எம் பெருமான் முருகரின் அறுபடை வீடு என்பது என்ன

போகரே குருவிஷ்ணு போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
முருகரின் அறுபடை வீடு என்பது என்ன?
அடங்கி இருக்குமிடம் . அடங்கி இருக்கும் ஸ்தானங்கலே இயற்கை விளக்கம் தங்குமிடங்களாகும் , இவற்றிற்கு ஊர் ஆறு ஆவது ஏன்?
ஏரகமென்பது அழகு பொருந்திய 
உள்ளமென்னும் இடம் . 
திருவாவினன்குடி என்பது திரு - ஆ - இன்ன - குடி . திரு - இலக்குமியாகிய சந்தோஷமும் , ஆ - பசுவாகிய விளக்கமென்னும் சீவனும் , இனன் - சூரியனாகிய புத்தியும் , ஒன்று கூடி விளங்கும் ஆன்ம 
அறிவின் சுத்த காரிய இடம் .
 பழமுதிர்சோலை என்பது , இந்திரிய கரண சீவ முதலிய அனுபவப்பழங்கலாகிய பிரயோஜன இன்பங்கள் நீங்கிக் குறைவற்ற 
அறிவாய் விளங்கும் இடம் .
திருசீரலைவாய் / திருச்செந்தில் / செயந்திபுரம் என்பன சுத்தமனத்தின் முகத்தில் விஷயக்கடலின் அவாவாகிய அலை அடித்துக்கொண்டு இருக்கும் இடமாகிய கரை , செந்துக்களினது இருதய ஸ்தானமாகிய மனம் அக்ஞான சூரனை நிவர்த்தித்து சந்தோஷகரத்தை
 பெற்ற பதி மனத்தின் விளக்கம் .
திருப்பரங்குன்றம் என்பது அசைவிலாத ஒன்றான விளக்கத்தை உடைய விவேக உல்லாச இன்ப நிறைவு .
குன்றுதோறாடல் என்பது மலைதோறாடல் , மலை என்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு  முதற் காரணமாய் உள்ள துரிய நன்னிலை , இத்துரியம் , பரதுரியம் , சுத்த துரியம் , குருதுரியம் , சிவதுரியம் , சத்திதுரியம் முதலிய துரியமலைகள் அனுபவகாட்சியில்
அனந்தம் உண்டு .
மேற்குறிய அனுபவக்காட்சிகளுக்கு தேகத்தில் இடம் எவை ? 
கோசத்தின் அடி , தொப்புளின் கீழ் , தொப்புள் , வயற்றில் தொப்புளுக்கு மேல் , மார்புக்கு கீழ் , மார்பு நெஞ்சு ஆக ஆறு .
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.