அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 58பேர் வடமராட்சி கிழக்கில் கைது

  
 By rajah.27.08.2012.
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலமாகச்செல்ல முற்பட்ட 58 பேரை வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் கொட்டோடை பகுதிக் கடற்கரையிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு இயந்திப்படகு ஒன்றில் செல்ல முற்பட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் அனைவரையும் பருத்தித்துறைக் கடற்கரைக்கு அழைத்துவந்த கடற்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு , வடமராட்சி , முல்லைத்தீவுப் பகுதியைச்சேர்ந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் , சிறுவர்கள் உட்பட 58பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக அவுஸ்திரேலியா நோக்கி வடக்கு , கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றமையும் அவர்களைக்கடற்படையினர் கைதுசெய்து சட்டநடவடிககை மேற்கொள்கின்றமையும்குறிப்பிடத்தக்கது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.