தை 
புஷ்பத்தை கொண்டு அணைத்து 
விட வேண்டும். 
நாம் அப்படியே கவனக் குறைவாக இருந்து விட்டால் தீப திரி எரிந்து விடும். இதனால் குடும்பத்தில் பணவரவு தடைபடும். தொடர்ந்து இது போன்ற நிகழ்வு நடந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில்
 செல்வ வளம் குறையும்.
அதே போல தீபத்தில் இருக்கும் எண்ணெய் முழுமையாகத் தீர்ந்து போகக் கூடாது. ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் தீபத்தை எரிய விடாதீர்கள். எண்ணெய் தீரும் முன் தீபத்தை அணைத்து 
விடுங்கள். அது போல் மீண்டும் தீபம் ஏற்றும் பொழுது வேறு ஒரு புது திரியை தான் பயன்படுத்த வேண்டும். திரி நன்றாக இருந்தாலும் அதே திரியை பயன்படுத்தக் கூடாது. 
வாரம் ஒரு முறை கட்டாயம் விளக்கை தேய்த்து விட்டு தான் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் அதிலேயே இருந்தால் எண்ணெய்யின் 
நிறம் பச்சையாக மாறிவிடும். இப்படி தீபத்தில் இருக்கும் எண்ணெய் பச்சையாக மாறினால் குடும்பத்தில் குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும் ஏற்படுவதற்கு
 வாய்ப்புகள் உண்டு.
அது போல் காமாட்சி அம்மன் விளக்கை தரையில் வைக்கக் கூடாது. விளக்கிற்கு அடியில் சிறிய தட்டாவது வைக்க வேண்டும். விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் வைக்காமல் தீபம் ஏற்றக் கூடாது. 
வீட்டில் யாராவது தூங்கிக் கொண்டிருந்தால் அந்த சமயத்தில் தீபத்தை ஏற்றக் கூடாது. அவர்கள் எழுந்த பின்னர் தான் தீபத்தை ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி எப்பொழுதும் தீபத்தை ஏற்ற கூடாது. மற்ற 
திசைகளில் தீபமேற்றுவது நல்ல
 பலன்களை கொடுக்கும். குறிப்பாக கிழக்கு நோக்கி 
தீபம் ஏற்றுவது உத்தமம். இப்படி தீபமேற்றும் விஷயத்தில் சிறு சிறு குறிப்புகளை நாம் கவனமாக 
பார்த்துக் கொண்டால் குடும்பத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து சுபிட்சம் பெற செய்வாள். மென்மேலும் செல்வமானது வளர்ந்து ஓங்கும்
 என்பது நம்பிக்கை.ஆகும் 



Powered by Blogger.