***கலைமகளே! கருணைபுரிவாய்***

சரஸ்வதி ஆன்மிக சிந்தனைகள்
* தாமரை மலரில் வீற்றிருக்கும் கலைமகளே! பளிங்கு போன்ற வெள்ளை நிறம் கொண்டவளே! உன்னையே அடைக்கலம் என சரணடைந்து விட்டேன். கருணை செய்வாயம்மா! 
* ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் உலகிற்கு அளிப்பவளே! என் மனதில் எப்போதும் வீற்றிருந்து அருள்புரிவாயாக.
* வேதம் நான்கிற்கும் ஆதாரமாகத் திகழ்பவளே! குளிர்ச்சி பொருந்திய முத்துமாலையை அணிந்திருப்பவளே! கையில் சுவடி ஏந்தி இருப்பவளே! மயில் போன்ற சாயல் கொண்டவளே! அன்ன வாகனத்தில் அமர்ந்தவளே! எமக்கு அருளை வாரி வழங்குவாயாக.
* மெல்லிய பூங்கொடியாக விளங்குபவளே! சகலகலாவல்லியே! கலைவாணியே! சந்திரன் போல பிரகாசம் கொண்டவளே! ஒப்பற்றவளே! உன் அருளால் உலகுயிர்கள் நல்வழியில் வாழட்டும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.