சுவிட்சர்லாந்தில் முதன் முறையாக சுங்கவரி உயர்வு

23.09.2012.Bசுவிட்சர்லாந்தில் முதன் முறையாக 17 வருடங்களுக்கு பிறகு நெடுஞ்சாலையில் வாகனஓட்டிகளின் வாகனங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கரின் விலையை உயர்த்த நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. கண்டிப்பான முறையில் அரசாங்க குறியீடு உள்ளடக்கிய ஸ்டிக்கரினை ஒட்ட வேண்டும். இல்லையெனில் கடுமையான அபராத விதிக்கப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.
சாலை வரி மற்றும் சுங்க வரியினை உயர்த்த போவதாக சுவிட்லர்லாந்தின் போக்குவரத்து துறை அமைச்சர் டோரிஸ் லெதார்ட்(Doris Leuthard) தெரிவித்துள்ளார்.
சுங்க வரியினை குறைந்தபட்சமாக 40பிராங்கிலிருந்து(டொலர் 43) 100 பிராங்க்(107 டொலர்) வரை உயர்த்த போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சாலை போக்குவரத்தினை விரிவுபடுத்தவும் நவீனமாயமாக்கவும் 275 மில்லியன் பிராங்க் அதாவது 294 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.