இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்..

ponkal0

அனைத்து அன்பு உறவுகட்க்கு எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் கூற்றுக்கிணங்க தமிழர் ஆண்டின் தொடக்கம் எனப்படும் தை மாதம் முதல் நாளிலே தமிழர்களினதும் உழவர்களினதும் திருநாளாம் தைப் பொங்கல் தினமாம் இன்று நமது இலங்கைத் திருநாட்டிலும்இ புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற தமிழர்கள் அனைவரதும் இல்லங்களில் பொங்கல் பொங்க உள்ளங்களில் இன்பம் பொங்க வாழ்த்துகின்றேன்.. அன்றியும்இ சொந்த ஊரிலே சொந்த மண்ணிலேஇ சொந்த வீட்டின் முற்றத்திலே பொங்கலோ பொங்கல் எனப் பொங்கி மகிழ்ந்திட ஏக்கமுடன் ஏங்கி நிற்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் இன்பமும் நிம்மதியும் சாந்தியும் சமாதானமும் அன்பும் அறமும் பொங்கி வழிந்திட தேடுதல்கள் யாவும் கிடைத்திட தேவைகள் யாவும் நிறைந்திட எமது மண்ணிலே வாழையடி வாழையாக தொடர்ந்திடும் எம் தமிழர் தம் வரலாற்றின் வளங்களும் கலாசாரம் மற்றும் பண்பாடு கல்வியின் வளர்ச்சியும் உழவுத் தொழிலின்

மேன்மைச் சிறப்பும் மீண்டும் பொங்கி வழிந்தோட ஒளியும் சுபீட்சமும் மலர்ந்திட சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி பொங்கல் பொங்கி மகிழ்ந்திட நிச்சயமாக தை பிறக்கும் போது வாசல்கள் திறக்கப்பட்டு வழிகளும் பிறக்குமென்ற நம்பிக்கையோடு இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களைக் கூறி நிற்கின்றேன்..


 
 
 


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.