வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா 16.09.24

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர  ஆழ்வார் ஆலய தேர் உற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.
 காலை 7 மணியிலிருந்து விசேட பூசைகள் இடபெற்று 
அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூசை நடைபெற்றது. தொடர்ந்து 9:30 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னேவர விநாயகரும் அவரை தொடர்ந்து மகாலக்ஷ்மியும் வர வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் பெருந்தேரில் வலம்வந்தார். 
கடந்த 02.09.2024 அன்று கொடியேற்ற பெருந்திருவிழா ஆரம்பமாகி இன்று 15ம் திருவிழாவான தேர்த்திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் அடியவர்கள் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர்.
கடந்த 02.09.2024 அன்று கொடியேற்ற பெருந்திருவிழா 
ஆரம்பமாகி 16-09-2024.இன்று 15ம் திருவிழாவான தேர்த்திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு
 பகுதியில் இருந்தும் அடியவர்கள் பல்லாயிரம் பேர் கலந்து 
கொண்டனர். பல அடியார்கள் தூக்கு காவடி, பால்க்காவடி,
 அங்க பிரதஸ்டை, பால்குடம் போன்ற பல்வேறு நேற்றிக்கடன்களையும் நிறைவேற்றினர். 
இதேவேளை மக்களுக்கு உரிய சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் வழங்கியிருந்ததுடன் மக்களிறக்கான 
பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை பருத்தித்துறை பொலிஸாரும் மேற்கொண்டிருந்தனர். 
 17-09-2024.நாளைய தினம் பிற்பகல் 2:00மணியளவில் சமுத்திர தீத்த உற்சவமும் இடம்பெறவுள்ளது.வல்லிபுர ஆழ்வார்துணை.







0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.