அன்னையின் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்

கல்வியில் நினைவாற்றல் பெருக*
வெள்ளை தாமரைப் பூவில் இருப்பாள்..
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்..
கொள்ளையின்பம் குலவு 
கவிதை
கூறும் பாவலர் உள்ளத் திருப்பாள்..
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்..
கள்ள மற்ற முனிவர்கள்
 கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்..
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்..
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்..
கீதம் பாடும் குயிலின்
 குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்..
கோதகன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்..
இன்ப மேவடி வாகிடப் 
பெற்றாள்
கல்வி கேள்வி ஞானத்தை அளிக்கும் கலைவாணியாம் அன்னை சரஸ்வதி தேவியைக் கொண்டாடும் அற்புதத் திருநாள். நம் உயர்வுக்கு அன்றாடம் பயன்படுத்தும் ஆயுதம் மற்றும் இயந்திரம் அவற்றை இறைபொருளாக பாவித்து வணங்கும் உன்னதத்திருநாள். இந்த நன்னாளில் மாணவர்கள் கல்வியில் மேம்படவும், அனைத்து தரப்பினர்களுக்கும் அவர்களது தொழில் சிறக்கவும் வேண்டி இறைவனை 
வேண்டுகின்றோம்.
நம்  இணைய உறவுகள்  அன்பு நண்பர்கள் அனைவருக்கும், அன்பான  
இனிய சரஸ்வதி, மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.