அன்னையின் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்

கல்வியில் நினைவாற்றல் பெருக*
வெள்ளை தாமரைப் பூவில் இருப்பாள்..
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்..
கொள்ளையின்பம் குலவு 
கவிதை
கூறும் பாவலர் உள்ளத் திருப்பாள்..
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்..
கள்ள மற்ற முனிவர்கள்
 கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்..
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்..
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்..
கீதம் பாடும் குயிலின்
 குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்..
கோதகன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்..
இன்ப மேவடி வாகிடப் 
பெற்றாள்
கல்வி கேள்வி ஞானத்தை அளிக்கும் கலைவாணியாம் அன்னை சரஸ்வதி தேவியைக் கொண்டாடும் அற்புதத் திருநாள். நம் உயர்வுக்கு அன்றாடம் பயன்படுத்தும் ஆயுதம் மற்றும் இயந்திரம் அவற்றை இறைபொருளாக பாவித்து வணங்கும் உன்னதத்திருநாள். இந்த நன்னாளில் மாணவர்கள் கல்வியில் மேம்படவும், அனைத்து தரப்பினர்களுக்கும் அவர்களது தொழில் சிறக்கவும் வேண்டி இறைவனை 
வேண்டுகின்றோம்.
நம்  இணைய உறவுகள்  அன்பு நண்பர்கள் அனைவருக்கும், அன்பான  
இனிய சரஸ்வதி, மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து. திரு.சுந்தரலிங்கம் சத்தியன். 26.09.17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  மார்க்கம் ஒன்ட்டாரியோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :சுந்தரலிங்கம்  சத்தியன் அவர்களின்  பிறந்த நாளை இன்று 26.09.2017 தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  மச்சாள்மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை  ஆசியுடன்  எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு   பல்லாண்டு காலம்வாழ்கவென  வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்த நாள் வாழ்த்து:திரு ,சிவசுப்பிரமணியம் உதயகுமார்.24.09.17.

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்  தற்போது  சுவிஸ்சில் வசிக்கும்   திரு - சிவசுப்பிரமணியம் உதயகுமார் (உதயன் )  (24.09.2016) இன்று சுவிஸ்சில் தனது இல்லத்தில்  பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி அன்பு ,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம் தம்பி குடும்பம்,மற்றும்
 நண்பர்களும் 
, இவரை சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி 
வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்.  இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன  
 வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>








பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி யோகராஜா-19.09.16

திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி யோகராஜா அவர்களின் பிறந்த  நாள்  19.09.2017..இன்று .இவரை  அன்பு கணவர்  அன்பு பிள்ளைகள் மருமகள் 
பேரப்பிள்ளைகள் 
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .திருகோணமலை அம்மன் இறைஅருள் பெற்று நோய் நொடி இன்றி எண்ணியது போல் யாவும் ஜெயமாக வேண்டும் ! உன் ஏக்கமும் எண்ணமும் நிறை கண்டு  
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </

பிறந்தநாள் வாழ்த்து திரு .வல்லிபுரம் நற்குணகுலசிங்கம் 18.09.17

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திரு வல்லிபுரம் நற்குணகுலசிங்கம் [நற்குணம் ] அவர்களின் ஐம்பதவது பிறந்த நாள் இன்று 18.09.2015 .இவரை அன்பு மனைவி அன்பு மகன் மாமி அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
இவரை நவக்கிரி மாணிக்க பிள்ளையார் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி  இனிமையும் புதுமையும் வரமாக வேண்டும் ! இதழ்கள் சிரித்து இதயம் இனிமை காண  நிறைந்த வாழ்வோடு வாழ  பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் 
வாழ்த்துகின்றன....
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு பாலசுந்தரம் மதனபாலன் .17.09.17.

யாழ் தோப்ப்பு அச்சுவேலியை பிறப்பிடமா​வும்தற்போது சுவிசை  வதிவிடமாகவு​ம் கொண்ட திரு பாலசுந்தரம் மதனபாலன் 17.09.2017 இன்று தனது பிறந்தநாளை சுவிஸ் வாழ் 
நண்பர்களுடன் கொண்டாடினார் இவரை அன்பு மனைவி  அன்பு மகன் அம்மா, தங்கை,மார்  சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், 
ஆகியோரும் மற்று ம் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகி​ன்றனர்.இன்று பிறந்தநாளை கொண்டாடும் இவரை  தோப்பு போதி பிள்ளையார் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி எண்ணியது போல் யாவும் ஜெயமாக வேண்டும் ! உன் ஏக்கமும் எண்ணமும் நிறை கண்டு  
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்த நாள் வாழ்த்து..செல்வி பரம்சோதிராஜா வர்ணா 15.09.17.

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட ,திரு ,திருமதி , பரம்சோதிராஜா, தம்பதிகளின்  செல்வப்புதல்வி வர்ணா  அவர்களின்    பிறந்தநாள்..15.09.2017..அன்று தனது இல்லத்தி கொண்டாடினர் .இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தம்பி  மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மற்றும்  குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றார்கள் .
  இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றிபல்  கலைகளும் பெற்று   அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு  பிறந்த தினமான இன்றும் என்றும்  எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றன. 
  வாழ்கவளமுடன்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திருமணநாள்வாழ்த்து திரு திருமதி சந்திரன் தம்பதிகள் 14..09.17

.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் தம்பதிகளின்   திருமணநாள் இன்று..14..09.17.  இவர்களை அன்பு ,அம்மா அண்ணா அண்ணி  அன்பு பிள்ளைகள் ,பேரப்பிள்ளிகள் பெறாமக்கள் மருமக்கள் மற்றும் சகோதர சகோதரிகள் 
,சித்தப்பாமார் மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் , நண்பர்கள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர்.
 இவர்களுடன் இணைந்து     நவக்கிரி.கொம்நவக்கிரி  http://lovithan.blogspot.ch/2014/09/140914.html  நிலாவரை.கொம்  நவற்கிரி இணையங்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன்  இன்றும் 
என்றும் இன்பமாய் நோய் நொடி இன்றி 
 பத்தும்பதினாறும் பெற்று சீரும் சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.17 .


யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது நான்காவது  .
பிறந்த நாளை 12.09.2017. இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா  அன்புத்தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார் 
மாமாமார் மாமி மார்
மச்சான்   மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும் பெற்று ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்  ற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழிய
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும்  வாழ்த்துகின்றோம் ----
எங்கள்  அன்பு யஸ்வினி குட்டிக்குயை  அள்ளி அணைத்து வாழ்த்து கின்றோம் 
   வாழிய நீ பல்லாண்டு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>










பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் (09.09.17)


யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்  ராஜேஸ்வரன்(ராஜன்) அவர்களின்  பிறந்தநாள்.09.09.2017 இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா
 பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து  சிறுப்பிட்டி   ஸ்ரீ ஞானவைரவர் இறை அருள்பெற்று 
 துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று .
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி 
வாழ்கவாழ்க வென நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,வாழ்த்துகின்றன 
வாழ்க வளமுடன்.. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






திருமண நல்வாழ்த்து திரு திருமதி பாலகுமார் 09.09.17.

யாழ்  தோப்பு   அச்சுவேலியை  பிறப்பிடமாகவும்  சுவிசை வதிவிடமாக உள்ள 
திரு திருமதி ♥ பாலகுமார் ♥, (பாபு &சாந்தி )அவர்களின் திருமண நாள்.09-09.2017.  இன்று திருமண நாள் காணும் தம்பதியினருக்கு நல் வாழ்த்துக்களைகூறும்
 அன்பு  அப்பா அம்மா பிள்ளை  மாமா அக்கா அத்தான் 
குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து தம்பதியினர்.  இறை அருள் பெற்று.
நற்றமிழால் இணைந்துநிற்கும் நயமுடைய தம்பதிகாள்
சொற்றமிழால் வாழ்த்துகின்றோம் சுகமுடனே வாழ்ந்திடுக
வற்றாத செல்வமொடு வளமோடு வாழ்கவென்று
மனமார வாழ்த்துகிறோம் வாழ்ந்திடுக  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



