கி.பி. 12 - 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் யாழ்ப்பாண தமிழ் மன்னர் காலத்தில் பரராசசேகரம், செகராசசேகரம், இலங்கைச் சிங்கை மன்னன் நயனவிதி முதலான நூல்கள் தோற்றம் பெற்றன. இவை யாவும் தொகுப்பு நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றிலே கூறப்பட்டுள்ள மருந்துகளில் பல தற்போதும் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பெருவழக்காயுள்ளன. கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டளவில் அமுதாகரம், இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம், பாதார்த்த சூடாமணி, சொக்கதாதர் தன்வந்திரியம் போன்ற நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நூல்கள் பலவற்றையும் யாழ்ப்பாணத்திலே வெளிவந்த வேறுபல சித்த மருத்துவ நூல்களையும் அச்சு வாகனமேற்றிய பெருமை ஏழாலையைச் சேர்ந்த சுதேச வைத்தியர் ஐ.பொன்னையாப்பிள்ளை அவர்களையே சாரும். அவை முன்னர் ஏட்டு வடிவிலே இருந்தன. செகராசசேகரம் நூலை அச்சுவேலியைச் சேர்ந்த ச.தம்பிமுத்துப்பிள்ளையும் அமுதகாரத்தை திருகோணமலையைச் சேர்ந்த ச.தம்பையாபிள்ளை என்பவரும் பதிப்பித்துள்ளளனர்.
சித்த மருத்துவ கலாநிதியும், கைதேர்ந்த சித்த வைத்தியரும் யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி சே.சிவசண்முகராஜா அவர்கள் குறிப்பிடும் சித்த மருத்துவ - சுதேசமருத்துவ நூல்களின் விபரம் வருமாறு :
‘அங்காதிபாதம், அமுதாகரம், இருபாலைச் செட்டியார் வைத்தியவிளக்கம், பதார்த்த சூடாமணி, ஏட்டு வைத்தியம், கிறிஸ்தவ பண்டிதர் வைத்திய நூற்றிரட்டு, சித்த ஔடத சங்கிரகம் , சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம், சுதேசவைத்திய அவுடதத்திரட்டு, சுதேசவைத்திய மருத்துவ மூலிகைக் கையகராதி, செகராச சேகரம், சொக்கநாதர் தன்வந்திரியம் , நயனவிதி குணமும் மருந்துமும், பரராசசேகரம், வைத்தியசிந்தாமணி, வைத்தியபூரணம்’ 1(2000 : 62)
சுதேசமருத்துவ இலக்கிய வரலாற்றையும் அதன் வளர்ச்சிப் போக்கையும் எடுத்துக் காட்டும் ஆவணங்களில் இலங்கையிலே வெளிவந்த சித்த - சுதேசமருத்துவ நூல்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இலங்கையின் பல பாகங்களிலும் சிதறிக் காணப்படும் சுதேச - சித்த வைத்தியம் சம்பந்தமான ஏட்டுச் சுவடிகள் இங்கு ஈழத்திலே சுதேச மருத்துவம் ஒரு காலத்தில் செழிபுற்றிருந்ததை எடுத்து காட்டுகின்றன. 1994 ஆம் ஆண்டு ‘ஏட்டுவைத்தியம்’ என்னும் நூல் வைத்திய கலாநிதியும் இன்று பேராசிரியருமான சு. பவானி அவர்களினாலே ஆயுர்வேதத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
1980 இல் சித்த ஔடத சங்கிரகம் என்னும் சித்த மருந்துகளின் தொகுப்பு நூல் ஆயுர்வேத வைத்திய திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. 1992 இல் திலகராகப் பணிபுரிந்த ஏழாலையைச் சேர்ந்த திரு. சி. முருகவேல் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் உள்ள நூலகத்திலே காணப்பட்ட தமிழ் சுதேச வைத்திய ஏட்டுச் சுவடிகளின் பெயர் பட்டியலொன்றை (அப்போதைய பிரதம நூலகராக இருந்தபோது) வெளியிட்டார்.
சுதேச மருத்துவ நூலாக்கத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வைத்தியர்களும் பெரும் பணியாற்றியுள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த வைத்தியர் சி. ஆறுமுகம்பிள்ளை 1931 இல் ‘நோய் நிதானங்கள்’ என்னும் அரிய தமிழ் மருத்துவ நூலைத் தொகுத்து வெளியிட்டார். சித்த - சுதேச மருத்துவ நோய்நாடல் சம்பந்தமாக எமக்குக் கிடைத்த முதலாவது நூல் இதுவென்றே கூறலாம்.
ஆயுர்வேத வைத்தியத்தில் ‘மாதவன் நிதானம்’ போன்ற நோய் நிதான நூல்கள் பல இருப்பினும் சித்த மருத்துவத்தில் நோய் நிதானத்துக்கென்று தனியான நூல் எதுவும் இலங்கையிலே இல்லாதிருந்தது. அக்குறைபாட்டைப் போக்கும் நோக்கத்துடனேயே தாம் இதனைத் தொகுத்ததாக நூலாசிரியர் தமது முகவுரையிலே குறிப்பிட்டுள்ளார். ‘அங்காதிபாதம்’ என்னும் பெயரில் இதே நூலாசிரியர் எழுதிய ஒரு நூல் இற்றைவரை கையெழுத்துப் பிரதியாகவே உள்ளது. அதுபோலவே திருகோணமலையைச் சேர்ந்த ப. சின்னத்தம்பி என்பவர் 1906இல் எழுதிய ‘அற்காதிபாதம்’ என்னும் நூலும் கையெழுத்து பிரதியாகவே இருந்து வருகிறது.
ஆதி காலத்தில் சுதேச - சித்த மருத்துவமானது இலங்கை முழுவதும் பரவியிருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் மேலாதிக்கம், நட்புறவு என்பன இலங்கையில் ஏற்பட்டிருந்த காலங்களில் இவ்வைத்திய முறை புத்துயிர் பெற்று வளர்ச்சி அடைந்திருக்கக் கூடும். பொலனறுவையிலமைந்துள்ள பொற்கல் விகாரையில் உள்ள சிலைகளில் ஒன்று சித்த மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் அகத்திய முனிவருடையது என்ற கருத்து இதனை வலுப்படுத்துவதாக அமைகிறது. 5ஆம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட வைத்திய சிந்தாமணி பைசாஜ்ஜ சங்கரதும் என்னும் நூல் ‘வைத்திய சிந்தாமணி’ என்னும் தமிழ் மருத்துவ நூலைத் தழுவி எழுதப்பட்ட ஒன்றாகும். இவை சிங்களவர் மத்தியில் சித்த - சுதேச மருத்துவத்துக்கிருந்த செல்வாக்கை நன்கு காட்டும். சித்த மருத்துவம் கூறும் சித்தர்களில் ஒருவரான ‘கோரக்கர்’ திருகோணமலையில் சித்தியடைந்தார்.
பதினெண் சித்தர்களிலே புலத்தியர், சட்டநாதர் ஆகிய இருவரும் சிங்கள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் கருதத்தக்கது. ‘சிங்களம்’ என்பது இங்கு ‘இலங்கை’ எனும் நாட்டை குறிப்பதாக அமைகிறது. எனவே இத்தமிழ்ச் சித்தர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்று சித்த மருத்துவ வளர்ச்சியில்ஈடுபடுத்தியிருக்க வேண்டும்.
பரராசசேகர மன்னனின் சகோதரனான பரநிருபசிங்கன் என்பவன் சிறந்த சித்த மருத்துவராகத் திகழ்ந்ததுடன் கண்டியரசரின் மனைவிக்குச் சிங்கள வைத்தியர்களால் குணப்படுத்த முடியாதிருந்த வயிற்று வலியைக் குணப்படுத்தினான் என்ற செய்தியும் குறிப்பிடத்தக்கது. இது யாழ்ப்பாண அரசபரம்பரையினருக்குச் சுதேச - சித்த மருத்துவத்தில் இருந்த ஈடுபாட்டைக் காட்டுவதுடன் சித்த மருத்துவம் சிங்கள மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் பயன்பட்டிருப்பதற்கும் சான்று பகர்வதாகவுமுள்ளது. தற்போது கூட சிங்கள பாரம்பரிய மருத்துவர்களிடம் தமிழ் ஏட்டுச்சுவடிகள் பல இருப்பதாகக் கூறப்படுவதும் கவனத்திற் கொள்ளத்தக்கது. எனினும் பிற்காலத்தில் தமிழ் மருத்துவமானது இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலேயே பெருமளவில் கையாளப்பட்டு வந்துள்ளது
இந்நூல்கள் பலவற்றையும் யாழ்ப்பாணத்திலே வெளிவந்த வேறுபல சித்த மருத்துவ நூல்களையும் அச்சு வாகனமேற்றிய பெருமை ஏழாலையைச் சேர்ந்த சுதேச வைத்தியர் ஐ.பொன்னையாப்பிள்ளை அவர்களையே சாரும். அவை முன்னர் ஏட்டு வடிவிலே இருந்தன. செகராசசேகரம் நூலை அச்சுவேலியைச் சேர்ந்த ச.தம்பிமுத்துப்பிள்ளையும் அமுதகாரத்தை திருகோணமலையைச் சேர்ந்த ச.தம்பையாபிள்ளை என்பவரும் பதிப்பித்துள்ளளனர்.
சித்த மருத்துவ கலாநிதியும், கைதேர்ந்த சித்த வைத்தியரும் யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி சே.சிவசண்முகராஜா அவர்கள் குறிப்பிடும் சித்த மருத்துவ - சுதேசமருத்துவ நூல்களின் விபரம் வருமாறு :
‘அங்காதிபாதம், அமுதாகரம், இருபாலைச் செட்டியார் வைத்தியவிளக்கம், பதார்த்த சூடாமணி, ஏட்டு வைத்தியம், கிறிஸ்தவ பண்டிதர் வைத்திய நூற்றிரட்டு, சித்த ஔடத சங்கிரகம் , சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம், சுதேசவைத்திய அவுடதத்திரட்டு, சுதேசவைத்திய மருத்துவ மூலிகைக் கையகராதி, செகராச சேகரம், சொக்கநாதர் தன்வந்திரியம் , நயனவிதி குணமும் மருந்துமும், பரராசசேகரம், வைத்தியசிந்தாமணி, வைத்தியபூரணம்’ 1(2000 : 62)
சுதேசமருத்துவ இலக்கிய வரலாற்றையும் அதன் வளர்ச்சிப் போக்கையும் எடுத்துக் காட்டும் ஆவணங்களில் இலங்கையிலே வெளிவந்த சித்த - சுதேசமருத்துவ நூல்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இலங்கையின் பல பாகங்களிலும் சிதறிக் காணப்படும் சுதேச - சித்த வைத்தியம் சம்பந்தமான ஏட்டுச் சுவடிகள் இங்கு ஈழத்திலே சுதேச மருத்துவம் ஒரு காலத்தில் செழிபுற்றிருந்ததை எடுத்து காட்டுகின்றன. 1994 ஆம் ஆண்டு ‘ஏட்டுவைத்தியம்’ என்னும் நூல் வைத்திய கலாநிதியும் இன்று பேராசிரியருமான சு. பவானி அவர்களினாலே ஆயுர்வேதத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
1980 இல் சித்த ஔடத சங்கிரகம் என்னும் சித்த மருந்துகளின் தொகுப்பு நூல் ஆயுர்வேத வைத்திய திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. 1992 இல் திலகராகப் பணிபுரிந்த ஏழாலையைச் சேர்ந்த திரு. சி. முருகவேல் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் உள்ள நூலகத்திலே காணப்பட்ட தமிழ் சுதேச வைத்திய ஏட்டுச் சுவடிகளின் பெயர் பட்டியலொன்றை (அப்போதைய பிரதம நூலகராக இருந்தபோது) வெளியிட்டார்.
சுதேச மருத்துவ நூலாக்கத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வைத்தியர்களும் பெரும் பணியாற்றியுள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த வைத்தியர் சி. ஆறுமுகம்பிள்ளை 1931 இல் ‘நோய் நிதானங்கள்’ என்னும் அரிய தமிழ் மருத்துவ நூலைத் தொகுத்து வெளியிட்டார். சித்த - சுதேச மருத்துவ நோய்நாடல் சம்பந்தமாக எமக்குக் கிடைத்த முதலாவது நூல் இதுவென்றே கூறலாம்.
ஆயுர்வேத வைத்தியத்தில் ‘மாதவன் நிதானம்’ போன்ற நோய் நிதான நூல்கள் பல இருப்பினும் சித்த மருத்துவத்தில் நோய் நிதானத்துக்கென்று தனியான நூல் எதுவும் இலங்கையிலே இல்லாதிருந்தது. அக்குறைபாட்டைப் போக்கும் நோக்கத்துடனேயே தாம் இதனைத் தொகுத்ததாக நூலாசிரியர் தமது முகவுரையிலே குறிப்பிட்டுள்ளார். ‘அங்காதிபாதம்’ என்னும் பெயரில் இதே நூலாசிரியர் எழுதிய ஒரு நூல் இற்றைவரை கையெழுத்துப் பிரதியாகவே உள்ளது. அதுபோலவே திருகோணமலையைச் சேர்ந்த ப. சின்னத்தம்பி என்பவர் 1906இல் எழுதிய ‘அற்காதிபாதம்’ என்னும் நூலும் கையெழுத்து பிரதியாகவே இருந்து வருகிறது.
ஆதி காலத்தில் சுதேச - சித்த மருத்துவமானது இலங்கை முழுவதும் பரவியிருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் மேலாதிக்கம், நட்புறவு என்பன இலங்கையில் ஏற்பட்டிருந்த காலங்களில் இவ்வைத்திய முறை புத்துயிர் பெற்று வளர்ச்சி அடைந்திருக்கக் கூடும். பொலனறுவையிலமைந்துள்ள பொற்கல் விகாரையில் உள்ள சிலைகளில் ஒன்று சித்த மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் அகத்திய முனிவருடையது என்ற கருத்து இதனை வலுப்படுத்துவதாக அமைகிறது. 5ஆம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட வைத்திய சிந்தாமணி பைசாஜ்ஜ சங்கரதும் என்னும் நூல் ‘வைத்திய சிந்தாமணி’ என்னும் தமிழ் மருத்துவ நூலைத் தழுவி எழுதப்பட்ட ஒன்றாகும். இவை சிங்களவர் மத்தியில் சித்த - சுதேச மருத்துவத்துக்கிருந்த செல்வாக்கை நன்கு காட்டும். சித்த மருத்துவம் கூறும் சித்தர்களில் ஒருவரான ‘கோரக்கர்’ திருகோணமலையில் சித்தியடைந்தார்.
பதினெண் சித்தர்களிலே புலத்தியர், சட்டநாதர் ஆகிய இருவரும் சிங்கள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் கருதத்தக்கது. ‘சிங்களம்’ என்பது இங்கு ‘இலங்கை’ எனும் நாட்டை குறிப்பதாக அமைகிறது. எனவே இத்தமிழ்ச் சித்தர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்று சித்த மருத்துவ வளர்ச்சியில்ஈடுபடுத்தியிருக்க வேண்டும்.
பரராசசேகர மன்னனின் சகோதரனான பரநிருபசிங்கன் என்பவன் சிறந்த சித்த மருத்துவராகத் திகழ்ந்ததுடன் கண்டியரசரின் மனைவிக்குச் சிங்கள வைத்தியர்களால் குணப்படுத்த முடியாதிருந்த வயிற்று வலியைக் குணப்படுத்தினான் என்ற செய்தியும் குறிப்பிடத்தக்கது. இது யாழ்ப்பாண அரசபரம்பரையினருக்குச் சுதேச - சித்த மருத்துவத்தில் இருந்த ஈடுபாட்டைக் காட்டுவதுடன் சித்த மருத்துவம் சிங்கள மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் பயன்பட்டிருப்பதற்கும் சான்று பகர்வதாகவுமுள்ளது. தற்போது கூட சிங்கள பாரம்பரிய மருத்துவர்களிடம் தமிழ் ஏட்டுச்சுவடிகள் பல இருப்பதாகக் கூறப்படுவதும் கவனத்திற் கொள்ளத்தக்கது. எனினும் பிற்காலத்தில் தமிழ் மருத்துவமானது இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலேயே பெருமளவில் கையாளப்பட்டு வந்துள்ளது
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen