வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah. |
இந்த
உலகில் எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என்று ஆண்களை விட பெண்கள் தான் அதிகம்
ஆசைப்படுவார்கள்.
அதிலும் பெண்கள் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பர். அவ்வாறு ஆசைப்படும்
பெண்களுள் பலர் கெமிக்கல் கலந்த அழகுச் சாதனப் பொருட்களை பயன்படுத்த விரும்புவுதை
விட, வீட்லேயே எளிமையாக எவ்வாறு நடந்தால் அழகாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொண்டு,
அதற்கேற்றாற் போல் நடக்கவே பெரிதும் விரும்புவர். ஆகவே இப்போது அவர்களுக்காக வீட்டில் எதை செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சில ஈஸியான டிப்ஸ்களை அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 1. இரவில் தூங்கும் போது சருமத்தில் ஒரு சில செயல்களான புது சரும செல்கள் உருவாதல், செல்கள் புதுபித்தல் போன்றவை நடைபெறும். ஆகவே அப்போது சருமத்திற்கு மேலும் அழகை கூட்ட வீட்டிலேயே தயாரிக்கும் ஒரு சில கிரீம்களை இரவில் தடவி படுக்க வேண்டும். இதனால் அந்த அழகுப் பொருளில் இருக்கும் ஆன்டி-ஏஜிங் பொருள், இரவில் அந்த செயல்களின் போது, சருமத்திற்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் புதிய செல்கள் உருவாதற்கு உதவியாக இருக்கும். இதனால் முகத்தில் சுருக்கங்கள் வருவதை தவிர்ப்பதோடு முகமும் பொலிவோடு அழகாக இருக்கும். 2. சிட்ரிக் ஆசிட் மற்றும் கிளைகோலிக் ஆசிட் சருமத்திற்கு ஏற்ற மிகவும் சிறந்த சருமத்தை அழகுப்படுத்த உதவும் பொருட்கள். எப்படினெனில் இவை சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு, புது செல்களின் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கின்றது. அதிலும் வீட்டில் வைட்டமின் சி நிறைந்திருக்கும் அழகுப் பொருட்களை பயன்படுத்தினால், சருமம் மென்மை மற்றும் புத்துணர்ச்சி அடைவதோடு, கொலாஜென் உற்பத்தியையும் அதிகரிக்கும். ஆகவே இத்தகைய சத்துக்கள் நிறைந்த பொருட்களை பயன்படுத்தினாலேயே சருமம் அழகாக மின்னும். 3. ரெட்னாலும் ஒரு சிறந்த ஆன்டி-ஏஜிங் பொருள் தான். அதனால் ரேடிக்கல்களின் பாதிப்பு குறைகிறது. அதுமட்டுமல்லாமல், கொலாஜெனை ஊக்குவித்து ஒரு இளமையான தோற்றத்தை தருகிறது. மேலும் கெராட்டீன் கூட சருமடத்திற்கு மிகவும் சிறந்தது. இது சருமத்தில் சுருக்கத்தை வராமல் தடுப்பதோடு, சருமத்தில் புண்கள் மற்றும் அலர்ஜி ஏற்படாமல் தடுக்கிறது. 4. இரவு நேரத்தில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். இதனால் விரைவில் முதுமை தோற்றம் வருவதை தடுக்கலாம். அதிலும் பெர்ரிஸ், மாதுளை, கிரீன் டீ, நட்ஸ், பீன்ஸ், தானிய வகைகள் மற்றும் மற்ற பயறு வகைகள் போன்றவற்றை சாப்பிட்டால், உடல் மிகவும் அழகாக சிக்கென்று இருப்பதோடு, நீண்ட நாட்கள் இளமையோடு இருக்கலாம். 5. வீட்டில் செய்யப்படும் ஃபேஷியலுக்கு, வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதோடு, வெதுவெதுப்பான பாலைப் பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். ஏனெனில் பாலில் இருக்கும் லாக்டிக் ஆசிட் சருமத் துளைகளில் இருக்கும் அழுக்குகளை எளிதில் நீக்குவதோடு சருமத்தை சுத்தமாகவும், ஈரப்பதமிக்கதாகவும் வைக்கிறது |
அழகான சருமத்திற்கு சில டிப்ஸ்
Tags :
சுகாதார செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen