அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

     ஆடி அமாவாசை தினத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற   கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.இன்று (புதன்கிழமை) காலை 
தம்ப பூஜை, மூலமூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்று திருப்பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு வசந்த மண்
டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.அதனையடுத்து சுவாமி சிவபார்வதி, விநாயகர் ஆகியோர் எருது வாகனத்தில் எழுந்தருளி பக்தர்கள் புடைசூழ மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணிக்கு ஊர்வலமாக சென்றனர்.ஹனுமனின் வால் நனைத்த
 இடமாகவும் இராமபிரானால் தோற்றுவிக்கப்பட்ட தீர்த்தக்கேணியாகவும் பிதிர்க்கடன் தீர்க்கும் இடமாகவும் உள்ள மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் விசேட பூஜைகள் நடை
பெற்றன.அதனைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ தீர்த்தக்கேணியில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசவுந்தரராஜா குருக்கள் தலைமையில் $தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.  இந்த தீர்த்தோற்சவத்தில் உயிரிழந்த உறவுகளுக்காக பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வுகளும் 
தீர்த்தக்கரையோரங்களில் நடைபெற்றன. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியன ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்ததுடன், நேற்று ரதோற்சவம் இடம்பெற்றிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.