ஆன்மிகம் என்றால் என்ன? பகுதி 2

    ஆன்மிக தேடலில் மூழ்கி முத்தெடுக்கத் துடிக்கும் எமது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உங்கள் சக பயணியான இந்த ஆன்மிக நண்பனின் வாழ்த்துக்கள் . மிகவும் வேகமாக வளர்ந்து (!) வரும் அறிவியலின் வளர்ச்சி காரணமாக இன்று பழமைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆன்மிகம்
 
 என்பது வெறுமனே கோவில்களுக்கு அல்லது ஜீவ சமாதிகளுக்கு செல்வது , பத்து ரூபாய் செலவு செய்து பலகோடி ரூபாய்க்கு அதிபதியாக வேண்டுமென இறைவனிடம் அல்லது சித்தரிடம் (சிலையிடம் !!) கோரிக்கை வைப்பது என்று மிகவும் வெளிமுகமாக , சுற்றுலா சென்று வருவதைப் போல் தான் ஆன்மிகம் உள்ளது . இன்னும் சிலரோ தாங்கள் ஆன்மிக வாதிகள் என்று உலகுக்கு அறிவிக்கும்
 
வண்ணம் புற அடையாளங்களை செய்து புகழ் மற்றும் பணம் கிடைக்க மிக நல்ல வழியாக ஆன்மிகத்தை வளர்க்கின்றனர்(!!.) தாங்கள் கோவில் கோவிலாக செல்வதையும் , அந்த கோவிலில் எனக்கு இந்த மாதிரியான அதிர்வுகள் தோன்றின, இந்த கோவிலில் எனக்கு அந்த மாதிரியான அதிர்வுகள் தோன்றின , எனக்கு இறைவனும் இறைதன்மையும் புரிபட்டு விட்டது , என்று சிலர் கூசாமல் பிறர் தம்மை புகழ வேண்டும், மரியாதை செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர் . சரி .. உண்மையான ஆன்மிகம் என்பது என்ன ...?
 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.