வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
கொக்கோஸ்தீவிலிருந்து 200 மீற்றல் தூரத்தில் இலங்கையிலிருந்து சென்ற 67 பயணிகளைக் கொண்ட படகு நேற்றுக் காலை 8 மணியளவில் கற்பாறைகளுக்கிடையில் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அகதிப் படகிலிருந்து நான்கு ஆண்கள் கொக்கோஸ் தீவை நீந்திக் கரையேறியுள்ளனர். இவ்வாறு கரையை அடைந்தவர்களைப் பார்த்த கொக்கோஸ் தீவைச் சேர்ந்த ஜக் ஓ டோனல்ட் என்பவர், அவர்களுக்கு உணவு கொடுத்து உதவியுள்ளார்.
கரையைச் சேர்ந்த நால்வரும், கொக்கோஸ் வாசியிடம், படகு பாறையில் சிக்கிக் கொண்டமை பற்றியும் அவர்களைக் காப்பாற்றுமாறும் தெரிவித்துள்ளனர். ஜக் ஓ டோனல்ட் , பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, ஏனைய புகலிடக் கொரிக்கையாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் அனைவரும் சுகாதாரம் மற்றும் உடல்நிலைகளை அறிவதற்காக கொக்கோஸ் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அகதிப் படகிலிருந்து நான்கு ஆண்கள் கொக்கோஸ் தீவை நீந்திக் கரையேறியுள்ளனர். இவ்வாறு கரையை அடைந்தவர்களைப் பார்த்த கொக்கோஸ் தீவைச் சேர்ந்த ஜக் ஓ டோனல்ட் என்பவர், அவர்களுக்கு உணவு கொடுத்து உதவியுள்ளார்.
கரையைச் சேர்ந்த நால்வரும், கொக்கோஸ் வாசியிடம், படகு பாறையில் சிக்கிக் கொண்டமை பற்றியும் அவர்களைக் காப்பாற்றுமாறும் தெரிவித்துள்ளனர். ஜக் ஓ டோனல்ட் , பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, ஏனைய புகலிடக் கொரிக்கையாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் அனைவரும் சுகாதாரம் மற்றும் உடல்நிலைகளை அறிவதற்காக கொக்கோஸ் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen