அட்லாண்டிக் பெருங்கடலை தனியாக கடந்த பெண் விமானிக்கு இன்று 115வது பிறந்தநாள்

25.07.2012.
உலகப் புகழ் பெற்ற அமெரிக்க பெண் விமானியான அமேலியா மேரி ஏர்ஃகாட்டினின் 115வது பிறந்த தினமான இன்று, கூகுள் இவருக்கு பிரத்யேக பக்கத்தை உருவாக்கி சிறப்பித்துள்ளது. ஏர்ஃகாட், அமெரிக்காவின் சிறப்புமிக்க பறக்கும் சிலுவை (Distinguished Flying Cross) வழங்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.
தனி விமானத்தில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்தமைக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
இவர் வான்பயணத்தில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். பறக்கும் அனுபவங்களை குறித்து கூடுதலாக விற்கப்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
பெண் விமானிகளுக்கான தொண்ணூற்று ஒன்பது என்ற அமைப்பை நிறுவுவதில் தூண்டுகோலாக இருந்தார்.
கடந்த 1935 ஆம் ஆண்டில் பர்டியூ பல்கலைக்கழகத்தில் வான்வழிப் பயணத் துறையில் வருகை விரிவுரையாளராக இருந்து பெண்கள் இத்துறையை தெரிவுசெய்ய உந்துதலாக இருந்தார். மேலும் தேசிய பெண்கள் கட்சி உறுப்பினராகவும் சம உரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவாளராகவும் இருந்தார்.
கடந்த 1937ஆம் ஆண்டு உலகைச் சுற்றிவரும் முயற்சியில், பர்டியூ நிதியளித்த லாக்யீட் மாடல் 10 எலெக்ட்ரா விமானத்தில் பறக்கையில், ஏர்ஃகாட் மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள ஹவுலாந்து தீவு அருகே மாயமானார்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.