உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்!

 
டிசம்பர் 20,2012.கீழக்கரை: ராமநாதபுரம் அருகேயுள்ள உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழா நேற்று துவங்கியது. இந்த கோயிலில், குருக்கள் மங்கள முனீஸ்வரர் தலைமையில் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகபாஜனம், குரு பூஜை, நவக்கிரக பூஜை, பூமி பூஜை நடத்தப்பட்டது. யாகசாலையில் பாலிகை ஸ்தாபனம் செய்யப்பட்டு காப்பு கட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். டிச., 27ல் நடராஜர் சுவாமிக்கு சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நடக்கிறது. சிதம்பரத்தில் கொடியேற்றம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நேற்று அதிகாலை, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்து, பக்தர்களுக்கு காட்சியளித்த பின், நடராஜர் சுவாமி சிற்சபைக்கு எதிரில் உள்ள கொடி மரத்தில், உற்ஸவ கொடியான பசுக் கொடியை உற்ஸவாச்சாரியார், தில்லை நாகபூஷண தீட்சிதர் ஏற்றினார். முக்கிய விழாவான திருத்தேர், வரும், 27ம் தேதியும், ஆருத்ரா மகா தரிசனம், 28ம் தேதியும் நடக்கிறது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.