பெருமாளின் பரிசான பூ மாலையை எடுத்துக்கொண்டு துர்வாச முனிவர் தேவலோகம் வழியாக வர..அதே வழியில் இந்திரனும் வர..தன்னிடம் உள்ள மாலையை இந்திரனுக்கு பரிசாக கொடுத்தார் துர்வாசர்..
அதை வாங்கிய இந்திரன் யானையின் நெற்றியில் மாலையை வைக்க யானை அதை எடுத்து காலில் போட்டு மிதித்தது..கோபம் கொண்ட துர்வாசர் இந்திரனுக்கும் அவரது படைகளும் பலமிழந்து போகுமாறு சாபமிட்டார்.. தேவர்கள் பலமிழக்க அசுரர்கள் பலம்பெற்று தேவர்களை அழித்தனர்..போரில் இறந்த அசுரரர்களை அசுர குரு சுக்ரசாரியார்உயிர்ப்பிக்க..பிரம்மாவின் தலைமையில் தேவர்கள் பரமாத்மாவை தஞ்சமடைந்தனர்..
பரமாத்மா..பாற்கடலை கடையும் பொழுது வரும் அமிர்தத்தை உண்டால் தேவர்கள் உயிர் பெறலாம் என்று அருளினார்..இதில் சக்தியுடைய அசுரர்களையும் இணைத்துக் கொண்டு அவர்களுக்கும் பங்கு தருவதாக ஒப்பந்தம் ஆனது..தலை பகுதிக்கு அசுரர்கள் செல்ல..வால் பகுதி தேவர்களுக்கும் கிடைக்க.. மந்தார மலையைகொண்டு வாசுகி எனும் பாம்பை கயிராக்கி பாற்கடலை கடைய மந்தார மலை மூழ்காமல் விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து அதாவது ஆமையாகி அவதாரம்
எடுத்து மலையை தாங்கினார் என்று கூர்ம அவதாரத்தின் வரலாற்றை புராணங்கள் கூறுகின்றன..இதன் உண்மை ரகசியத்தை உணர்வோம்..
சிருஷ்டியில் ஆரம்பத்தில் தெய்வீககுணமுடைய தேவதையாக இருந்தவர்கள்.. மெல்ல.. மெல்ல.. பிறவிச் சக்கரத்தில்
வந்து தன்னுடைய வலிமையை இழக்க ஆரம்பிக்கின்றனர்..பிறவி எடுக்க.. எடுக்க...தெய்வீக குணங்கள் குறைந்து காமம், கோபம், பேராசை ,பற்று, அகங்காரம் என்ற அசுர குணங்களுக்கு வசமாகின்றனர்.. தர்மம் இழந்க நிலையில் கலியுக இறுதியை அடைந்த தேவர்கள் அசுர குணங்களை வெல்ல முடியாமல் அதற்கு அடிமையாகி திண்டாடினர்.. இந்த நேரத்தில் பரப்பிரம்மத்தில் இருக்கும் ஜோதியான பரமாத்மாவிற்கு உலகத்தில் தர்மத்தை படைக்க வேண்டிய சூழ்நிலை வருகின்றது..யார் சிருஷ்டியின் ஆரம்பத்தில் ஸ்ரீகிருஷ்ணராக இருந்தாரோ.. அவர் கலியுகத்தின் இறுதியை அடைந்து சாதாரண மனிதனாக..தான் உயர்ந்த நிலையில் இருந்தோம் என்பதை மறந்திருந்த வேளையில் கலியுக இருட்டை வெளிச்சமாக்க ஜோதியான பரமாத்மா சிவன் அந்த மனிதரின் 60ம் வயதில் அவருக்குள் பிரவேசமாகி அவருக்கு பிரம்மா என பெயரிட்டு அவரது முற்பிறவியை ஞாபக படுத்தி அவருடைய ஆன்மாவிற்கு இழந்த பலத்தை ஞானத்தின் மூலம் அளிக்கின்றார்.. பிரம்மாவின் நெற்றியின் அமர்ந்து ஞானத்தை தந்தை ஈசன் வழங்க..அதை கேட்டு தேவ லோகத்தில் இருந்து கலியுக இறுதியை அடைந்த அனைவரும் மெல்ல..மெல்ல..தந்தை ஈசனை அடைகின்றனர்
ஞானம் என்ற அழிவில்லாத பொக்கிக்ஷத்தை தந்தை ஈசன் வழங்குவதால்.. இந்த ஞானமே பாற்கடலாக சாஸ்த்ரங்களில் உருவகப்படுத்தப் பட்டுள்ளது, ஞானத்தை சிந்திக்க..சிந்திக்க.. ஒருவரிடமுள்ள அசுர சிந்தனைகள் விலகி அவர்களுக்குள் ஆன்மீக சிந்தனை எனும் தெய்வீக சிந்தனைகள் வளர ஆரம்பிக்கின்றன இதையே நஞ்சை கக்கும் 5தலை எனும் காம,கோப,லோப, மோக, அகங்காரம் பாம்பின் தலை பகுதியாக காட்டப்பட அங்கே அசுரர்கள் நிற்கின்றனர்.. அதே அசுர குணம் தேவர்களிடம் விடுபட்டு விட்டது என்பதற்காக வால் பகுதியில் தேவர்கள் உள்ளனர்..காம, கோப,லோப, அகங்காரம் என்ற ஆலகால விஷம் என்பதை உணர்த்த..5 தலையுடன் நாகம் காண்பிக்கப்பட்டு உள்ளது.மந்தாரமலை என்பது கலி யுகத்தையும்..இந்த கலியுகம் முடிவடையும் வரை..5ம் புலன்களை அடக்கி வாழவேண்டும் என்பதை ஆமையும் உணர்த்துவதாக உள்ளது.. ஆமை
தனக்கு துன்பம் நேரும்பொழுது.. தலையையும்,4 கால்களையும் உள் இழுத்துக் கொள்வது போல..இறைவன் சிவபரமாத்மாவின் ஞானத்தை கேட்டு புலன்களை அடக்கி கலியுக வாழ்க்கையின் துன்பத்திலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ளவேண்டும்..எப்படி பாலில் வெண்ணை இருக்கின்றது.. தயிர்,மோர், பாலாடை,நெய் முதலியன இருக்கின்றது..அதை பால்
என பார்த்தால்
அது வெறும் பால்தான், அது போல இறைவன் என்ற பாற்கடலில் கிடைக்கும் ஞானத்தை ஒருவன் சிந்தித்த வண்ணம் இருந்தால்..அவனை 5 தலைநாகம் எனும் அசுர விகார குணங்கள் அவனை ஒன்றும் செய்யாது..
அவன் இந்த கலியுகம் எனும் விஷ வைதரிணி நதியை கடந்து
பாற்கடலுக்கு
சென்றுவிடுவான் அதுவரை தர்மத்தை படைக்க வந்திருக்கும் பரமாத்மா ஈசனிடம் நம்மிடம் இருக்கும் தீய குணங்களை கொடுத்துவிடவேண்டும்..அதை தாங்க வல்லவர் எம்பெருமான் தந்தை சிவனாரே ஆவார்..இதுவே கூர்ம அவதாரத்தின் ஞான ரகசியம்.. இதன் உள் அர்த்தமறிந்து மகிழ்வுருவோம்.. வாழ்த்துக்கள்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen