09.07.2012அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் உள்ள அருகம்பே களப்பில் இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென இறந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த களப்பு பகுதியில் நேற்று முன்தினம் திடீரென சிறுமழை பெய்துள்ளது. இதன் காரணமாக களப்பினில் உறைந்திருந்த உப்புத் தன்மை மழை நீருடன் கரைந்துள்ளது.
நீண்ட காலத்தின் பின் பொழிந்த சிறு மழை காரணமாவும் உப்புத் தன்மையினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவும் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இங்கு சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான மீன்கள் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்
நீண்ட காலத்தின் பின் பொழிந்த சிறு மழை காரணமாவும் உப்புத் தன்மையினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவும் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இங்கு சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான மீன்கள் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen