சரித்திரப்புகழ் பெற்ற வடமராட்சி கிழக்கு
நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பெருந்திருவிழா 12வருடகால இடைவெளிக்குப்
பின்னர் இவ்வாண்டு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை முதல்
ஆரம்பமாகும் இந்தக் கோவில் பெருந் திருவிழாவில் ஒன்று கப்பல் திருவிழாவாகும்.
போர்த்துக்கேயர் வந்து இறங்கியதைப்
பிரதிபலிக்கும் இந்தத் திருவிழா சிறப்பு மிக்கதாகும். இந்தத் திருவிழா எதிர் வரும்
30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
கடந்த கால போர் காரணமாக 2000ஆம் ஆண்டு இந்தப்
பகுதி மக்கள் இடம் பெயர்ந்ததுடன் இப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டது.
இதனால் ஆலயத் திருவிழாவும் தடைப்பட்டிருந்தது.
தற்போது போர் நிறைவடைந்துள்ள நிலையில் 2009 ஆம்
ஆண்டுக்குப் பின்னர் கோவிலுக்குச் செல்லவும், பூசை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இக் குறுகிய காலத்தில் கோவில் புனரமைக்கப்பட்டு சில மாதங்களுக்கு
முன்னர் கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.
தற்போது நாகர் கோவில் பகுதியில் சில
கிராமசேவையாளர் பிரிவுகளில் மீள்குடியமர்வும் நடைபெற்றுள்ள நிலையில் இக் கோயில்
வருடாந்தத் திருவிழா இம்முறை நடைபெறவுள்ளது.
பெருந்திருவிழாவை நடத்துவது தொடர்பாக
நாகதம்பிரான் ஆலயபரிபாலனசபை அண்மையில் ஒன்று கூடி இதற்கான தீர்மானமும் எடுத்துள்ளது
|
நாகதம்பிரான் ஆலயத் திருவிழா 12 வருடங்களின் பின் இம்முறை
Tags :
தகவல்கள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen