பழநியில் திருக்கல்யாண கோலாகலம் தைப்பூச விழா:!

 தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி பெரிய நாயகியம் மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். விநாயகர் பூஜையுடன், கலசங்கள் வைத்து, சிறப்பு ஹோமம் நடந்தது. இரவு 7.25மணிக்கு, மாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதலுடன் திருக்கல்யாணம் நடந்தது. இரவு 8.30 மணிக்கு வெள்ளிரதத்தில், சுவாமி திரு உலா வந்தார். பெரியநாயகியம்மன் கோயில், ரதவீதிகளில் இன்று மாலை 4.45 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்: தைப்பூச விழா ஜன., 11 ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஜன., 20 வரை நடக்கிறது. இதற்காக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரவசதிகள் பெயரளவில் மட்டுமே செய்துதரப்பட்டுள்ளன. சரவணப்பொய்கையில் இலவசமாக குளிக்குமிடத்தில், கட்டணம் வசூலிக்கின்றனர். முடிகாணிக்கை செலுத்துமிடத்திலும் அதிக வசூல் செய்கின்றனர். இடும்பன் குளத்தில் போதிய தண்ணீர் வசதி

இல்லாததால், குளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மலைக்கோயில் கிரிவீதியின் இருபுறங்களிலும், தள்ளுவண்டி, பழக்கடைகள் வைத்துள்ளதால் பக்தர்கள் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். வாகனங்கள் நிறுத்துமிடத்தில் குப்பை குவிந்துகிடக்கிறது. "வின்ஞ், "ரோப் கார் ஸ்டேஷன் களில், 4 மணி முதல் 5 மணிநேரம் வரை காத்திருந்து, தரிசனம் செய்யும் நிலை உள்ளது.
 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.