உங்கள் திருமணத் தடை மற்றும் குழந்தை செல்வம் தரும் சரபேஸ்வரர்

கோவையில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் வெள்ளிமலை தோட்டம் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது
 சொர்ணாம்பிகை உடனமர் நவபாஷான 
சித்தலிங்கேஸ்வரர் கோவில்.
சித்தர் பெருமான் ஸ்ரீ பிரமானந்த சாமிகளால் ஸ்தாபனம் செய்யப்பட்ட உலகில் முதல் நவபாஷான சிவலிங்கம் இங்குள்ளது. உலகிலேயே நவபாஷான சிவலிங்க கோவில் இதுதான்
ஸ்ரீ சித்தர் பீடம் பிரம்மானந்த மடம் அறக்கட்டளையினர் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறார்கள். தினமும் சாமிக்கு மூலிகை தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.
ஞாயிறு மாலை வேள்வி பூஜையும், இரவு சிவசக்தி யாக பூஜையும் நடைபெறுகிறது. இந்த பூஜையில் பங்கேற்போருக்கு திருமண தடை நீங்கும். குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும்.
இங்குள்ள அம்மன் சன்னதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாக கருதப்படுகிறது. கோவிலில் கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. மேலும் இந்த கோவிலில் நவகோள்களும் ஒரே நேர் கோட்டில் உள்ளது தனிச்சிறப்பு என்று கூறுகிறார்கள்.
சித்தலிங்கேஸ்வரர் கோவில் பஞ்சபூத தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அகிலம் போற்றும் சரபேஸ்வரருக்கும் இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சரபேஸ்வரர் ஐம்பொன் சிலையில் அழகு மிளிர காட்சி தருகிறார்.
  என்பதாகும்







 

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா.13-05-2024. இன்று  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.  
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாணந்த குருக்கள் தலைமையில் காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரையான சுப நேரத்தில் கொடியேற்றம் இடம் பெற்றது.  
தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கொடிக் கம்பத்திற்கு முன் எழுந் தருளியதை தொடர்ந்து விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.  
அதனை தொடர்ந்து கொடிக் கம்பத்திற்கு விசேட அபிஷேகம் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து கொடியேற்றும் விழாவில் 
இடம்பெற்றது.  
இதன் போது கொடியேற்ற பெரு விழாவில் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டமை என்பதாகும் 




பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் யஸ்மிதா.09.05.2024


யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் ஒன்பதாவது பிறந்த நாள் .09.05.2024..இன்று .தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றார்  இவரை
அன்பு அப்பா அம்மா அன்பு அக்கா அன்பு ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார்,
மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர். சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்.சுவிஸ் சூரிச்முருகன்.
சுவிஸ் டூடன் விஸ்ணுதுக்கை அம்மன்.சுவிஸ் சூரிச்சிவன்ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சகல கலைகளும்கற்று நீ வாழிய வாழிய. பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென 
வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
பிறந்த நாள் வாழ்த்து கவிதை>>>>>
,மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்
நீ பல்கலையிலிலும் சிறந்து
பண்புடனும் புகழுடனும்
பார் போற்ற வாழ வேண்டுமென
இன்றுஉன் பிறந்த நாள் இது அழகிய இனிய நாள்
புன்னகை உந்தன் பூஎழிலே
உன்னை அள்ளி அணைத்திட ஆசை
அன்பை சொரிந்திட
அன்பிலே முளைத்து
இதயத்திலே
பூத்து குலுங்கும் கவியே !!!
புதுபுது கவியால்
தினம்தினம் பிறப்பே !
புதுமலராய் சிறப்பே !
தளத்தில் தாயம்மா
குணத்தில் சேயம்மா
கவிதைக்கு கனியம்மா
தமிழுக்கு நீயம்மா என்று
மலரின் மணமாக வாழ்க
…இன்று பிறந்த எங்கள் வெண்ணிலா வாழிய பல்லாண்டு பல்லாண்டு
காலம் வாழ்கவளமுடன்






நிச்சயமாக,பெண்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள்

ஆன்மீகம் என்பது ஒரு ஆழமான தனிப்பட்ட மற்றும் பயணமாகும், மேலும் இது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் நபருக்கு நபர் பெரிதும் மாறுபடும். இருப்பினும், பெண்களுக்கு ஆர்வமாக இருக்கும் சில
 பொதுவான ஆன்மீகக் கருத்துக்கள் மற்றும் நடைமுறைகள் இங்கே
வீட்டில் இருக்கும் பெண்கள் முதலில் தெரிந்து 
வைத்துக் கொள்ள வேண்டிய இன்றியமையாத தகவல்கள் உங்களுக்காகபெரும்பாலும் பெண்கள் என்றால் சாமி என்று தான் அர்த்தம். அவர்கள் நல்லா தெரிந்து 
வைத்து இருப்பார்கள் ஆன்மீகம் மற்றும் சாத்திரம் சம்பிராதயம். அதிலும் குறிப்பாக ஐயர் வீட்டு பெண்களுக்கு கேட்கவே வேண்டாம். ஆனால் அனைவரும் செல்வம் செழிக்க, மகிழ்ச்சி தழைக்க, இன்பம் பொங்க அறிந்து வைக்க வேண்டிய அரிய தகவல்கள்:
1. பெண்களுக்கு வெள்ளிக்கிழமை என்றாலே சுத்தம் செய்ய அதிகாலையில் இருந்தே ஆரம்பித்து விடுவார்கள். காலையில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு, வீட்டுக்கு மகாலட்சுமி வருவதற்கு வரவேற்க தயாராகி 
விடுவார்கள். மகாலட்சுமி அமர்ந்திருக்கும் தாமரை பூக்கோலம் போடுவார்களே மிகவும் அற்புதமாக இருக்கும். அப்படி கோலம் போடும்போது 
தெற்கு திசை நோக்கி நின்று கொண்டு கோலம்
 போட கூடாது
. மாறாக வடக்கு மற்றும் சூரியன் நோக்கி கோலம் போடுதல்
 வேண்டும். அதே நேரத்தில் அமாவாசை மற்றும் வீட்டில் தவசம் நிகழ்ச்சிகள் அன்று கோலம் போடுவதை தவிர்த்து விடுதல் சாலச் சிறந்தது ஆகும். மேலும் வெள்ளிகிழமை அன்று ஒட்டறை அடிப்பது நல்லதில்ல
. இன்னும் சிலர் வீட்டை பெருக்கும் போதே ஒட்டறை அடிப்பார்கள். அதை தவிர்த்தல் நலம்.
2. முந்தின நாளே வியாழன் அன்றே பாத்திரம் கழுவி வெள்ளிக்கிழமை காலையில் சமையல் செய்வது நன்று. அப்படி சமைக்கும் போது பருப்பு சேர்த்து சமைப்பார்கள். ஒருவேளை பருப்பு வைக்க வில்லை என்றால் பெயருக்கு ஆவது 3 துவரம் பருப்பை சாதம் வடிக்கும்போது 
போட்டு விடுங்கள்.
3. வெள்ளிகிழமை அன்று அழுக்குத் துணிகளை சேர்த்து வைத்து துவைப்பதை தவிர்த்தல் என்பது தரித்திரம் தாண்டவம் ஆடுவதை 
கட்டுப்படுத்தலாம்.
4. குப்பைத்தொட்டி மற்றும் சமையல் சுத்தம் செய்யும் இடங்களில் துர்நாற்றம் அடிக்க விடாமல் அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருத்தல் வீட்டில் மங்களம் பெருக வழி வகை செய்யும்.
5. மேலும் வெள்ளிக் கிழமை அன்று மஞ்சள் கயிறை மாற்றுவதும், திருமணம் முடிந்த பெண்கள் மெட்டியை ஒன்று அணிந்தால் போதுமானது. மாறாக ஒரே காலில் மூன்று மெட்டிகள் அணிவதும் தவிர்த்தல் நல்லது. இது கணவனின் வளர்ச்சியை பாதிக்கலாம்.
6. அதே மாதிரி விசேச நாட்களில் இனிப்பை அதாவது பாயாசம் செய்தல் நலம். மாறாக கசப்பு உணவுகள் செய்தல் தவிர்ப்பது மிகவும் நல்லது. முக்கியமாக பாகற்காய் தவிர்த்து விட வேண்டும்.
7. பெண்கள் சேலை அணியும் போது முந்தியானது தொங்கி கொண்டே நடப்பது கூடாது. மாதவிலக்கு தினங்களில் தலையில் பூ வைப்பது
 தவிர்ப்பதும் நல்லதே.
8. பெண்கள் கிழக்குத் திசை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவங்களுக்கு மத்தியிலும், திருமணம் ஆன பெண்கள் உச்சந்தலையிலும் வைத்தல் வேண்டும்.
