விக்கினங்களை தீர்க்கும் விநாயகரிற்குரிய விநாயர் சதுர்த்தி நாள் இன்று

இந்துக்களால்  இலங்கை இந்தியா உட்பட உலகெங்கிலும் வாழும் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது 
விநாயகர் சதுர்த்தி. 
முழுமுதற்கடவுள் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகருக்கு, ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
 பிற சதுர்த்திகளில் வழிபடாதவர்கள்கூட ஆவணி வளர்பிறையில் வழிபட்டால் ஆண்டுமுழுவதும் சதுர்த்தியில் விநாயகரை வழிபட்ட பலன் கிடைக்கும். எனவேதான் அந்த சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்றே அழைத்துக் கொண்டாடுகிறோம். 
காரணம் ஆவணி சதுர்த்தி அன்றுதான் விநாயகப்பெருமான் தோன்றினார் என்கிறது புராணம். திதிகளில் சதுர்த்திக்கு ஒரு சிறப்பு உண்டு. வளர்பிறையோ தேய்பிறையோ அது விநாயகர் வழிபாட்டோடு
 தொடர்புடையது. 
ஒவ்வொரு வளர்பிறை சதுர்த்தியிலும் விரதம் இருந்து விநாயகரைக் காலையில் வழிபட வேண்டும். ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தியிலும் விரதம் இருந்து விநாயகப் பெருமானை மாலை 
வழிபட வேண்டும்.
 இப்படி வழிபடுபவர்களுக்குக் கேட்கும் வரங்கள் எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஓர் ஆண்டில் வரும் வளர்பிறைச்சதுர்த்தியில் தலையாயது ஆவணி மாதம் வரும் சதுர்த்தி. பிற சதுர்த்திகளில் வழிபடாதவர்கள்கூட ஆவணி வளர்பிறையில் வழிபட்டால் ஆண்டுமுழுவதும் சதுர்த்தியில் விநாயகரை வழிபட்ட பலன் கிடைக்கும். 
எனவேதான் அந்த சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்றே அழைத்துக் கொண்டாடுகிறோம். காரணம் ஆவணி சதுர்த்தி அன்றுதான் விநாயகப்பெருமான் தோன்றினார் என்கிறது புராணம். 
தெய்வங்களில் முழுமுதற்கடவுள் விநாயகர். பண்டிகைகளிலும் தலையாயது விநாயகர் சதுர்த்தி. விநாயகரே எளிமையானவர். அரச மரத்தடியிலும் ஆற்றங்கரையிலும் எழுந்தருளி இருப்பவர். 
அவருக்கு மேற்கூரைகூடத் தேவையில்லை. அப்படிப்பட்ட விநாயகரை எளிய இயற்கைப் பொருள்கள் கொண்டு செய்வதுவே நல்லது. களிமன் மிக எளிதில் கிடைக்கும். 
பிற பொருள்களைக் கொண்டு செய்யப்படும் விநாயகரை பூஜைக்குப் பின் கரைப்பதிலும் சிக்கல்கள் உள்ளன. ஆனால் களிமண்ணோ மிகவும் எளிதாகக் கரைந்து விடும். அப்படிப் பட்ட களிமண் விநாயகர் மிகவும் பவித்ரமானது என்கிறார்கள். 
எனவே ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்குப் புதிய களிமண் விநாயகரை வாங்கி வழிபடுவது விசேஷம். மேலும் காலையில் எழுந்து நீராடி வீட்டில் இருக்கும் குழந்தைகளோடு கிளம்பிச்சென்று விநாயகரை வாங்கிக்கொண்டு கொண்டாட்டமாகத் திரும்பி வரும் அனுபவமும் சிறப்பானது.
 பூஜிப்பது எப்படி?
 விநாயகர் சதுர்த்தி அன்று, காலையிலேயே வீட்டை சுத்தம் செய்து, நல்ல நேரத்தில் களிமண்ணினால் செய்த விநாயகர் சிலையை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும். பூஜை செய்ய உகந்த நேரத்தினை அறிந்துகொண்டு அந்த நேரத்தில் பூஜையைத் தொடங்க வேண்டும்.
 ஓம் சுமுகாய நம: ஓம் ஏகதந்தாய நம:
 ஓம் கபிலாய நம: 
ஓம் கஜகர்ணகாய நம:
 ஓம் லம்போதராய நம:
 ஓம் விகடாய நம: ஓம் விக்னராஜாய நம: 
ஓம் விநாயகாய நம:
 ஓம் தூமகேதுவே நம:
 ஓம் கணாத்யக்ஷாய நம:
 ஓம் பாலசந்த்ராய நம: 
ஓம் கஜானநாய நம:
 ஓம் வக்ரதுண்டாய நம: 
ஓம் சூர்ப்பகர்ணாய…
 என்னும் மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு பழம், வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்ய வேண்டும். 
அதன் பிறகு கற்பூரம் காட்டி நம் வேண்டுதலைச் சொல்லிப் பின் விநாயகர் சதுர்த்தி பூஜை நல்லபடியாக நடக்க வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக்கொள்ள வேண்டும்.
 பின்பு புதிதாக வாங்கிய விநாயகருக்கு சிறு வஸ்திரம், மலர், உபவீதம், சந்தனம், குங்குமம் ஆகியன சமர்ப்பித்து அலங்காரம் 
செய்ய வேண்டும். 
பிறகு விநாயகர் அஷ்டோத்திரம் அறிந்தவர்கள் மலர்கள், அருகம்பூ முதலியன கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அறியாதவர்கள், விநாயகர் அகவல் பாடி ஒவ்வொரு வரி முடிவிலும் மலர் சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 விநாயகருக்கு மோதகம் செய்து நிவேதனம் செய்வது விசேஷம். இயலாதவர்கள் வீட்டில் நாம் உண்ணும் உணவையே நிவேதித்து வழிபட்டால் போதுமானது. 
பின்பு கற்பூர ஆரத்தி காட்டி விநாயகர் பூஜையை நிறைவு செய்யலாம். உகந்த நிவேதங்கள் மோதகம், கொழுக்கட்டை, பால், தயிர், தேன், அவல்,பொறி, கடலை, சர்க்கரை, பேரீட்சை, தேங்காய்,விளாம்பழம்,
 வாழைபழம், கொய்யா, மாதுளை, லட்டு மற்றும்
 சுண்டல் இவற்றில் ஒன்றோ அல்லது பலவோ செய்து விநாயகருக்கு நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு.
 பூஜை செய்ய நல்ல நேரம்:
 காலை 6.00 முதல் 7.00 மணி வரை காலை 9.00 மணி முதல் 10 மணி வரை மாலை 4.00 மணி முதல் 5 மணி வரை மாலை 7.00 மணி முதல் 9 மணி வரை
குறிப்பிடத்தக்கது என்பதாகும்    உங்கள் அனைவருக்கும்    விநாயகரிற்குரிய விநாயர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்






 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.