திருப்பதியில் ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தர்களைக்.

திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் வரும் பக்தர்களைக் கணக்கிட நவீன இயந்திரம் பொருத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே கோவிலில் பக்தர்களைக் கண்காணிக்க கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களை கணக்கிட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரம் பொருத்தப்படவுள்ளது.
பக்தர்களின் வருகையை அதிகாரிகள் தவறுதலாக குறிப்பிடுவதாகவும் இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாகவும் இதனை தவிர்க்கவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேவஸ்தான அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இவ்இயந்திரம் ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் வரிசை, அன்னதான பிரசாத வரிசை, முடி காணிக்கை வரிசைகளில் பொருத்தப்பட உள்ளது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.