பிறந்தநாள் வாழ்த்து:செல்வி தேவராசா தேனுகா. 15.11.17.

 ஜெர்மனியை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட 
 செல்வி  தேவராசா தேனுகா  (தேனு) அவர்களின்  பிறந்தநாள் 15.11.2017. இன்று  பிறந்தநாளை  தனது இல்லத்தில்  மிகச்சிறப்பாக கொண்டாடுகிறார்,இவரை அன்பு அப்பா அம்மா 
  சகோதரர்கள் , பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், மச்சான் மச்சாள் மார் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகி​ன்றனர் இவர் சிறந்த பின்னணி பாடகியாக விளங்கிவரும் தேனுகா.தேவராசா பாடும் திறன் உள்ளவரும் பல இசைப்பேளைகளில் 
பாடியுள்ளவரும் ஆவார்.
இவர் தன் தந்தை இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார் அதுமட்டுமல்ல இவர் தனது ஐந்தாவது வயதில் கவிஞர் திரு என்.வி.சிவநேசன் வெளியிட்ட புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையில் 
பல பாடலை பாடியுள்ளார்
இந்த இசைப்பேளையை வெளியிட்டு வைத்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி அவர்கள் இவர் திறனைப்பாராட்டினார்என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு மட்டுவில்: ஞானவைரவர் இசைப்பேளை.டென்மார்க் அபிராமி அம்மன் இசைப்பேளை,டோட்மூண்ட் சிவன் இசைப்பேளை, சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கை இசைப்பேளை முல்கையில் முத்துக்குமாரசாமி விதைகளை விதைப்போம் இசைப்பேளை   நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்  இசைப்பேளையிலும்  பாடியுள்ளார்.
இவர் கலைத்துறையில் வலம் வந்து சிறந்து விளங்கி
பலர்போற்ற இசைப்பணி தொடர வாழ்த்துவோம் தேனு அவர்களை மட்டுவில் அம்மன் ..சிறுப்பிட்டி அம்மன்  இறை அருள் பெற்று    செல்வி  தேவராசாதேனுகா பாடிய நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்  இசைப்பேளை இணைப்பு  இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
 இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  உலகமும் உறவுகளும் போற்ற  நோய் நொடி இன்றி 
 பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.