08.08.2012.
இவ்வாறாக சுதந்திரத்தை பறிக்கும் செயற்பாடுகள் தொடருமானால் இன ரீதியான போரை முன்னெடுத்த இந்த அரசு இன்று மத ரீதியான போரை முன்னெடுக்கின்றது ௭ன்ற குற்றச்சாட்டை ஐ.நா. விலும் சர்வதேச மத சுதந்திர பாதுகாப்பு அமைப்புக்களிடமும் குறிப்பாக இந்தியாவிலுள்ள இந்து மத அமைப்புக்களிடமும் முறையிட வேண்டி ஏற்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
80 வருட பழைமையான கிழக்கு மாகாண பாணமை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பிள்ளையார் சிலையானது காவி உடையணிந்த கோஷ்டியினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.
இச் செயற்பாடுகள் இனவாத மற்றும் மதவாத கொள்கைகள் தரும் தைரியத்தால்தான் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டில் பயங்கரவாதத்தை அழித்ததை போல் காவியுடை தரித்தோரின் அடாவடித்தனத்தையும் ஜனாதிபதி தடுத்து நிறுத்த முன்வர வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் இந்த அரசாங்கம் தான் காவியுடை பயங்கரவாதத்தை ஊட்டி வளர்க்கிறது. நாட்டின் பல பாகங்களிலும் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதஸ்தலங்களுக்கு ௭திராக நடைபெறும் ஆக்கிரமிப்புக்கள், தாக்குதல்கள் மற்றும் இத்தகைய கடத்தல்கள் போன்றன சிங்கள பௌத்தத்தின் பேரிலேயே நடத்தப்படுகின்றன.
உண்மையில் சிங்கள பௌத்தர்கள் இதை நினைத்து வெட்கப்படுகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் தமிழர்களின் இன, மத அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.
இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் தமிழ் பேசும் மக்கள் படும் பாடு அரசாங்கத்தின் உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் சகல தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் தெரிகிறது.
இந்த அரசாங்கத்தின் அஸ்திவாரமே காவியுடை அரசியல்தான்.
௭னவே, இந்த அரசாங்கத்திற்கு சரி ௭து பிழை ௭து ௭ன்பது தொடர்பில் பாடம் புகட்டும் வரைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
80 வருட பழைமையான கிழக்கு மாகாண பாணமை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பிள்ளையார் சிலையானது காவி உடையணிந்த கோஷ்டியினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.
இச் செயற்பாடுகள் இனவாத மற்றும் மதவாத கொள்கைகள் தரும் தைரியத்தால்தான் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டில் பயங்கரவாதத்தை அழித்ததை போல் காவியுடை தரித்தோரின் அடாவடித்தனத்தையும் ஜனாதிபதி தடுத்து நிறுத்த முன்வர வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் இந்த அரசாங்கம் தான் காவியுடை பயங்கரவாதத்தை ஊட்டி வளர்க்கிறது. நாட்டின் பல பாகங்களிலும் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதஸ்தலங்களுக்கு ௭திராக நடைபெறும் ஆக்கிரமிப்புக்கள், தாக்குதல்கள் மற்றும் இத்தகைய கடத்தல்கள் போன்றன சிங்கள பௌத்தத்தின் பேரிலேயே நடத்தப்படுகின்றன.
உண்மையில் சிங்கள பௌத்தர்கள் இதை நினைத்து வெட்கப்படுகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் தமிழர்களின் இன, மத அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.
இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் தமிழ் பேசும் மக்கள் படும் பாடு அரசாங்கத்தின் உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் சகல தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் தெரிகிறது.
இந்த அரசாங்கத்தின் அஸ்திவாரமே காவியுடை அரசியல்தான்.
௭னவே, இந்த அரசாங்கத்திற்கு சரி ௭து பிழை ௭து ௭ன்பது தொடர்பில் பாடம் புகட்டும் வரைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen