இன்று விசேட பூசைகள்! நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இன்று காலை விசேட பூசைகள் நடைபெற்றது. அங்கு பெருந்தொகையான பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இயற்கையாக கழனிகளுக்கு மத்தியில் தென்னஞ்சோலைக்குள் பாரிய ஆலமரநிழலில் பாம்புப் புற்றுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இல்லாலயத்திலுள்ள புற்றொன்றில் திடீரென அண்மையில் சிவலிங்கமொன்று தோன்றியதையடுத்து பக்த வெள்ளம் அலைமோதத் தொடங்கியது.
நம்பும் பக்தர்களுக்கு உடனுக்குடன் அருள் புரிவதால் பக்தர்களின் வருகை அதிகரிப்பதோடு நிறைய பொங்கலும் அன்னதானமும் இடம்பெற்று வருகிறது. இன்றும் பெருந்தொகையானோர் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen