செல்வம் செழிக்க உங்கள் வீட்டில்இப்படி விளக்கை ஏற்றி வந்தால் போதுமாம்

உங்கள் வீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமானால் குபேரனின் அருள் கிடைக்க வேண்டும். இதற்கு நீங்கள் குபேர தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஏனென்றால் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார்.வற்றாத செல்வத்தை நமக்கு கொடுக்கக் கூடியவர். யாருக்கெல்லாம் பணம் வேண்டும் என்றும் பணம் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ 
அவர்கள் குபேர பூஜை செய்வது நல்லதாகும். மேலும் குபேர தீபம் ஏற்றி அவரை வணங்க வேண்டும்.
எப்படி குபேரரை வழிபட வேண்டும் என்று பார்ப்போம்-குபேரரை வழிபடுமுன் குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை அன்று
 வீட்டை சுத்தம் செய்யணும்.,அன்று சாயங்கால வேளையில் வீட்டு வாசலில் பச்சரிசி மாவால் கோலமிட்டு அந்த கோலத்திற்கு செம்மண் பட்டை இட்டு அலங்கரிக்கணும்.அதன் பிறகு
 நிலைப்படிக்கு 
சந்தனம் தெளித்து, மஞ்சள், குங்குமம் இடணும்.,பின்பு கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியில் மஞ்சள் வைத்து மற்றொரு பகுதியில் குங்குமம் வைத்து நிலைப்படிக்கு
 ஒரு பக்கத்தில் மஞ்சள் தடவிய எலுமிச்சை 
பழத்தையும்,மறு பக்கத்தில் குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தையும் நிலைப்படியின் இருபுறமும் வைக்க வேண்டும்.அதன்பின் நிலைப்படியின் இரண்டு புறத்திலும் பூ வைக்க

 வேண்டும். வீட்டுவாசலில் நின்றபடி நமது இடதுபுறம் குபேர விளக்கை ஒரு மரப்பலகை அல்லது தட்டில் வைத்து கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி 
செய்ய வேண்டும்.
முதலாவது விளக்கில் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அதன் பிறகு நல்லெண்ணெய் ஊற்றி இரு திரிகளை ஒரு திரியாக்கி குபேரர் விளக்கு ஏற்ற வேண்டும். இதில் பழைய திரியோ அல்லது முதல் நாள் ஏற்றி மீதம் வந்த எண்ணெயையோ உபயோகிக்கக்கூடாது.
மேலும் தினமும் புதியதாக எலுமிச்சை பழத்தையும் வைக்க வேண்டும். இவ்வாறு ஏற்றுவதால் நமக்கு குபேரனின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.இந்த குபேர கடவுளுக்கு தீபம் ஏற்ற 
சரியான நேரம் குபேரருக்கு உகந்த நாளான
 வியாழக்கிழமை அன்று மாலை 05 மணி முதல் இரவு 08 மணி. இந்த சமயத்தில் குபேர விளக்கில் தீபம் ஏற்றி பூஜை 
செய்யணும்.இப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள சங்கடங்கள், துன்பங்கள், கடன் பிரச்சனைகள் அனைத்தும் பனி போல் விலகி நீங்கள் கோடீஸ்வரகலாமாம் .
நிலாவரை.கொம் செய்திகள் >>>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.