நல்லூர் கந்தசுவாமி கோவில் 2010 வருடாந்த மகோற்சவ சிறப்பு பார்வை

¨வரலாற்று சிறப்பும் சித்தர்களின் அருளும் நிறைந்த, யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி கோவில் 2010 வருடாந்த மகோற்சவத்  திருவிழா 15.08.2010  ஞாயிறுக்கிழமை காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கொடியேற்றத் திருவிழாவிலும் தொடர்ந்து வரும் திருவிழாவிலும், பெருந்திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து 
கொண்டிருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலுமிருந்து பக்தர்கள் மகோற்சவத்  திருவிழா காண, நல்லூரை நோக்கி நாள் தோறும் விரைந்து வருகின்றனர்.  இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியம்,  யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளில் இருந்தும் கோவில் வளாகத்துக்கு
 சிறப்பு பேருந்து சேவையை நடத்தி வருகின்றது.கோவிலின் சுற்றுப் புறங்களிலும், வீதிகளிலும், பக்தர்கள் இளைப்பாறுவதற்கும், தாக சாந்தி செய்து கொள்வதற்குமான  பந்தல்கள்
 அமைக்கப்பட்டிக்கின்றன. அன்னதானத்திற்காக அன்னதான மண்டபங்கள் சிறப்பாகச் செயற்படுகின்றன. ஆலயத்துக்கு வரும் அடியவர்களின் நன்மை கருதி  ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகளில்
 வாகனத் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பாதணிகளை வைப்பதற்கான விசேட ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆலய வீதிகளில் யாழ். மாநகரசபையின் 
கண்காணிப்பில் மண் பரப்பப்பட்டு அடியவர்கள் அங்கப் பிரதிஷ்டை செய்வதற்கு ஏதுவாக பவுஷர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டதுடன், மேலும் சில செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆலய வீதிகளில் தொண்டர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸார் மற்றும் படையினரும் வீதிப் மறிப்புப்  பகுதிகளில் கடமைகளில்
 ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை,ஆலய வீதிகளில் பாதணிகளுடன் நடமாடுவதற்கு யாழ். மாநகரசபை தடை அறிவித்தல் விடுத்திருந்தபோதிலும்,  இதனை மீறி பலர் ஆலய வீதிகளில் நடமாடியதை அவதானிக்க முடிந்தது. அங்கப் பிரதிஷ்டை செய்யும் பகுதிகளில் இவ்வாறு பாதணிகளுடன் நடமாடுவதால் தொற்றுநோய்கள் பரவும் நிலைமை காணப்படுவதால் இதற்கு மாநகரசபை இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
 வேண்டியதும், கட்டாக்காலி நாய்களை நல்லூர் ஆலயத்தின் வீதிகளில் கட்டுப்படுத்துவதும் அவசியமானதாகும். மற்றும் ஆலயத்தின் வீதிகளில் தேவையற்று சுற்றி வரும் வாகனங்களையும் வீதிகளிற்கு வருவதை தடுக்கப் படவேண்டும், அத்துடன் நல்லூர் ஆலயத்தின்
 உட்பகுதிகளில் புகைபடம், வீடியோ எடுத்தல் முற்றாகத் தடைசெய்யப்பட்ட போதும் சிலர் அதனை மீறி செயற்படுகின்றனர் என்பது பல இணையத்தளங்கள் மூலம் தெரிய வருகின்றது. இவ்வாறு அத்துமீறி எடுக்கப்பட்டுள்ள புகைபடங்கள் ,வீடியோக்களை வெளியிட்டதை, வெளியிடுவதை நிறுத்துவதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மதிப்பை உலகிற்கு 
வெளிக்காட்ட முடியும்.
நல்லூர் முருகனுக்கு அலங்காரக் கந்தன் எனும் சிறப்புப் பெயருண்டு. இங்கே சுவாமிக்கு நடைபெறும் அலங்காரம் மிகப்பிரசித்தம். முதல் தினத்தில் முருகப்பெருமான் செந்நிற அலங்காரத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார். இவ்வாறு எனைய
 தினங்களிளும் வெவ்வேறுநிற அலங்காரத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார். நல்லூர் கந்தன் திருவிழாக் காலங்கள் யாழ்ப்பாணத்தின்  சகல பகுதியிலும் பக்தி  உணர்வைத் தரும் காலம் என்பது
 குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழா நடைபெறுகின்றது என்பது அனைவரும் அறிந்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆரம்பித்த திருவிழா இருபத்தைந்து நாட்கள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரியும். இம்மஹோற்சவத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மஞ்சத் திருவிழாவும் 31 ஆம் திகதி 
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கார்த்திகை திருவிழாவும் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு சந் தான கோபாலர் திருவிழாவும் மாலை 5 மணிக்கு கைலாச வாகன திருவிழாவும் 4 ஆம் திகதி
 சனிக்கிழமை காலை 7 மணிக்கு கஜவல்லி மஹா வல்லி திருவிழாவும் மாலை 5 மணிக்கு வேல்விமான திருவிழாவும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தண்டாயுதபாணி
 திருவிழாவும் மாலை 5 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு
 சப்பறத் திருவிழாவும் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு இரதோற்சவமும் 8 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவமும் 9 ஆம் திகதி வியாழக்கிழமை 
மாலை 5 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும் மறு நாள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவமும்
 இடம்பெறவுள்ளது.
இலங்கையின் பிரசித்திபெற்ற இந்து ஆலயங்களுள் நல்லூர் கந்தசுவாமி கோவிலும் முக்கியமானது. திருவிழாக் காலங்களில் மாத்திரமன்றி எல்லா நாட்களிலும் ஏராளம் பக்தர்கள் நல்லூர் ஆலயத்துக்கு வந்து 
வழிபடுவது வழக்கம்.
திருவிழாக் காலத்தில் பக்தர் கூட்டத்தால் இப் பிரதேசம் நிறைந்துவிடும். நல்லூர் திருவிழா நாட்களை யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் இந்துக்கள் அனைவரும் புனித நாட்களாகக் கருதுவார்கள். தென்னிலங்கையில் வாழும் இந்துக்களும் நல்லூர் திருவிழாவுக்காக வடக்கு நோக்கி வருவது வழக்கம். ஏன் கடல் கடந்த நாடுகளில் வாழும் யாழ்ப்பாண இந்துகள் கூட நம் பெருமானும் திருவிழாவிற்காக யாழ்நகர் நோக்கி
 வருகை தருவார்கள்.
திருவிழாக் காலங்களில் முன்னைய ஆண்டுகளைப் போலப் பக்தர்கள் வெள்ளம் கரைபுரள்கின்றது பிற இடங்களிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து 
காணப்படுகின்றது..
மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்பது போல, இந்தத் தடவை நல்லூர் திருவிழா களைகட்டுகின்றது. கொடியேற்ற நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையே
 இப்போது பல தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் தனியார் பஸ்களில் கடந்த சில நாட்களாக நல்லூர் திருவிழாவுக்குச் வருபவர்கள்
 கணிசமான எண்ணிக்கையினராக உள்ளனர். பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் ஏராளம் தற்காலிக கடைகள் கோவிலை அண்டிய பிரதேசங்களில் அமைந்துள்ளன.
முன்னர் இருந்த எல்லாத் தடைகளும் நீங்கி வடபகுதி உட்பட நாடு வழமை நிலைக்குத் திரும்புகின்றது என்பதற்கு இந்த வருட நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா ஒரு எடுத்துக்காட்டு.
நல்லூர் மகோற்சவ காலம் பாடசாலை விடுமுறைக் காலமாக இருப்பதால், இலட்சக்கணக்கான தமிழ், சிங்கள மக்கள் நல்லூருக்கு வந்துசெல்கிறார்கள். கூடவே வெளிநாடுகளில் இருக்கும் நம்மவர்களும் நல்லூர் கந்தனின் திருவிழாவுக்கு வருவதைக் காணமுடிகின்றது.
 இவ்வாறு வருகின்றவர்களில் சிலர் நல்லூர் மகோற்சவத்தில் கலந்து கொண்டு விசித்திரமாக செயற்படுகிறார்கள் என்பது வருத்ததிற்கு உரிய விடையமாகும் எதுவாயினும் நல்லூர் மகோற்சவ காலத்தில் தெய்வீகத் தன்மையை நல்லூர்ப்பகுதியில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இது மிகவும் 
அவசியமானதாகும்.
நல்லூர் திருவிழா காரணமாக நல்லூர் மாத்திரமன்றி யாழ்ப்பாணப் பிரதேசமும் களைகட்டி வருகின்றது.
இவ்வாரத்தின் இறுதி நாட்களில் பெய்து வந்த மழை காரணமாக களைகட்டி வந்த யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருந் திருவிழாவில் கலந்து கொள்ளும் முருக பத்தர்களின் 
எண்ணிக்கை சிறிதளவு குறைந்து காணப்படுகின்றது. எனினும் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருந் திருவிழா குறித்த நேரந் தவறாமல் இனிதே சிறப்புடன் இடம்பெற்று வருகின்றது என்பது ஒரு முக்கிய விடயமாகும்.
மழை காரணமாக ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகளில் பரப்பப்பட்டிருந்த  மண் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதுடன் மழை நீரும் தேங்கிக் காணப்பட்டது. முன் எப்போதும் இல்லாதவாறு யாழ். மாநகரசபையினர் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு தேங்கி நின்ற நீரை வெளியேற்றியதுடன் அடித்துச் செல்லப்பட்ட மண்ணிற்கு பதிலாக புதிய மண்கள் பரப்பப்பட்டு அடியவர்கள் அங்கப் பிரதிஷ்டை செய்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது அனைவராலும் வரவேற்கக்
 கூடிய விடயமாகும்.
முதல் திருவிழாக் காலங்களில்  நல்லூர் பிரதேசத்தில் அடக்கடி மின் தடைப்பட்ட போதும் இப்போது இது சீர்செய்யப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும்  நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருந் திருவிழா சிறப்புடன் நடைபெறும் என்பதில் எதவித 
ஐயமும் இல்லை.
உற்சவ காலங்களில் எற்படும் குறைபாடுகளை 0094212228888 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாகத் தொடர்பு கொள்ளமுடியும் என யாழ். மாநகரசபையினர் அறிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு வல்லிபுரம் ஞானகுலசிங்கம் 08.09.17

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பேர்ன்னை வசிப்பிடமாககொண்ட திரு வல்லிபுரம்  ஞானகுலசிங்கம். [ஞானம்] அவர்களின்  பிறந்த நாள்  08.09.2017 இன்று இவரை அன்பு மனைவி அன்பு மகன் 
அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இவரை இறைஅருள் பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்து திருமதி தயாவரன் 07.09.17.

யாழ் அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள 
திரு .திருமதி .தயாவரன் ( சுசிகலா ) அவர்களின் பிறந்த நாள்  07.09.2017.இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்
 கொண்டாடுகின்றார்
  பிறந்தநாள் காணும் இவ்உறவை  அன்பு கணவர்  பிள்ளைகள்,
மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் , அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் அருள்பெற்று இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு சுப்பிரமணியம்.ஜெயகுமாரன்.-07.09.17-

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்  யேர்மனியை  வசிப்பிடமாகக்கொண்ட
திரு. சுப்பிரமணியம் ஜெயகுமாரன் அவர்கள் 07.09.2017இன்று  தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை மனைவி 
,பிள்ளைகள்
மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் , சிறுப்பிட்டி அம்மன் இறை அருள்பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று . பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



யாழ் தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய முத்தேர் பவனி

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா 05.09.2017. சிறப்பாக 
இடம்பெற்றுள்ளது.
  முருகப்பெருமானுக்கு காலை முதல் விசேட அபிஷேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், சந்நிதி வேற்பெருமான், ஆறுமுக சுவாமி ஆகிய முத்தெய்வங்களும் உள்வீதி 
வலம் வந்தனர்.
அதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணியளவில் முத்தெய்வங்களும் முத்தேர்களில் எழுந்தருளினர். சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு விசேட தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க முற்பகல் 10.30 மணியளவில் முத்தேர்
 பவனி ஆரம்பமாகியது.
விநாயகப்பெருமானின் தேர் முன்னே செல்ல சந்நிதி வேற்பெருமானின் பிரதான தேர் வீதி வலம் இடம்பெற்றது. பிரதான தேரின் வடத்தை பக்திப் பரவசத்துடன் நூற்றுக் கணக்கான அடியவர்கள் 
தொட்டுஇழுத்தனர் 
முற்பகல்11.30 மணியளவில் முத்தேர்களும் இருப்பிடத்தைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து 
வழிபட்டனர்.
நூற்றுக் கணக்காண ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணை செய்தும், பறவைக்காவடிகள், செதில் காவடிகள் என்பன எடுத்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும், பாற்காவடிகள் எடுத்தும் நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு இரவு வரை குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆலயத்தை நோக்கி பெருமளவு காவடிகள் வருகை தந்த வண்ணமுள்ளன.
தேர்த் திருவிழாவில் யாழ். குடாநாட்டின் பல பாகங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வருகை தந்த இலட்சக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.
தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட அடியவர்களின் தாகம் தீர்க்கும் வகையில் ஆலயச் சூழலிலும், ஆலயத்திற்குச் செல்லும் குடாநாட்டு வீதிகளின் பல்வேறிடங்களிலும் தாக சாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் ஆலயச் சூழலிலுள்ள சந்நிதியான் ஆச்சிரமம் உட்பட பல்வேறு மடங்களிலும் அன்னதானமும் பரிமாறப்பட்டன.
இதேவேளை, 06.09.2017. காலை 08 மணிக்குத் தீர்த்தத் திருவிழா சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





-கற்றிங்கன் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயமகா கும்பாபிசேகம் 03.09.17

யேர்மனி -கற்றிங்கன் நகரில் அமர்ந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயமகா கும்பாபிசேகம் 03.09.2017 சிறப்பாக நடந்தேறியுள்ளது இதில் உ லக சிவாச்சரியா பெருமக்கள் கலந்து சிறப்பித்தமகா கும்பாபிசேகத்தில் பத்தர்கள் தரித்சித்துத நின்றது சிறப்புள்ளதாகும்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



Powered by Blogger.