26.08.2012.
நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாக் காலத்தில்
வீதியில் போடப்பட்ட மணல் முழுமையாக அகற்றப்படாமையால் வீதியால் செல்வோர் பெரும்
அவலங்களையும் ஆபத்துக்களையும் சந்தித்து வருகின்றனர்.
ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு யாழ்.
மாநகர சபையால் ஆலயத்தைச் சுற்றியுள்ள "காப்பெற்' உட்பட எல்லா வீதிகளுக்கும் மணல்
போடப்பட்டது. அவ்வேளை அந்த வீதியூடாக வாகனங்கள் எதுவும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தற்போது திருவிழா முடிவடைந்த பின்னர் இவ்வீதியூடாக கனரக வாகனப் போக்குவரத்து வழமை
போன்று இடம்பெறுகிறது.
இந்த நிலையில் போடப்பட்ட மணல் வீதியில் தற்போதும்
இருப்பதனால் இந்த வீதியால் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் சறுக்கி
விபத்துள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உடனடிக் கவனமெடுத்து இதற்கான
நடவடிக்கை எடுக்க உரியவர்கள் முன்வரவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
|
முழுமையாக மண் அகற்றாமையால் நல்லூர் வீதியில் போக்குவரத்துச் சிரமம்
Tags :
இணைய செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen