டிசம்பர் 20,2012.உடன்குடி: வனத்திருப்பதியில் வைகுண்ட ஏகதாசியை முன்னிட்டு வரும் டிச 24ம் தேதி மாலை 6 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தென்திருப்பதி என அழைக்கப்படும் வனதிருப்பதி புன்னை ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், ஸ்ரீஅதிநாரயணர் ஸ்ரீசிவணணைந்த பெருமாள் கோயிலில் வரும் 24ந் தேதி வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடைதிறப்பு, அதனை தொடர்ந்து கோபூஜையும் காலை 6 மணி முதல் அனந்தனசயன சேவையும் பகல் 1 மணிக்கு திருமஞ்சனம் மாலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதை காண தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். மாலை 6.30 மணிக்கு திருவீதி உலாவும் அதனை தொடர்ந்து சிறப்பு வாணவேடிக்கையும் நடக்கிறது. வரும் ஜன.1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பும், கோபூஜையும் தொடர்ந்து திருமஞ்சணமும் சிறப்பு அலங்காரம் நடக்கிறது. இரு தினங்களிலும் ஓட்டல் சரவணபவன் சார்பில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது. மேலும் மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வருவதால் பக்தர்களின் வசதிக்காக கோயில் அருகில் குறைந்த விலையில் உணவு வழங்கும் நிறுனவத்தை ஓட்டல் சரவணபவன் நிறுனவரும்,கோயில் கைங்கர்யாதரருமான ராஜகோபால் துவக்கி வைத்தார்
வன திருப்பதியில் வரும் 24ந் தேதி சொர்க்க வாசல் திறப்பு!
Tags :
ஆலய நிகழ்வுகள்
Related Posts :

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் த...

யாழ் கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு ...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ...

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்...

கொல்கத்தா அயோத்தி இராமர் கோவில்ஜனவர...

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபி...

சபரி மலைக்கு இலங்கையில் இருந்து செ...

யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வா...
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen