யாழ் நல்லூரில் சிறப்பாக நடைபெற்ற மானம்பூ திருவிழா

யாழ் நல்லூரில்  விஜயதசமி நாளான.25-10-20. இன்றைய தினம், வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம்- நல்லூர் முருகன் ஆலயத்தில் மானம்பூ உற்சவம் விமர்சையாக இடம்பெற்றது.
இன்று காலை 6.45க்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று, பண்டைய காலத்தில் உபயோகிக்கப்பட்ட பழைமையான சிறிய குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருள மானம்பூ உற்சவம்
 இடம்பெற்றது.
கொரோனா நிலைமைக்கு அமைய ஆலயத்தில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் இந்த மானம்பூ உற்சவம் இடம்பெற்றது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.