அவுஸ்திரேலியாவின் விலாவுட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, மனநிலை பாதிக்கப்பட்ட இலங்கை அகதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளார்.
இது தொடர்பான யோசனை ஒன்று நேற்று நியு சௌத் வேல்ஸ் மேலோர் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேம் என்ற குறித்த இலங்கையருக்கு 2009ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் அகதிக்கு அந்தஸ்து வழங்கப்பட்டது.
எனினும் அவர் அவுஸ்திரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என்ற அடிப்படையில் அவுஸ்திரேலியா பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் ஏற்கனவே இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உட்பட்டு, மூளைப் பகுதியில் காயம் ஏற்பட நிலையில், தற்போது உடல் மற்றும் மன நிலைபாதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் பாதுகாப்பு அதிகாரிகள் தம்மை நம்பவில்லை என பிரேம், அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கடுமையாக உடல் நிலை மற்றும் மனநிலை பாதிப்புக்கு உட்பட்டுள்ள நிலையில், அவரை வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய தீர்மானம் ஒன்றே நேற்றைய தினம் வேல்ஸ் மேலோர் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது
இந்த நிலையில் அவர் ஏற்கனவே இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உட்பட்டு, மூளைப் பகுதியில் காயம் ஏற்பட நிலையில், தற்போது உடல் மற்றும் மன நிலைபாதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் பாதுகாப்பு அதிகாரிகள் தம்மை நம்பவில்லை என பிரேம், அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கடுமையாக உடல் நிலை மற்றும் மனநிலை பாதிப்புக்கு உட்பட்டுள்ள நிலையில், அவரை வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய தீர்மானம் ஒன்றே நேற்றைய தினம் வேல்ஸ் மேலோர் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen