இலங்கையின் தேயிலை ஏற்றுமதி தொடர்ந்து ஆறாவது மாதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அரசாங்கத்தினால் நடாத்தப்படும் தேயிலை சபையின் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இலங்கையில் கடந்த ஜுலை மாத தேயிலை உற்பத்தியில், 25.17 மில்லியன் கிலோவாக இருந்து 24.11 மில்லியன் கிலோவாக குறைவடைந்துள்ளது. 4.2 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது.
2011இன் முதல் ஏழு மாதங்களிலும். 195.83 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலும் 188.16 மில்லியன் கிலோ தேயிலையே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தேயிலை ஏற்றுமதி 3.9 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
தேயிலைத் தரகர் அனில் குக் என்பவர் தெரிவிக்கையில்,
ஏப்ரல் மாதத்திலிருந்து சரியான மழை இல்லாததால், உயர்தர மற்றும் நடுத்தர தேயிலையின் உற்பத்தி குறைவடைந்துள்ளன. இதன் காரணமாக சில தேயிலைத் தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளன.
இலங்கை கடந்த ஆண்டு 328.37 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்திருந்தது. இதன் மூலம் 1.5 பில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றது.
இந்த ஆண்டில் 330 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்த போதிலும், பின்னர் அந்த இலக்கு 325 மில்லியன் கிலோவாக குறைக்கப்பட்டது
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen