மொட்டணம்பட்டி காளியம்மன், பகவதியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!

01.09.2012.BY.rajah.
மொட்டணம்பட்டி காளியம்மன் கும்பாபிஷேகம் நாளை (செப்.2) ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.பல ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கும்பாபிஷேக விழா துவக்க நிகழ்ச்சியாக நேற்று மாலை பூஜை துவங்கியது. இன்று மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, வருண வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு, புனித மண் எடுத்தல், முளைபாலிகை இடுதல், கும்ப அலங்காரம், காப்பு கட்டுதல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு காளியம்மன், பகவதியம்மன், திருக்குடத்துக்குள் எழுருந்தருள செய்தல், வேள்விச் சாலையில் நுழைதல் முதற்கால யாக வேள்விகள் துவக்கம் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு புதன் ஹோரையில் எந்திர சக்தி நவரத்ன சக்திகளை நிலை நிறுத்துதல், எண்வகை மருந்து சாற்றுதல் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு கனி, மூலிகை வேள்வி, திருமுறை விண்ணப்பம், நிறைய அளித்தல், பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்கல் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு காளியம்மன், பகவதியம்மன் இரண்டாம் கால யாகவேள்வி துவக்குகிறது. காலை 7 மணிக்கு தொட்டு துலக்குதல், உயிர் ஊட்டுதலும்நடக்கிறது.
* காலை 8மணிக்கு கனி, மூலிகை வேள்வி, திருமுறை விண்ணப்பம், நிறையவி அளித்தல், பேரொளி வழிபாடு நடக்கிறது.
கும்பாபிஷேகம்: காலை 8.30 மணி முதல் 9மணிக்குள் புனித நீர் குடயாத்திரை அனுமதி பெறுதல், கன்னிகா லக்கினத்தில் காளியம்மன், பகவதியம்மன் ஆகிய தெய்வங்களின் விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகமும், அலங்காரம் மலர்களால் போற்றி வழிபாடு பிரசாதம் வழங்கலும் நடக்கிறது. காலை 10 மணிக்கு அன்னதானமும், இரவு 10 மணிக்கு வள்ளி திருமண நாடகமும் நடக்கிறது. ஆகம முறைப்படி தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், தலைமை அர்ச்சகர் ஜனஹர்(எ) சதாசிவ குருக்கள் தலைமையில் நடக்கிறது. ஏற்பாடுகளை தலைவர் துரைராஜ், செலாளர் வேல்முருகன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் செல்வராஜ், பகவாணிதாஸ், பாண்டியராஜன்,ஸ்டார் நற்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.