உலக நன்மை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை!

 
டிசம்பர் 22,2012வேண்டியும், ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் திருக்கூட்ட சுவாமிகளின் கூட்டு பிரார்த்தனை, ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் நடந்தது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், நவராத்திரி விழாவை முடித்து வந்துள்ள, திருக்கூட்ட சுவாமிகள் மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றி உள்ள பல்வேறு ஊர்களுக்கு 108 நாட்கள் யாத்திரை செல்வார். உலக நன்மை வேண்டியும், ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார். மாவூற்று, மகாராஜபுரம், மாத்தூர், சுந்தரபாண்டியம், அகத்தாபட்டி, புதுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சத்திரப்பட்டி, சம்சிகாபுரம், புனல்வேலி, டி.சுப்புலாபுரம் சென்ற சுவாமிகள் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் மூன்று நாட்கள் தங்கினார். உலக நன்மைக்கும், நோயில்லா வாழ்வுக்கும், லட்சுமி பூஜை, மகேஸ்வர பூஜை, சுமங்கலி பூஜைகள் நடத்தினார். கடந்த 198 ஆண்டுகளாக இவ்வாறான திருக்கூட்ட சுவாமிகளின் பிரார்த்தனை நடப்பதாகவும், இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 108 நாட்கள் யாத்திரை முடித்து செல்லும் சுவாமிகள் மீண்டும் சுந்தரமகாலிங்கத்தில் உள்ள காளிமுத்து சுவாமிகள் ஆசிரமத்தில் நிறைவு செய்கிறார்.
சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் தங்கி இருந்த சுவாமிகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பிலும், ஊர் பொதுமக்களும் வரவேற்று உபசரிப்பு செய்தனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.