யாழ்ப்பாண மாம்பழ உற்பத்தியினை ஊக்குவிக்க நடவடிக்கை

25.09.2012.By.Lovi.யாழ்ப்பாணத்தில் மாம்பழ உற்பத்தியினை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென சுமார் ஐந்தாயிரம் மாங்கண்றுகள் நடுகை செய்யப்படவுள்ளதுடன் இவற்றின் ஆரம்ப வளர்ச்சிக்குத் தேவையான உரம் மற்றும் இதர ஊட்டங்களிற்கென எட்டுப் புள்ளி நான்கு மில்லியன் ரூபாவினை உலக விவசாய ஸ்தாபனம் (WAO) ஒதுக்கியுள்ளது. மேலும், அறுவடையாகும் மாம்பழங்களை உடனுக்குடன் சந்தைப்படுத்தவென சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் விசேட விற்பனை நிலையம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தற்போது 72 ஆயிரம் மாமரங்கள் உள்ளதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அத்துடன் யாழ்ப்பாண மாம் பழத்திற்கு உள்நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் நல்ல கேள்வி நிலவுகின்றது. ஆயினும் கூட யாழ்ப்பாணத்தில் இன்றும் தொடரும் சந்தைப்படுத்தல் குறைபாடுகளினால் மாம்பழ உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வமின்றி காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.