9. கோவில்களில் இறைவனை வணங்கும் போது பின்னங்கால்கள் ஒன்று சேர்த்து நெற்றி பகுதி தரையில் படுமாறு மண்டியிட்டு 
வணங்குதல் நல்லது.
10. சூர்ய உதயத்திற்கு முன்னால் குறிப்பாய் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அமிர்த வேளையில் எழுதல் மிகவும் நல்லது. மேலும் அதிகாலையில் குளித்து பிரம்ம முகூர்த்த விளக்கு போடுதல் செல்வ செழிப்பை வீட்டில் கொண்டு வரும். எதிர்மறை ஆற்றல் நம்மீது 
வராமல் செய்யும். அதுமட்டுமல்ல ஆன்ம திருப்தி மற்றும் அமைதியை கொடுக்க வல்லது.
11. மேலும் உக்கிரமாக இருக்கும் கோவில்களுக்கு கர்ப்பிணி பெண்கள் செல்லுதல் தவிர்ப்பது நல்லது.
12. பெண்கள் சமைக்கும் போது முதலில் சமைக்க காரணமாய் இருக்கும் பஞ்ச பூத நெருப்பை வணங்கி விட்டு அன்னம் என்கின்ற நம் வாழ்வாதரத்தின் உணவான அரிசியை உலையில் வைக்கும் முன்னே வணங்கி,
 அந்த அரிசியை உலையில் போடும் நேரத்தில் சுலோகம் சொல்லி
 பழக வேண்டும்.
சுலோகம் எதுவாயினும் ஒரு லச்சம் முறை சொன்னால் அது பலித்துவிடும். ஏன் பலமிக்க யானையை கூட பலமிழக்க 
செய்துவிடலாம்.
அப்படிப்பட்ட சுலோகம் நம் வாழ்வையும் மாற்றி விடும். நீங்கள் இந்த சுலோகத்தை அரிசி உலையில் போடும்போது 
சொல்லி வாருங்கள்!
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதஹி ஷரன்யே திரயம்பஹே தேவி அன்னபூரணி நமஸ்துதே
13. பெண்கள் கோவில்லுக்கு செல்லும் போது பாரம்பரிய ஆடை மற்றும் தூய்மையான உடை அணிந்து 
செல்லுதல் நல்லது.
14. பெண்கள் தலை முடியை விரித்து போடுதல் என்பது மகாபாரதத்தில் திரவுபதி முடியை விரித்து கொண்டு சபதம் ஏற்பது அனைவருக்கும் தெரியும் தானே. அப்படி சபதம் செய்ததால் பெண்கள் தலை
 முடியை விரித்து இருத்தல் ஆனது குலம் அழிவிற்கு வழியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
15. மேலும் பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணிந்து ஓசையுடன் எந்த ஒரு சுப காரியங்களும் செய்தல் என்பது மஹாலெட்சுமியின் மங்கள வாத்தியமாக பார்க்கப்படுகிறது. அதே மாதிரி குளித்து விட்டுத் தான் விளக்கு
 ஏற்ற வேண்டும். முகம் மட்டும் கழுவினால் போதும்
 என்று நினைத்தல் கூடாது. அதே நேரத்தில் எரியும் குத்து விளக்கை தானாகவும் அனைய விடக் கூடாது. ஊதியும் அனைக்க கூடாது. பூக்கள் வைத்து 
அனைப்பது நல்லது.
16. உப்பை தரையில் சிந்துதல் கூடாது. அரிசியை உலையில் போடும்போதும் கவனம் வேண்டும். சிந்துதல் கூடாது.
17. வீடுகளில் லக்ஷ்மி கடாட்சம் வர வேண்டுமா? இதை மட்டும் செய்து வாருங்கள்.... ராம நாமம் உச்சரித்து வாருங்கள் அனுமன் கூப்பிட அவசியம் இல்லை அவரே உங்கள் இடம் தேடி வந்து விடுவார். 
அதே மாதிரி ஸ்ரீமன் நாராயணன் புகழ் மற்றும் பாடல் கேட்கும் இடங்களில் அன்னை திருமகள் தேவி லக்ஷ்மி கூடவே வந்து 
விடுவாள். ஆகவே இல்லந்தோறும் ஆன்மீகம் தேவை.
 அதற்க்கு பெண்கள் தான் மிகவும் தெரிந்து வைத்து 
இருக்க வேண்டும். அதனால் வீடுகளில் அதி காலையில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை நேரங்களில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலித்து கொண்டு வணங்குதல் என்பது செல்வ செழிப்பை
 நாம் தேடி போக வேண்டாம். அதுவே நாம் இருக்கும் இடங்களில் நம் இல்லங்களில் ஏன் நம் உள்ளங்களிலும் அந்த செழிப்பை கொண்டு வரும். மாற்றம் வந்தே தீரும்.
18. உங்கள் வீடுகளில் வாய்ப்பு இருந்தால் துளசி மாடம் வைத்து விளக்கேற்றி மூன்று முறை வலம் வந்து பாருங்கள். நெல்லி மரம் வைத்தால் வீட்டில் தெய்வீக அருள் சுரக்கும். நெல்லிக்கனி என்பது 
அப்பேற்பட்ட ஹரிபலம் மிக்கது. லக்ஷ்மி குபேரர் இருக்கும் மரம். அறுசுவையும் உள்ள ஒரே கனி. உண்டு வந்து பாருங்கள். ஆரோக்கியம் என்பது உங்கள் சொத்தாக மாறி விடும்.
19. மேலும் லக்ஷ்மி கடாட்சம் கொண்ட பொருள்கள் என்பது சுமங்கலிகள் மற்றும் பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருமண், கண்ணாடி, 
உள்ளங்கை, தீபம் சூர்ணம், கோலம், திருவிளக்கு, யானை, பசு, இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு பிடித்த பொருளாக வலம் வருகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமை அன்று 5 முகம் கொண்ட விளக்குகள் 
ஏற்றுவது நல்லது.
2௦. வீடுகளில் சண்டைகள் மற்றும் அமங்கல வார்த்தைகள், எதிர்மறை சக்தியை நம் இல்லங்களில் குடிபுக வைத்து விடும்.
21. வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தண்ணீர் கொடுத்து அருந்த சொல்லுங்கள். மேலும் குங்குமம் வழங்கியும், மஞ்சள் கிழங்கு வழங்கி உங்களுடைய பூர்வ ஜென்ம பாவங்களை நீக்க 
வழிவகுக்கும். மேலும் செல்வமும், பொருள்களும், ச
ந்தோசங்களும் பெருகும்.
22. அன்னம், நெய், உப்பு போன்ற உணவு வகைகளை கைகளால் பரிமாறாமல் கரண்டியால் பரிமாற வேண்டும். அப்படி கைகளில் பரிமாறினால் மாமிசத்துக்கு சமம் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.
23. இரவு நேரங்களில் வீட்டைப் பெருக்கி அதில் வரும் குப்பையை வெளியே இரவில் கொட்டக் கூடாது.
24. நம் கர்மாவை மாற்றும் வல்லமை அன்ன தானத்திற்கு உண்டு. ஆகவே தானம் செய்யுங்கள்.
25. எல்லாவற்றிக்கும் மேலாக எந்த இல்லங்களில் பெண்கள் சிரித்து, மகிழ்ந்து, சண்டை இடாமல், வாக்கு வாதம் செய்யாமல் பெண்கள் கவுரப்படுத்தப்படுகிறார்களோ அந்த இல்லங்களில் மகாலட்சுமி வாசம் செய்வாள். பெண்மையைப் போற்றுவோம்.
26. சாம்பிராணி மற்றும் வாசம் மிகுந்த நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்க வேண்டும். ஈரத் துணிகளை அணிந்தும் பூஜை செய்தல் கூடாது. பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது
27. பெண்கள் தங்கம் போன்றவர்கள். தங்கமான சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது. பெண்கள் மாதவிலக்கு நேரங்களில் அவர்களின் நிழல் ஆனது சுவாமி படங்கள் மீது விழக்கூடாமல் பார்ப்பது நல்லது.
28. நமது வீட்டிற்குள் நுழைந்த உடனே, எப்போதும் எந்த இடத்திலும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால், செல்வம் சேரத் துவங்கி 
விடும். எங்கோ போக வேண்டிய பணம், நமது இல்லத்தை நோக்கி தானாகவே 
வரும். அதே சமயம் அனாவசியமான துன்ப விரயச் 
செலவுகளும் குறையும்
29. ஒருபோதும் இருட்டிய பின்னர், தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது. தவிர்த்தல் நல்லது. அப்படி சாப்பிட்டால், எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், அவன் வறுமைக்குள் விழுந்து விட அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள்.
3௦. தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு, ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும். அப்படி ஜபிக்கும்போது சந்தன 
பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.
 இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால், பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும். ஓராண்டு வரை வழிபட்டு வந்தால், நமது வருமானம் 
நான்கு மடங்கு அதிகரிக்கும்; பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்; ஓராண்டுக்கு மேலாகஸ்ரீசொர்ண ஆகர்ஷண 
பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஒவ்வொரு 
ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு 
எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும். ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும். 
தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள். இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி இல்லம் வருவாள்.
மைண்ட்ஃபுல்னஸ் தியானம்:
மைண்ட்ஃபுல்னஸ் தியானம் என்பது தற்போதைய தருணத்தில் நியாயமற்ற கவனத்தைச் செலுத்துவதை உள்ளடக்கிய ஒரு பயிற்சியாகும். இது பெண்களுக்கு அதிக சுய விழிப்புணர்வை வளர்க்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், உள் அமைதியை மேம்படுத்தவும் உதவும்.
யோகா:
யோகா என்பது உடல் மற்றும் ஆன்மீக பயிற்சியாகும், இது பெண்களுக்கு நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் மன தெளிவை மேம்படுத்துவதன் மூலம் பயனளிக்கும். இது சுய பிரதிபலிப்பு மற்றும் ஒருவரின் உள் சுயத்துடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
சுய-கவனிப்பு:
ஆன்மீகம் என்பது ஒருவரின் உடல், உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்வை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் சுய-கவனிப்பு நடைமுறைகளை உள்ளடக்கியது. இதழியல், இயற்கையில் நேரத்தைச் செலவிடுதல் அல்லது ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுதல் போன்ற நடைமுறைகள் இதில் அடங்கும்.
பெண் ஆன்மீகத்தை ஆராய்தல்:
சில பெண்கள் பெண்மையின் ஆன்மீகத்தை ஆராய்வதில் அதிகாரம் மற்றும் ஆன்மீக தொடர்பைக் காண்கிறார்கள். இது தெய்வத்தின் தொன்மங்களுடன் இணைவது, பெண்களின் வட்டங்களை ஆராய்வது 
மற்றும் தெய்வீக பெண்மையை தங்களுக்குள் தழுவுவது 
ஆகியவை அடங்கும்.
பிரார்த்தனை மற்றும் சடங்குகள்:
பிரார்த்தனை மற்றும் சடங்குகளில் ஈடுபடுவது பெண்கள் தங்கள் ஆன்மீகத்துடன் இணைவதற்கு ஒரு அர்த்தமுள்ள வழியாகும். இந்த நடைமுறைகள் தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படலாம்.
சமூகம் மற்றும் ஆதரவு:
பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆன்மீக அல்லது ஆதரவுக் குழுக்களில் சேர்வதன் மூலம் ஆன்மீக விஷயங்களைப் பற்றி விவாதிப்பதற்குச் சொந்தமான உணர்வையும் பாதுகாப்பான இடத்தையும் வழங்க முடியும்.
படித்தல் மற்றும் கற்றல்:
புத்தகங்கள், மற்றும் ஆன்லைன் ஆதாரங்கள் மூலம் பல பெண்கள் ஆன்மீக வழிகாட்டுதலையும் உத்வேகத்தையும் பெறுகிறார்கள். பல்வேறு ஆன்மீக தத்துவங்கள் மற்றும் போதனைகளை ஆராய்வது ஒரு நிறைவான 
பயணமாக இருக்கும்.
வழிகாட்டுதல்:
ஆன்மீகத் தலைவர்கள் அல்லது ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதல் மற்றும் வழிகாட்டுதலைத் தேடுவது மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குவதோடு, பெண்கள் தங்கள் ஆன்மீக புரிதலை ஆழப்படுத்தவும் உதவும்.
சேவை மற்றும் திரும்பக் கொடுப்பது:
சேவைச் செயல்களில் ஈடுபடுவதும், சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதும் பெண்களுக்கான ஆன்மீகப் பயிற்சியாக இருக்கலாம், ஏனெனில் இது இணைப்பு மற்றும் நோக்கத்தின் உணர்வை வளர்க்கிறது.
மனம்-உடல் இணைப்பு:
மனம், உடல் மற்றும் ஆவி ஆகியவற்றின் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை அங்கீகரிப்பது ஆன்மீகத்தின் இன்றியமையாத அம்சமாகும். முழுமையான சிகிச்சைமுறை, ஆற்றல் வேலை மற்றும் உடல் விழிப்புணர்வு போன்ற நடைமுறைகளை ஆராயலாம்.
ஆன்மீகம் என்பது ஒரு தனிப்பட்ட பயணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் உங்களுடன் தனிப்பட்ட முறையில் என்ன எதிரொலிக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது அவசியம். ஆன்மீகத்திற்கு ஒரே 
மாதிரியான அணுகுமுறை எதுவும் இல்லை, மேலும் 
உங்கள் நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகளுடன் ஒத்துப்போகும் அம்சங்களை ஆராய்ந்து தழுவிக்கொள்ள நீங்கள் சுதந்திரமாக
 இருக்கிறீர்கள்.
நிச்சயமாக, பெண்களுக்கு ஆர்வமுள்ள ஆன்மீக தலைப்புகள் மற்றும் நடைமுறைகள் இங்கே உள்ளன:
சக்ரா குணப்படுத்துதல்:
சக்ராக்கள் உடலுக்குள் ஆற்றல் மையங்கள், மேலும் சில பெண்கள் தியானம், காட்சிப்படுத்தல் அல்லது ஆற்றல் வேலை போன்ற சக்ரா குணப்படுத்தும் நடைமுறைகளுடன் பணிபுரிவதன் மூலம் ஆன்மீக மற்றும் உணர்ச்சி சமநிலையைக் காணலாம்.
கிரிஸ்டல் ஹீலிங்:
படிகங்கள் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, மேலும் பெண்கள் தங்கள் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்த, ஆற்றலை சமநிலைப்படுத்த அல்லது சுய-கவனிப்பை மேம்படுத்த குறிப்பிட்ட படிகங்களுடன் வேலை செய்ய தேர்வு செய்யலாம்.
ஜோதிடம்:
ஜோதிடம் ஆளுமைப் பண்புகள், வாழ்க்கை முறைகள் மற்றும் ஆன்மீக வளர்ச்சி பற்றிய நுண்ணறிவுகளை வழங்க முடியும். சில பெண்கள் தங்கள் ஜோதிட ஜாதகங்கள் மற்றும் ஜாதகங்களை சுய கண்டுபிடிப்புக்கான வழிமுறையாக ஆராய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
கனவுப் பணி:
கனவுகள் மற்றும் அவற்றின் அடையாளங்களில் கவனம் செலுத்துவது பெண்கள் தங்கள் ஆழ் மனதில் தட்டவும் மற்றும் அவர்களின் உள் உலகத்தைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறவும் ஒரு வழியாகும்.
கவனமுள்ள பெற்றோர்:
தாய்மார்களுக்கு, பெற்றோருக்குரிய மனப்பான்மை மற்றும் ஆன்மீகத்தைப் பயிற்சி செய்வது, அவர்களின் குழந்தைகளில் ஆன்மீக 
விழுமியங்களை விதைப்பதற்கும், தாய்மார்களாக அவர்கள் வகிக்கும் பாத்திரத்துடன் அவர்களின் சொந்த தொடர்பை ஆழப்படுத்துவதற்கும் ஒரு வழியாகும்.
உறுதிமொழிகள் மற்றும் உறுதியான பிரார்த்தனை:
நேர்மறை உறுதிமொழிகள் மற்றும் உறுதியான பிரார்த்தனைகளைப் பயன்படுத்துவது பெண்கள் தங்கள் நோக்கங்களில் கவனம் செலுத்தவும், நேர்மறையான மனநிலையை வளர்க்கவும் உதவும்.
சகோதரி வட்டங்கள்:
பெண்கள் தங்கள் ஆன்மீக அனுபவங்கள், கதைகள் மற்றும் ஞானத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு பெண்கள் வட்டங்கள் அல்லது சகோதரி வட்டங்கள் ஆதரவான மற்றும் வளர்ப்பு சூழலை வழங்குகின்றன.
உண்ணாவிரதம் மற்றும் சுத்தப்படுத்துதல்:
சில பெண்கள் உடலையும் மனதையும் சுத்தப்படுத்துவதற்கும் ஆன்மீகத் தெளிவை மேம்படுத்துவதற்கும் உண்ணாவிரதம் அல்லது சுத்திகரிப்பு நடைமுறைகளை இணைத்துக்கொள்வார்கள்.என்பதாகும் 
. நன்றி. வணக்கம்.







 

Powered by Blogger.