யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத்திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத்திருவிழா  -09.06.2018- சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு 
காலை விசேட அபிஷேக 
பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே ஒளிவீசிக் கொண்டிருக்கும் வேற்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் செய்தனர்.
விசேட அம்சமாக இன்று மாலை 4.45 மணிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று ஆறுமுகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் இடம்பெற்றது.
பேரழகுக்கோலத்தில் ஆறுமுகப்பெருமான் 
மாப்பிள்ளைக் கோலத்தில் நடுநாயகமாக வீற்றிருக்க அருட்சக்திகளான வள்ளியும் தெய்வானையும் இருபக்கமும் அருட்சக்திகளாக காட்சி தர அந்தண சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்த திருக்கல்யாண காட்சியை என்னவென்று
 வர்ணிப்பது?
திருக்கல்யாண கோலாகலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராக எம்பெருமான் உள்வீதி, வெளிவீதி வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.