உரும்பிராய் கருணாகர பிள்ளையார் கோவில்

09.07.2012யாழ்ப்பாணத்தை அரசுபுரிந்த விஐயகூழங்கைச் சக்கரவர்த்தி காலத்துக்கும் முந்திய பூர்வீக ஆலயம் இதுவாகும். விஐயகூழங்கைச் சக்கரவர்த்தி கருணாகரப்பிள்ளையாரை வணங்கி அருள்பெற்றதாகவும், திருப்பணிக்கு உதவியதாகவும் சரித்திரம் கூறுகிறது. அந்தணர் பரம்பரையினர் இவ்வாலயத்தைப் பரிபாலித்து வருகின்றார்கள். பழைமையையும் பெருமையையும் எடுத்துக்காட்டும் வகையில் கல்வெட்டுச் சாசனமும் உண்டு. பிரசித்திபெற்ற பிள்ளையார் கோயில்களின் வரிசையில் இவ்வாலயமும் சேர்க்கப்பட்பட்டுள்ளது.
ஆவணிப் பூரணையை இறுதி நாளாக வைத்து மகோற்சவம் இடம்பெறும். பத்துத் தினங்கள் இடம்பெறும் இம் மகோற்சவம் 1910 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக அறிஞர்கள கூறுகின்றார்கள். 1973ஆம் ஆண்டு புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக விழாவினையொட்டி ஆலய திருப்பணி சபையினால் வெளியிடப் பெற்ற மஹாகும்பாபிஷேக மலர் பொன் மலர் என்னும் பாராட்டினைப் பெற்றது.
நீர்வேலி சிதம்பரநாதப் புலவர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, கவிஞர் செ. ஐயாத்துரை என்பவர்கள் கருணாகரப்பிள்ளையார் கோயில் மீது வெவ்வேறு காலங்களிற் பிரபந்தங்களைச் செய்துள்ளனர். தனிப் பாடல்களும் உண்டு. மருதநிலைச் சூழலில் பரத்தைப் புலம் என்று கூறப்பெறும் திவ்விய ஷேத்திரத்தில் எல்லாம் வல்ல கருணாகரப்பிள்ளையார் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்றார். கருணாகரன் பாதம் கனவிலும் துணை செய்யும்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.