சிறுவனொருவனின் கட்டை விரலை கடித்து துப்பிய குதிரை: நாவல் பழம் ஊட்டியதால் வந்த விபரீதம்

புதன்கிழமை, 11 யூலை 2012வீட்டில் வளரும் குதிரைக்கு நாவல் பழம் ஊட்டிய சிறுவனின் கட்டைவிரலை அக்குதிரை கடித்து துண்டாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் புறநகர் பகுதியான புளியந்தோப்பு, வி.கே.காலனியை சேர்ந்த குமாரியின் (28) மகன் பிரவின்.
5 வயது சிறுவனான இவன், நேற்று முன்தினம் மாலை அம்மாவிடம் 10 ரூபாய் வாங்கிச்சென்று, நாவல் பழம் வாங்கியுள்ளான்.
இதை தனது பக்கத்து வீட்டில் வளரும் குதிரைக்கு ஊட்டினான். குதிரை முதலில் 2 பழம் சாப்பிட்டது. 3வது பழத்தை ஊட்டியபோது அவனது விரலை குதிரை கடித்து துண்டாக்கியது.
இதனால் மிகவும் படுகாயமடைந்த அச்சிறுவனை ஸ்டான்லி அரசு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இருப்பினும் அவனது கட்டை விரலை மீண்டும் இணைக்க முடியாதென வைத்தியர்கள் தெரிவித்துவிட்டனர்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.