யாழ்.நகரில் கஸ்தூரியார் வீதியில் சைக்கிள்
மற்றும் மோட்டார் சைக்கிள்களை ஒற்றை, இரட்டை நாள்கள் அறிவிப்பின்படி நிறுத்துதல்
வேண்டும். தவறுபவர்களுக்கு எதிராக யாழ்.பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு
வருகின்றனர்.
யாழ்.நகரில் போதனா வைத்தியசாலை வீதியிலிருந்து
ஆரம்பிக்கும் கஸ்தூரியார் வீதியின் வலப் புறமாக இரட்டை நாள்களில் சைக்கிள்,
மோட்டார் சைக்கிள் நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இடது புறமாக ஒற்றை நாள்களில்
சைக்கிள், மோட்டார் சைக்கிள் நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஒற்றை நாள்கள் என்பது திங்கள், புதன், வெள்ளி
என்றும் இரட்டை நாள்கள் என்பது செவ்வாய், வியாழன், சனி என்றும் போக்குவரத்து
விதிமுறைகளில் உள்ளது போன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. போக்குவரத்து இடையூறுகளைச்
சீர்செய்யும் முகமாக இந்த விதிமுறைகள் கஸ்தூரியார் வீதியில் நடைமுறைப்
படுத்தப்பட்டுள்ளது.
தினமும் வீதியின் இரண்டு புறமும் சைக்கிள்,
மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டுவருவதனால் வாகனத்தில் பயணிப்பவர்கள் மட்டுமன்றி
பாதசாரிகள் கூட பெரும் இடையூறுகளை எதிர் நோக்கி வந்தனர்.
இந்த நடைமுறையை பின்பற்றத் தவறுபவர்களுக்கு
எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
|
வாகன தரிப்பிட ஒழுங்கு கஸ்தூரியார் வீதியில் இறுக்கம்; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை
Tags :
இணைய செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen